என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, January 13, 2010

தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!

”சாதாரண ப்ளாக் ரைட்டருக்கும் உங்களை மாதிரி எழுத்தாளருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளரெல்லாம் தனியா சொந்தமா ஒரு சைட் வெச்சுக்கணும்யா” என்று பல நாட்களாக என்னை என் ஆசிரிய நண்பர்கள் உசுப்பேற்றி வந்ததன் பலனை நீங்கள் இனிமேல் அனுபவிக்கப் போகிறீர்கள்!

www.writerlaram.com பொங்கல் ரிலீஸ்!

அப்படியானால் இந்த ப்ளாகின் எதிர்காலம்?

கண்டிப்பாக பொற்காலம் தான், கவலையே படவேண்டாம். (ரொம்பத்தான்! என்னவோ அவனவனும் இதை நினைத்து நினைத்துத் தொண்டையில் சோறு இறங்காமல் தவிக்கிறானுங்களா என்ன? என்ன ஒரு பில்டப்டா சாமி, எனக்கே தாங்கலை!)

ப்ளாகில் எழுத வேண்டிய விஷயங்கள், www.writerlaram.com ல் எழுத வேண்டிய சமாச்சாரங்கள் என்று தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு ரம்பம் போட வேண்டியது தான்!

‘கால் காசுன்னாலும் கவருமெண்டு காசு’ மாதிரி, ‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதித் தாத்தா பாடிய மாதிரி, இனிமேல் என் சொந்த சைட், www.writerlaram.com !

அடிக்கடி www.writerlaram.com வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!


No comments: