அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் செனட்டர் பாரக் ஒபாமா பெருத்த வெற்றி அடைந்திருக்கிறார் என்பதை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நாட்டை ஓட்டாண்டியாக்கி, உருப்படாமல் செய்து பல விதங்களிலும் உலக சமாதானத்தின் பொது விரோதியாக கொடுங்கோல் ஆட்சி செய்த புஷ் அரசாங்கம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
"இது நடக்குமா?" என்கிற பலத்த கேள்விக்குறியுடன் தான் நான் இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்தேன்.
"இது நடக்க வேண்டுமே" என்று வேதனைப்பட்டேன்.
'தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்'
என்பது உண்மையாகி விட்டது.
நல்லது, நடந்தே விட்டது.
இனிமேல் அமெரிக்கர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம்!
Tuesday, November 04, 2008
Subscribe to:
Posts (Atom)