என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, March 03, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...2

மார்ச் 2ம் தேதி, ஞாயிறன்று அமரர் சுஜாதாவின் இரங்கல் கூட்டம் சென்னை நாரத கான சபாவில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

3.30க்கு கூட்டம் என்று சொல்லியிருந்தார்கள். வெளியூர் போகிற ப்ரொக்ராமை ஒத்திப் போட்டு விட்டு, 3.20க்கே கனத்த இதயத்துடன் அரங்கில் நுழைந்தேன்.

சென்ற முறை இந்த அரங்கத்தில் நான் நுழைந்தது சுஜாதாவுடன் தான். யாருடைய கச்சேரி என்று சரியாக நினைவில்லை. சஞ்சய் சுப்ரமணியன் என்று நினைக்கிறேன். அப்போதே அவர் தள்ளாட்டமாக இருந்ததால், கைத்தாங்கலாகத்தான் அழைத்துச் சென்றேன். அதற்கு முன், அவர் வழக்கமாக மாலை வேளைகளில் செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் லைட்டான டிஃபனை முடித்திருந்தோம்.

நுழைவு வாயிலில் உயிர்மை மனுஷ்ய புத்திரன், சுஜாதாவின் அழகான ப்ளாக் அண்ட் ஒயிட் கட்-அவுட்களை வைத்திருந்தார். உயிர்மையின் உயிராக விளங்கியவர் சுஜாதா தான். ம. புத்திரனின் முகத்தில் சோகம் கப்பிக் கிடந்ததில் வியப்பில்லை.

4.30 வரை கூட்டம் ஆரம்பிக்கப் போவதில்லை என்பது தெரியாமல் சோம்பலாக உலாத்திக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராமல் இணைய நண்பர்கள் இரா. முருகன், ஜெர்மனி கண்ணன் போன்றோரைச் சந்தித்தேன். அதுவும் மத்தளராயருக்கு அடுத்த சீட்டிலேயே நான் அமர்ந்திருந்தும் அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது வேடிக்கையாக இருந்தது. கிரேஸி மோகன், "என்னங்க, நம்ம எல்லே ராமைத் தெரியலியா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, இராமுரு பேய் முழி முழித்துப் பின் ஆனந்தக் கூத்தாடாத குறையாக என் கையைப் பிடித்தபடியே இருந்தார். "ஒழுங்காக ஈமெயில் படித்திருந்தால் நான் வருவது தெரிந்திருக்குமல்லவா?" என்று நான் அவரை ரேக்கிக் கொண்டிருந்தேன்.

பார்த்திபன் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்து அனைவரையும் அவ்வப்போது மேடைக்கு அழைத்துக் காம்பியர் வேலை செய்தார்.

முதலில் ரா.கி. ரங்கராஜன் பெசினார். (ஏழெட்டு வருட முன்பு அவரை அயனாவரம் வீட்டில் சந்தித்ததை நினைவு கூற முடியாமல் தடுமாறியவருக்கு, அவர் மனைவி சரியான நேரத்தில் என் பெயரை நினைவு படுத்தினார். பின் சீட்டில் உட்கார்ந்தபடி மிஸஸ். ரா.கி.ர. தன் சேவையை அடிக்கடி தொடர்ந்ததை நான் ரசித்தேன். சுஜாதாவின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து ஒரே அழுகை என்பதை ரா.கி.ர. பல முறை தன் பேச்சில் படித்தார்.

அடுத்தடுத்துப் பல பிரபலஸ்தர்கள் பேசினார்கள். விகடனிலிருந்து அசோகன், ஜெயகாந்தன், கஸ்தூரிரங்கன், மதன் எல்லோரும் மைக் பிடித்தார்கள். "சுஜாதா ஒரு எடிட்டர்'ஸ் டிலைட்' என்பதை அசோகன் தெரியப்படுத்தினார். "எத்தனை மணிக்கு, எந்த டெட்லைனுடன், எதைப் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக அதை எழுதித் தருவதில் சுஜாதா சமர்த்தர்"

(நாளை தொடர்கிறேன்)