என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 06, 2008

யூ டூ விகடன்?

ரஜினிகாந்த் - குசேலன் மேட்டர் ஒரு வழியாக தானே எரிந்து சாம்பலாகி முடிந்து போகின்ற நேரத்தில், இந்த வார ஜூனியர் விகடன் (10-8-08)'சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்' என்ற தலைப்பில் எழுதி இருப்பதை, வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி வளர்ப்பதை, அதில் கொஞ்சம் குளிர் காய நினைப்பதை இப்போது தான் படித்தேன்.

உடனே நான் அவர்களுக்கு எழுதிப்போட்ட பதில்:

"யூ டூ விகடன்? ரஜினியை விமர்சனம் செய்வதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு பத்திரிகை என்ற முறையில், அதுவும் எதையாவது பரபரப்புக்காக எழுத வேண்டிய வியாபாரக் கட்டாயத்தில் நீங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், கன்னடியர்கள் என்னவோ பாகிஸ்தானியர்கள் போலவும், கர்நாடகா ஏதோ பயங்கர விரோத தேசம் போலவும் எழுதியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருத்தப்படவேண்டியது, இந்திய இறையாண்மைக்கே, தேச ஒற்றுமைக்கே ஆப்பு வைக்கும் விதத்தில் விகடன் எழுதலாமா? கர்நாடகத்தில் சில முட்டாள்கள் தான் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம் தமிழர்களை இப்படி உசுப்பேற்றி விளம்பரம் தேடுவது விகடனா? அவசரப்பட்டு விட்டீர்கள். நான் வெட்கப்படுகிறேன்."

என் பின்னூட்டத்தை அவர்கள் பிரசுரம் செய்வார்களா என்பது தெரியவில்லை.

விகடனா இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் எழுதுவது? தனி மனிதத் தாக்குதலில் இப்படி ஈடுபடுவது? ரஜினையைப் பற்றிய 'கன்னடத்து ஆள்' போன்ற கேவலமான பிரயோகங்கள் என்னை மிகவும் வருந்த வைத்தன.

இந்தியாவைக் கூறு போட எதிரி அமைப்புகளே இனி தேவை இல்லை. தமிழ்ப் பத்திரிகைக்காரர்களே அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது.