என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, July 18, 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு!

என் நண்பர் அருண் வைத்யநாதனின் படம் என்பதற்காகவே எல்லா வேலைகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, பாடாவதி தியேட்டராய் இருந்தாலும் பரவாயில்லை என்று நான் நேற்றிரவு ஓடோடிப் போய் பார்த்த படம்.

'தமிழோவிய' த்தில் என் கலக்கல் கபாலி சீரியல் காலத்திலிருந்து அருண் நல்ல நண்பர். சமீபத்தில் சென்னையில் சந்தித்தபோது, ஒரு பட ரிலீஸ் சம்பந்தமாக எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் அவதிப்பட வேண்டியிருக்கிறது என்பதை நான் பக்கத்திலிருந்து கணித்திருந்தேன்.

சவுண்ட் மிக்சிங்கின்போதே 'எல்லே'யில் நான் பார்த்திருக்கவேண்டிய படம். அருண் என்னைத் தொடர்பு கொண்டு வரச் சொன்னபோது நான் சென்னையில் 'ஜக்குபாய்' டப்பிங்கில் இருந்தேன்.

சென்னை ப்ரிவியூ ஷோக்களில் நல்ல கூட்டம், விமர்சனங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் என்கிற நியூஸ் என் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது. நான் பேசினவர்களின் லேகா ரத்னகுமார் "படம் எனக்குப் பிடித்திருக்கிறது. 'ஏ'யில் கண்டிப்பாக ஓடும். எல்லா இடங்களிலும் ஓடவேண்டும்" என்றார்.

இன்னபிற மேற்சொன்ன காரணங்களாலும், 'ரெட் ஒன்' காமெரா ஒர்க் எப்படி வந்திருக்கிறது என்பதை நேரடியாகப் பார்க்கப் போகிறோம் என்பதாலும், முதல் நாளே என் வீட்டுக்காரம்மாவுடன் நான் தியேட்டரில் ஆஜர்.

முதல் ஷோ முடிந்து தியேட்டர் காலியாகிக் கொண்டிருந்தது.

சவுண்ட் இன் சார்ஜ் குணாலுடனும், ஒளிப்பதிவாளர் க்ரிஸ் ஃப்ரெய்லிச்சுடனும் பேசிக் கொண்டிருக்கையில் இருவருமே நெர்வசாக இருந்தார்கள்.

"என்னங்க மேட்டர்? ரிப்போர்ட்ஸ் நல்லாத்தானே இருக்கு"

"போயிட்டு நாளைக்கு வரீங்களா? இந்த தியேட்டர்ல ஒளியும் சரியில்லை. ஒலியும் சரியில்லை. நாளைக்கு அடுத்த தியேட்டருக்கு மாத்தச் சொல்லியிருக்கோம்".

"அடங்கொக்கமக்கா! சும்மா இருங்கப்பா பயலுவளா. நாளைக்கு மறுபடியும் வேணும்னா பார்த்துட்டு அந்த தியேட்டர்ல எப்படி இருக்குன்னும் சொல்றேன். இன்னிக்கு இதைப் பார்த்தே தீருவது" என்றேன்.

Photobucket


படம் எப்படி இருக்கிறது?

குணாலும் க்ரிஸ்ஸும் பயமுறுத்திய அளவுக்கு தியேட்டர் அவ்வளவு மோசமில்லை.

படம் மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் டு அருண்!

நியுஜெர்சியில் ஒரு சராசரி தமிழ் தம்பதி, அவர்களது குட்டிப் பெண் வாழ்வில் நிகழ்வது பற்றிய இயல்பான, திகிலான நிகழ்ச்சிகளே படம். ஸ்நேகாவும் பிரசன்னாவும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெள்ளைக்கார வில்லன் (அசோசியேட் ப்ரொட்யூசர்) தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.

"அய்யோ பாவம்! என் அப்பா வயசு இவருக்கு" என்று மாயவரம் பட்டமங்கலத் தெரு அப்பாவித்தனமான செண்டிமெண்டுகளுடன் ஹோம்லி ஸ்நேகா, வெள்ளைக்கார பெயிண்டர் ஒருத்தனை தன் வீட்டுக்குள், அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாட விட்டால் என்ன நடக்கலாம் என்பதை படம் பார்த்துப் பயந்து கொள்ளுங்கள்.

படத்தின் ஹைலைட் அந்த பயமுறுத்தல் அல்ல.

பட முடிவில் ஆணித்தரமான மெசேஜ் சொன்னதில் தான் அருண் அசத்தி விட்டார். அப்படிப் போட்டு தாக்கு!

உப்புச்சப்பில்லாமல் 'சுபம்' என்று முடிக்காமல், நெற்றியடியாய் சில விஷயங்களை சொன்னதில் படமே ஒரு மேல் தளத்துக்குச் சென்று விட்டது என்று நான் நினைக்கிறேன்.

வெல் டன், மை ஃப்ரெண்ட்!

'பி' யில் இது ஓடுமா, 'சி'யில் நடக்குமா என்றெல்லாம் சலம்பத் தேவை இல்லை. சமீப காலமாக சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் தான் நன்றாக ஓடுகின்றன.

கனிமொழி போன்ற சமூக ஆர்வலர்கள், சமூக பிரக்ஞைக்காக இம்மாதிரி படங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தால் தமிழக அரசு அவார்டும் நிச்சயம். என்னாலானது, அவர்கள் காதில் ஒரு வார்த்தை போட்டு வைக்கிறேன்.

சென்னையில் தூக்கக் கலக்கத்தில் இருந்த அருணை எழுப்பி என் வாழ்த்துகளைச் சொல்லி, லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்து உறுப்பினர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ போடப் போகிறேன் என்று சொல்லி அருணை மேலும் உற்சாகப்படுத்தினேன்.

சின்ன பட்ஜெட்டில் நிறைவான, உருப்படியான படம்!

நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள்!

3 comments:

Unknown said...

நேற்றுதான் பார்த்தேன், நல்ல மெசேஜ் , ஆனால் பி,சி செண்டர்களிலும் ஓடினால் , அருணின் மெசேஜ் அனைவரையும் சென்றடையும்.. இன்னும் சற்று விரிவாக , ஆழ்மாக இந்திய குடும்ப கலாச்சாரத்தையும், காட்டி இருக்கலாம்..


வாழ்த்துக்கள் திரு.அருண்

Muruganandan M.K. said...

பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன். உங்கள் விமர்சனத்தின் பின் பார்க்க வேண்டியது அவசியமாயிற்று.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி, பேரரசன் மற்றும் முருகானந்தன்!

"There are only two pleasure points in making a movie- first when you conceive of the project and the second, when you release the film. Everything in between are only pain points!" -என்று சொல்வார்கள்.

மிகப்பெரிய உண்மை!