என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 24, 2005

நாட்டு நடப்பு -1 (கபாலியின் கேள்விகள்)

நாட்டு நடுப்பெல்லாம் வரவர ஒன்னுமே சர்யாப் பிரியலீங்கண்ணா. ஒரே பேஜாராயிட்சுபா. ரவிக்கு அட்ச சர்க்காட்டம் அல்லாமே கலங்கலாத்தான் கீது.

அத்தாம்பா உன்னிய மேறிப் பெர்சுங்களாண்ட எதுனா டவிட்டு கேட்டுத் தெரிஞ்சிக்கறன்.


1. கொஞ்ச நா மின்னாடி, "நாந்தேன் அடுத்த சூப்பருடா, மவனே, உனுக்கு சான்ஸே இல்ல, நீயி ஃபீல்டு அவுட்டுப் பொறம்போக்கு"ன்னு கட்டிப் பொரண்டு பெறாண்டிக்கிட்டாங்களே செல பேரு, இப்ப அவிங்கள்லாம் ஏங்ண்ணா இவ்ளோவ் சயிலண்டா கீறாங்க?

2. "அய்ய, நாந்தேன் அஸீனு, எனு கண்ணெப் பாரு, எனு அயகப் பாரு"ன்னு ஒரு கோயம்புத்தூரு அக்கா கம்பூட்டருலயே சீனு சீனாக் காட்டி லெச்சம் லெச்சமாக் கனடா மாமா ஒர்த்தராண்ட கறந்து கீதாமே? கன்டா மன்சன் ஏற்கனியே நொந்து நூடுல்சா கீறாராம். இந்தக் கதய இந்தியில சினிமா எட்கறம்பா, ஒரு டைட்லு குடு'னு காஜா மொய்தீனு கேட்டார் சார்.

'சாட் கா பச்சா அவுர் ஃபிலிம் கீ ராணி' நல்லா கீதா?

3. "அட அம்மாம் தொலவுல போயி ஜின்னாவுக்கு ஜால்ரா போட்டாக்க ஆருமே கண்டுக்க மாட்டாங்க"ன்னு நெனிச்சித் தப்பாட்டம் ஆடிட்டு, இப்ப ஆப்புல மாட்டிக்கினு அவஸ்தபடுறாரே, அத்துவானி, அவிரு லெட்டரு போட்டு என்னியக் கேட்டாருங்ணா, "சொரணயின்னா இன்னாடா கபாலி மீனிங்'கின்னு. பட்சவன் நீ ஸொல்பா.

4. 'நாட்ல அத்தினி பேருக்கும் வர்சத்ல நூறு நா வேல உண்ட்ரா, சம்பள துட்டும் கேரண்டி'யின்னு டெல்லியில சட்டம் வர்தாமே, அப்டியின்னா மத்த நாள்ங்களுக்கு வேல பூட்சினு நஸ்ட ஈட்ட சிதம்பரம் சாரு தர்வாருங்களாங்ணா?

5. ஈராக்கு தலயில குண்டப் போட்டா அல்லாப் பெட்ரோலயும் அம்ரிக்காவிக்கே புட்சிக்லாம்னு பிராடுக் கணுக்கு போட்டு புஸ்ஸு அய்குனி ஆட்டம் ஆடி முட்சின அப்றமும் ஏங்க்ணா பெட்ரோலு வெல இப்டிக் குமுறிக்கிட்டே ஒசரத்ல போயி நிக்கிது?

பெர்யவிங்க, பட்சவங்க நீங்க ஸொல்லுங்ணா, நானு கையிநாட்டு, கேட்டுக்கறன்.

No comments: