என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 06, 2005

இரு விறகிடை நெருப்பாக

இரு விறகிடை நெருப்பாக ...
------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

இன்றும் உனக்கு
ஈமெயில் எழுதக்கூட
நேரமில்லாமல்
கணினிச் சனியனில்
கரைந்தே போனேனடி கண்ணம்மா
ESP-யில் உனக்குத் தெரிகிறதோ?
மானிட்டரில் மறைந்தபடி
என் உடம்பு குலுங்குவதும்
கீபோர்டு நனைவதும்?

கம்ப்யூட்டர் சென்டரில்
காத்துக்காத்துப்
போலியாய்ப் புன்னகைத்து
'சாட்'டிங்குக்காய் ஏமாந்து
மௌனமாய் அழுதபடி
இந்நேரம்
நடந்து கொண்டிருப்பாய்
வீடு நோக்கி
பல்லவன் வருவான்
பார்த்து நட

என்ன தேசம் இது?
எதற்காக இவர்கள்
எப்பொழுதும்
சிரிக்கிறார்கள் போலியாய்?
எல்லோரையும்
கொளுத்தவேண்டும்

என்ன ப்ராஜெக்ட் இது?
சப்ளை செயின்
இருந்தாலென்ன
அறுந்தாலென்ன?
நீ பார்த்து நட கண்ணம்மா
சைக்கிள்காரன் ஜாக்கிரதை

என்ன கொடுமை இது?
நீ தூங்கும்போது
நான் விழித்து
நீ விழிக்கும்போதும்
நான் விழித்து ...?

அமெரிக்கா பிடிக்கவில்லை
அம்மா கையால் தயிர் சாதம் வேண்டும்
சங்கர மடம் வரை உன்னோடு
காலார நடக்கவேண்டும்
கொலுசைப் பார்த்தபடி
ஜோசியர் தெரு முனையில்
திருட்டு தம்மடித்து உன்னிடம்
திட்டு வாங்கவேண்டும்

காதல் ஒரு நெருப்பாம்
எங்கேயோ படித்தேன்
உடல்கள் என்ன விறகா?
ஒன்றுமே பிடிக்கவில்லை
உன்னைத்தவிர ....

2 comments:

Anonymous said...

excellent!

ILA (a) இளா said...

wow, wow, wow. என்னங்க சொல்ல .. மனசு மட்டும் கொஞ்சம் கல்லா போன மாதிரி இருக்கு.