என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, July 04, 2005

'தமிழ் மண'த்தில் இந்த வார (வால்) நட்சத்திரம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
---------------------------

மதி: "காசி, அர்ஜெண்ட். இந்த ஆள ஏன் தான் 'இ.வா.ந.'ன்னு போட்டமோ? எனக்கு அழுவாச்சியா வருது. ஆளையே புடிக்க முடியலை. நான் ஏற்கனவே பயங்கர பிசி. நீங்க இந்தாளைப் பாத்துக்குங்க. நான் அம்பேல்."

காசி: ஹலோ, ஹலோ, ஹலோ, என்ன சார், இவ்வளவு லேட்டாவுதே? இன்னும் நீங்க ஒரு அறிமுகம் கூட அனுப்பலியே உங்களப் பத்தி? போட்டோ அனுப்பாட்டி கூடப் பரவாயில்லை. 'உராங் உடாங்'ற தலைப்புல ஒரு அழகான படம் இருக்கு. அதை வெச்சுச் சமாளிச்சுடுவேன். எதுனா எழுதுங்க சார், உங்களால ஆசிரியர் குழுவே விலகி ஓடிடும் போல இருக்கு. சீக்கிரம்"

'சுய அறிமுகம்' என்று என்னைப் பற்றி நானே ஜல்லியடித்து எனக்கே ஊதுபத்தி, சாம்பிராணி போட்டுச் செல்·ப் ஜால்ரா சத்தத்தில் நான் மயங்கியபடி உங்கள் காதுகளைக் கிழிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என் எளிமையும் பணிவும் அம்மாவின் ஆஸ்தான டம்மியமைச்சர் ஓ.பி. எஸ்ஸொத்தவை என்பது நீங்கள் அறிந்ததே. ஸ்பீல்பர்க்குப் புது ஸ்கிரிப் விஷயமாக நான் பயங்கர பிசியாக இருப்பதால், 'சென்னை, மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே 'எட்டாம் நிம்பர்க் கடை'ப் பக்கம் நம் சிஷ்யகேடிகள் யாராவது கிடைத்தால் அங்கே என்னைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்' என்று சொல்லி விட்டு ஓடி விட்டேன்.

************************** ********************** *************************

காசி ஆறுமுகம் தலைமையில் மதி கந்தசாமி இன்னபிற தமிழ்மண ஆசிரியர் குழு சென்னைக்கு விரைகிறது.

சிங்கிள் டீயுடன் நாயர் கடை வாசல் ஸ்டூலில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறார் அவர். எவர்? ஓஹோ, எட்டாம் நம்பர் கடைக்கு நீங்க புதுசோ, அதான், இந்த ஆள் யாருன்னு கேக்கறீங்க? அவர் தாங்க தமிழ்ப் புலவர் ஆதிமந்தி.

தமிழ்ப் புலவர் ஆதிமந்தி: என்னுயிராம் இராமரைப் பற்றிய சிறு குறிப்பா? நன்று, நன்று. யான் புண்ணியனானேன் இன்று. மண்மேட்டிடை அமர்க. செவி மடுக்க. அன்னாரைப் பற்றி யான் இனியும் இயம்பப் புதிதாக என்னதான் இருக்கிறது மீதம்? அன்றே சொல்வாங்கு சொல்லிப் போந்தாரே அண்ணல் கம்ப நாட்டார்?

காசி: "ஏங்க மதி, இவர் பேசறது உங்க ஊர்த் தமிழா?"

மதி: "உஸ். இது இலக்கியம். ஹரிகிருஷ்ணன் மேட்டர் ரேஞ்ச் இதெல்லாம். பேசாமக் கவனிங்க"

புலவர் தொடர்வாங்கு தொடர்வார்:

"வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடமுள பாடையா தொன்றினாயினும்
திடமுள ரகுகுலத் திராமன் தன்கதை
அடைவுடன் கேட்பவர் அய்ராவரே' என்றல்லவோ சொல்கிறது திராவிட வேதம்? எம் தமிழ்ப் புலமையில் சிலிர்த்து அன்னார் ஒரு முறை எமக்கணிவித்த இவ்வரைக்காற் கவரிங் சூடாமணி கண்டீரோ? இதைக் கண்டதும் எனக்கும்

பொடித்தன வுரோமம் போந்து
பொழிந்தன கண்ணீர் பொங்கித்
துடித்தன மார்பும் தோளும்
தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணிவாயாவி
வருவது போவதாகித்
தடித்தது மேனியென்னே' என்று அண்ணலின் செவியில் பகருவீராகுக.

சென்னை வருகையில் எமக்கும் ஒரு பெரும் போத்தல் கொணர்ந்தால் இன்னும் போற்றுவேனாவேன் என்றும் அவரிடை பகர்க. வெற்றுப் பேட்டியும் விளம்பரத்துக்காகப் பொய பகர்தலிலும் எமக்கு உடன்பாடு இல்லையென்பதால் இங்கே தாங்கள் கொடுப்பதை இன்முகத்தோடு யான் வாங்கி நெடுநாள் தாண்டிய எட்டாம் கணக்கில் வட்டியாவது கட்டி விடுகின்றேன். சிறு குறிப்புக்கும் ஆயிரத்துக்குக் குறைந்து யான் இது வரை வாங்கியதில்லை, அறிவீர்"

காசி: இது என்னாங்க கொடுமை, நான் என்ன கூகிளா நடத்தறேன்? நம்மாளுங்க எல்லாருமே ·ப்ரீ கேசுங்க. இந்தாளு இந்நேரம் தமிழ்ல துட்டு கேட்டுட்டிருக்கான். வாஙக பாத்ரூம் பாகவதர் வீட்டுக்கு ஓடிடுவம்.

பாத்ரூம் பாகவதர்: ஆரு, நம்ம லாசேஞ்சலசப் பத்தியா? அடாடாடா. நன்னாக் கேட்டேள் போங்கோ. மனுஷ்யன் ஜகஜாலக் கில்லாடின்னா. மகா ச்ரேஷ்டன். இச்இச்கலகலா வல்லவன், என்னோட பால்ய நண்பன்னா அவன்?

என்னது? சார் தான் இந்த வார நட்சத்திரமா? அதுக்காகத்தான் இந்தப் பேட்டி கீட்டி எல்லாம் அமர்க்களப்படறதா? ஓஹோ. ஹ¤ம்ம்ம். அடுத்த வாரம் நான் ·ப்ரீன்னு தான் நெனக்கறேன். அம்மாடி மங்களம், அந்தக் கேலண்டரக் கொண்டாடிம்மா. ஆரோ டேட்ஸ் கேட்டு வந்திருக்கா? என்னது? அத அப்றம் பாத்துக்லாம், மொதல்ல இவரப் பத்தி நாலு வார்த்த சொல்லுங்கோங்கறேளா? சரி, ஸொல்லிப்டாப் போச்சு.

மனுஷன் எம்டன். என் பேர வெச்சுத் தன்னைத்தானே ராம் ரொம்ப வெளம்பரப்படுத்திக்கறார்னு வெளிநாட்லேருந்து வர என் ரசிகாள்லாம் பேசிக்றாளே? எனக்கு ஏதானும் ஒரு ராயல்டியானும் தரணும்னு இந்த அபிஷ்டுக்கு ஏன் தோணமாட்டேங்கறது? ஒரு உண்மையப் போட்டு உடைச்சுடட்டுமா?

நீ சும்மா இரு மங்களம். 'செத்த உள்ள வாங்கோ'ன்னு படுத்தாத. உண்மையச் சொல்றதுலே தப்பே இல்லை. நானும் எத்தனை நாள் தான் பொறுத்துப் பொறுத்துப் போகறது?

நட்சத்திரம், திலகம், ராகுகாலம்னு என்ன வேணும்னாலும் நீங்க கொண்டாடுங்கோ, நேக்குப் பொறாமையே இல்லை. இளயராஜாவோட சேர்த்து ராமுக்கும் சங்கீதம் சொல்லிக் குடுத்ததே நான் தான். அப்டியே சம்ஸ்கிருதம், கிரந்தம், கிரேக்கம், ஸ்பானிஷ் அத்தனையும் நான் போட்ட பிச்சை. பீச்சாங்கரைல ஒக்காத்தி வெச்சு நான் தான் அவனுக்கும் சுஜாதாவுக்கும் தமிழ் அட்சராப்யாசம் பண்ணினேன். ஒர்த்தருக்கும் நன்றிங்கறதே கெடையாதுண்ணா வர வர. தர்மமே இல்லை.

என்னது? அப்டியே 'கோட்' பண்ணலாமாவா? எனக்கென்ன பயம்? நன்னாக் 'கோட்' பண்ணுங்கோ. ஒரு படத்துல சான்ஸ் தரேன்னுட்டு இது வரை ஒரு போட்டோ கூடப் புடிக்காதாவாளை நான் அப்டித்தான் சொல்வேன். வால் நட்சத்திரம், வாஸ்துன்னு இந்தாளெல்லாம் ஒசந்துண்டே போலாம், நான் மட்டும் ஒத்தத் தேங்காமூடிக்கு சொங்கிங்க கிட்ட அல்லாடணுமா? எனக்கு ரொம்பப் பத்திண்டு எரியறது. மொதல்ல எடத்தக் காலி பண்ணுங்கோ, என் ·பாரின் சிஷ்யாளெல்லாம் சிட்சைக்கு வர நேரமாய்டுத்து. யாரானும் ரிக்ஷாகாராக்கிட்ட போய்க் கேளுங்கோ அவன் லோக்ளாஸ் பவிஷை"

மைலாப்பூர் கபாலி உற்சாகமாகத் துள்ளி எழுகிறான்.

மைலாப்பூர் கபாலி: இது இன்னாய்யா ஒரு கேள்வி? இன்னாபா கஸ்மாலம், ராம் சாரு, ஆரா? அய்ய, இதான வோணாம்கறது. சல்பேட்டாவுக்கே பேட்டரியா? என் குருநாதரப் பத்தி என்னு கிட்டயே கேட்டு எனுக்கே பட்டன் போடப் பாக்குறியே? அம்ரிக்காவுலேர்ந்து வந்துகிறீங்கற, ஆராச்சியும் சூர்யனுக்கும் சந்த்ரனுக்கும் அறிமொகம் எய்துவாங்களா? உன்க்கு சாரத் தெரியலியின்னா, கூகுள்ல போயி 'losangelesram'னு முட்டிக்கய்யா. வந்துட்டாங்க, மைக்கத் தூக்கிகிட்டுப் பேட்டி எடுக்க.

அடுத்த முதல் அமைச்சர் அண்ணன் ராம் தான்யா. அவிர் வாய்க, வளர்க, வெலுக!

மதி: ஏய் காசி, இது நல்லா இருக்கே? நம்ம ராம் தான் அடுத்த முதலமைச்சராமே? வாங்க, போயி அம்மாகிட்ட இப்பவே போட்டுக் குடுத்துடுவம்.

கோட்டையில் வெய்ட்டிங்கில் ஜெயலலிதா: வாங்க, வாங்க. இந்தப் ப்ரொக்ராமுக்காகத்தான் நான் வெத்து சேதுத்திட்ட வெட்டிக்கால்வாய் கலாட்டாவுக்கே போகாமக் காத்துக்கிட்டிருக்கேன். ஆமா, யாரைப் பத்திப் பேட்டின்னீங்க?

காசி: அம்மா, லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு ...

ஜெயலலிதா: யாராவது ப்ரோக்கரா? லாஸ் ஏஞ்ச்ல்ஸா? அங்க நான் ஒண்ணும் ஹோட்டல் வாங்கலியே இன்னும்?

மதி: இல்லம்மா. அவர்தான் அடுத்த முதல்வர்னு ...

ஜெயலலிதா: வாட் நான்சென்ஸ்? தமிழ்நாட்ல அடிக்கற கூத்து பத்தாதுன்னு இப்ப அமெரிக்காவில இருந்துக்கிட்டு இப்படி ஆரம்பிச்சுட்டாங்களா? இந்த விஜயகாந்த பண்ற அலம்பலே தாங்க முடியலை. தூத்துக்குடிப் பக்கம் போகாம இருக்க ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு உங்களை உள்ள விட்டது தப்பாப் போச்சு. என்ன மேன் மினிஸ்டர், இளிச்சிட்டு நிக்கற, கொழுப்பா? இவங்க தயாநிதி ஆளுங்க. இவங்களை இழுத்துக்கிட்டுப் போய்யா வெளில.

கோட்டையிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியர் டீம் போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு விரைகிறது.

ரஜினி: வாங்க, வாங்க. நான் அமெரிக்கா போயிட்டிருக்கேன், நீங்க இங்க வந்துக்கிட்டே இருக்கீங்க. எல்லாம் ஆன்மீகத்தோட அட்ராக்ஷன் பவர் தான். குருவன்றி ஒரு பருவும் உடையாது. ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா? ஒரு காலத்தில ...

மதி: இல்லீங்க வேணாம். டயம் இல்ல. இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பத்தி ஒரு மினி பேட்டி ...

ரஜினி: (தாடியைச் சொறிந்தபடி) "தெரியாத்தனமா இந்தாளுக்கு என் படத்துல ஒரு சான்ஸ் குடுத்துட்டேம்மா ஒரு தடவை. அவர் அதை வெச்சே பிக்-அப் பண்ணிச் சந்திரமுகி ரேஞ்சுக்குத் தானும் போயிட்டதா நினைச்சுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாருன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அதிலயும் சந்தோஷம் தான். ஏன்னா, நான் எதிலயும் ஆத்ம சந்தோஷம் பாக்கறவன். ஒரு உண்மைய நான் சந்திரமுகி ஐநூறாவது நாள்ல தான் சொல்லணும்னு இருந்தேன். பரவாயில்ல, இப்பயே சொல்லிடறேன். பாகவதர், கபாலி, மங்களம், ஆதிமந்தி அது இதுன்னு இந்த ராம் ஆயிரத்தெட்டு காரக்டர்ல பண்ற அலம்பலப் பாத்துத்தான் நான் சந்திரமுகியப் பத்தியே வாசுவை அட்வான்சா யோசிக்கச் சொன்னேன். ஏன்னா இந்த ராமுக்கும் டீப் மல்ட்டிபிள் டெர்ரிபிள் பர்சனாட்டி டிஸ்ஆர்டர் இருக்குங்கறது எனக்கு அவரோட நடிக்கும்போதே தெரியும். இன்னோரு உண்மையையும் உங்க கிட்ட சொல்லணும்.

இதை நான் விகடன்ல 'ஆழ்கடலுக்குள் அமிர்தானந்த யோகப்ரயோகம்'ங்கற தலைப்புல எழுதறதாயிருக்கேன். விகடன்காரங்க ஆழ்கடலுக்குள்ள போகறதுக்கு உண்டான அதிநவீன சூட்டை அஞ்சு டாலருக்கு எல்லாருக்கும் ·ரீயா நெட்லயே தரப் போறாங்க. நம்பர் ஒன் கொண்டாட்டம் கன்டின்யூஸ்!

விகடன் படிக்கறவங்க எல்லாரும் ஒரு கையில ஆ.வி. மறு கையில ஜு.வியோட அந்த சூட்டைப் போட்டுக்கிட்டு நடுக் கடலுக்குள்ள முழுகினாங்கன்னா, ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே யோகம் பயின்று வரும் பல யோகிகளையும் அங்கே ஆழ்கடல் நடுவால சந்திக்கலாம். எல்லா எம்பிடி ஆளுங்களும் த்ரீடியில திரிஞ்சுக்கிட்டே தெளிவாத் தெரிவாங்க. அந்த விஷயமாத்தான் நானும் ராமை அழைச்சுக்கிட்டு அமெரிக்கக் கடற்கரை ஓரமா ஆராய்ச்சி பண்ணப் போறேன்.

என்ன மதி, அடுத்த படமா? அது பத்தி அங்க சோகமா நின்னு அழுதுக்கிட்டே அல்வா சாப்டுக்கிட்டிருக்காரே, கே. எஸ். ரவிக்குமார், அவரும் நம்ம ராமுக்கும் தோஸ்துதான், அவர் கிட்ட கேளுங்க. வர்ட்டா?"

பக்கத்திலேயே தான் இயக்குனர் மணிரத்தினத்தின் வீடும்.

மணிரத்னம்: நாயகன் பத்தி நான் இப்ப பேசறதாயில்லை. 'டைம்' மேகசைன் ...

காசி: சாரி, சார். நாங்களும் அது பத்திக் கேக்கறதாயில்லை. உங்க ·ப்ரெண்டு எல்லே ராம் பத்தி ...

மணிரத்னம்: ராம் எனக்கு ·ப்ரெண்டு, நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான்.

காசி: இல்ல சார். உங்களை ரொம்பத் தெரிஞ்ச மாதிரி அவர் அப்பப்ப ரீல் விடறாரே, அது பத்தி?

மணிரத்னம்: அவரை ரொம்பத் தெரிஞ்சமாதிரி நான் உங்க கிட்ட ரீல் விட்டேனா? இல்லியே. (சிரிக்கிறார். தமிழ்மண ஆசிரியர் குழு ஒன்றும் புரியாமல் விழிக்கிறது.) நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான். சரியா?

வெளிநாட்டில் ஷ¥ட்டிங்கில் இருக்கும் ஐஸ்வர்யா ராயிடம் பேட்டி தொடர்கிறது:

ஐஸ்வர்யா ராய்: "அய்யோ, அந்த ஆளு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 'ஜீன்ஸ்'ல என் கையப் புடிச்சு அழுத்தின அழுத்தில தான் ப்ராப்ளமே ஆரம்பிச்சுது. அதைப் பார்த்த சல்மான கான் 'ஆருடி உன் கையக் கடிச்சது?'ன்னு இந்தியில கேட்டு ஏக ரகளை. அதையெல்லாம் நான் மறக்க விரும்பறேன். ஆனா ராமை மட்டும் மறக்கவே முடியலை. தினமும் ஒரு தடவையாவது என் கைய நானே தடவிப் பார்த்துக்கிறது வழக்கம். அடிக்கடி அவர் படம் பண்ணினாக்கப் பரவாயில்லை. ஆனா மாட்டேங்கறார். ஏன்னு தான் தெரியலை"

மதி குறுக்கிட்டு, "சான்ஸ் வந்தாத்தானுங்க படம் பண்ண முடியும்? வடிவான உங்களோடு அவர் மறுபடியும் கதைக்க வாய்ப்பு இருக்கிறதா?"

ஐஸ்வர்யா ராய் (வெட்கத்தில் கன்னம் குழிய): அடோபி போட்டோஷாப் புண்ணியத்தில் அது சீக்கிரமே நடந்தாலும் நடக்கலாம்.

இவ்வளவு தூரம் சென்னை வந்துவிட்டு மீனாவைப் பேட்டி காணாவிட்டால் தமிழ்மண வாசகர்கள் எப்படி மன்னிப்பார்கள்?

மீனா: அய்யோ நம்ம எல்லே ராமா? இது வரை நான் ஒரு தடவை தான் எல்லே வந்திருக்கேன், ஆனா நான் எப்ப எல்லே வந்தாலும் அவர் வீட்ல தான் தங்கறது வழக்கம். இப்ப கரெஸ்பாண்டென்ஸ்ல எம்பிஏ முடிச்சுட்டு அப்படியே லண்டன், ஆஸ்திரேலியா எல்லாம் ஒரு வருஷம் போறேன். ஆனாக்க வருஷம் முழுக்க எனக்கு இங்க ஷ¥ட்டிங் இருக்கு. ஆமா, யாரையோ பத்திக் கேட்டீங்களே, அது யாரு? ஓ, மம்மி, அது யாரு மம்மி ராம்? எதுனா ப்ரொட்யூசரா?

இன்னும் ஒரே ஒரு பேட்டியோடு இந்தக் கூத்தை முடித்துக் கொள்ளலாமென்று தமிழ்மண ஆசிரியர் குழு புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறது. சென்னையில எத்தனையோ பிரபலங்களைத் தெரியும்னு ராம் பீலா விடுவாரே, யாரைப் போய்ப் பார்க்கலாம்?

காசி: மதி, அந்த இரா. முருகனைப் போய்ப் பார்க்கலாமா?

மதி: அய்யோ. அவர் வேணாம்.

காசி: அப்ப, அந்தப் பாரா?

மதி: அய்யோ அய்யோ, அவரும் வேணாம். அந்தச் சினிமா போச்டரப் பாருங்க. அந்தப் போண்ணைப் போய்ப் பார்க்கலாம்.

படம் ஏதுமில்லாமல் ஸ்நேகா வீட்டில் அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

பு.பு. இளவரசி: வாஙக, வாங்க, இப்பத்தான் ஷ¥ட்டிங்கில இருந்து வந்தேன். மழையில புடவை மட்டும் நனையற மாதிரி சீன். புடவைக்கு உள்ளாற
நான் இருந்ததால அங்க கவர்ச்சி எல்லாம் காட்டலை.

மதி, காசி: இல்லீங்க, இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு.

பு.பு.இ: தெரியுமே. அவர் படத்துல நான் தான் முதல் கதாநாயகியா புக் ஆகி இருக்கேன். ஹாலிவுட் படமானாலும் குடும்பப் பாங்கான ரோல், அதனால கவர்ச்சியே காட்ட மாட்டேன்.

காசி: அய்யோ, கவர்ச்சிய விடுங்க. அவரப் பத்தி எதுனா சொல்லணுங்களா?

பு.பு.இ: அவரோட ப்ளாக்ல என் படத்தை எல்லாம் பெரிசாப் போட்டுப் பிரமாதப்படுத்தி இருந்தார்னு கேள்விப்பட்டேன். ஹாலிவுட் படம்கறதுனால டூ பீஸ்ல நடிக்கும்படியா இருக்கலாம். இருந்தாலும் நான் கவர்ச்சியே காட்ட ...

தமிழ் மண ஆசிரியர் டீம் தலைதெறிக்க ஓடுகிறது. கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறார்கள்.

காசி: ஒண்ணுமே சரியாத் தேறலியே, அவர் வீட்டுக்கே போன் போட்டு வீட்ல உள்ளவங்களைக் கேட்டுட்டா?

மதி: இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வரதுனால தான் யாஹ¤ மாதிரி நீங்க தமிழ் மணமே நடத்தறீங்க. என்ன பிரில்லியண்ட் ஐடியா! அட்டகாசம். ஆனா, நீங்களே கேட்ருங்க.

தொலைபேசியில் குடும்ப நிகழ்ச்சியின் குறு குறிப்பு:

நிஷாந்த் ராம்: வாட்? என் டாடி ஸ்டாரா? அடப்பாவமே, இப்பத்தான் மைக்ரோசா·ப்ட்ல மாடல்னு அவுங்க ஏமாந்தாங்க, அடுத்தது நீங்களா?

ஜனனி ராம்: யு வாண்ட் மீ டு டாக் சம்திங்க் குட் அபௌட் மை டாட்? ஓ மை காட்! திஸ் ஈஸ் வொர்ஸ் தான் கெமிஸ்ட்ரி அசைண்மெண்ட். ·பார்கெட் இட்.

திருமதி ராம்: கண்டிப்பாச் சொல்றேன். என் புருஷனை மாதிரிப் புத்திசாலி, சமத்து, அழகு யாருமே கிடையாதுங்க. சக்கரைக்கட்டிங்க அவரு. அவரைக் கட்டிக்க நானு ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கேன். என் பூர்வ ஜென்ம புண்ணியம். எல்லாமே விலாவாரியாச் சொல்றேன். ஏங்க, தமிழ்மணத்துல ஒரு வாரம் ஆசிரியர்னா பேமெண்ட் எவ்வளவு? ஒரு பத்தாயிரம் டாலராவது தருவீங்களா?

என்னது, ·ப்ரீயா? போனை வையுங்க மொதல்ல. அந்தாளுக்கும் வேலையில்ல, உங்களுக்கும் வேற வேலையில்ல.

15 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

'அமெரிக்க அரசியல்'ல போயி சிக்கிக்கிட்ட சல்பேட்டாவையும் மாயவரத்தானையும் தூக்கியாந்து இங்ங்ன போட்டிருக்கேன்!

At 9:11 AM, Chandrasekaran said...
அண்ணாத்தே,

இந்தவார இஷ்டாரு ஆனதுக்கு, இந்தா முதல்ல ஒரு சப்பையைப் புடி. சரக்குல பளசானா நல்ல சரக்கு. ஆனா, ப்ளாகுல எம்புட்டு நாள்தான் பளைய சரக்கப் பாத்து, சரக்கு அடிக்காமய கண்ணெல்லாம் செவந்து போறது. புச்சு புச்ச்சா எட்து வுட்டாத்தானே, என்னமாதிரி சிஸ்ய புள்ளைங்களுக்கு சந்தோசமா இருக்கும். கலக்கல் சரக்கெல்லாம் கலர்புல்லா எட்து வுடுங்கோ. ஒங்க கோலிவுட்டு சமாச்சாரம்லாம் எட்து வுடுங்கோ.

அன்புடன்
சல்பேட்டா சந்துரு
(மீ.சந்திரசேகரன்)


At 9:26 AM, mayavarathaan... said...
தலிவா... இந்த வார இஸ்டாரு ஆனாலும் ஆனீரு... வந்தோமா.. ஐஸ்வர்யாராயும் நீங்களும் ஒண்ணா இருக்கிற போட்டோவை போட்டோமா அப்படீன்னு இல்லாமா இப்படி வித்தியாசமா ஒரு பதிவு போட்டுருக்கீறே.. கை கொடு சாரே.. வித்தியாசமான ஆளு தான் நீர்!

jeevagv said...

துக்ளக் ஸ்டையிலில் கலக்கலாக இருந்தது ராம், தொடர்ந்து நட்சத்திர கலக்கல் கலக்குங்க!

துளசி கோபால் said...

:-))))))

கலக்கல்!!!

என்றும் அன்புடன்,
துளசி.

வானம்பாடி said...

வண்டாருபா வாத்யாரு..
வால் நட்சத்திரத்தின் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது, இந்த வாரம் முழுதும் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்போடு வரவேற்கிறேன். ஹப்பாடா...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ராம்! லக்கலக்கலக்கல்! :o)

போச்சு..மூர்த்தி பேரையும் நாசமாக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது ராம்.

இந்த வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போட வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்னேகாவை வேண்டிக்கொள்கிறேன்.

பி கு: இந்த போலி மூட்டைப்பூச்ச்சி தொந்தரவு தாங்க முடியலப்பா!

ஜெ. ராம்கி said...

ராம் ஸார்,

மந்தைவெளி மேட்டரெல்லாம் இருக்கட்டும் மாயவரத்து நினைவுகளை பத்தியும் கொஞ்சம் சொல்லி மாபியா கும்பலை மறக்காம கொரலு வுட வெச்சுடுங்க.

அன்பு said...

கலக்கல் எல்லே சார். சிரிச்சு வயிறு வலிக்குது.

இப்படில்லாம் நாம் மாத்தி மாத்தி எழுதுகிட்டாலும் வீட்டுல பேசிக்கிறது இப்படித்தான் போல:

அந்தாளுக்கும் வேலையில்ல, உங்களுக்கும் வேற வேலையில்ல.

-அந்த சோகத்தை ஏன் கேட்கறீங்க...

-அன்புடன் அன்பு

Mookku Sundar said...

ராம்,

வாங்க..வாங்க.

வாழ்த்துகள்.

வாரம் முழுக்க சினிமா கூத்து மட்டும் அடிச்சிடாம, மத்த விஷயங்களையும் டச் பண்ணுவீங்களாம். ஓகேவா.

-மூக்கு சுந்தர்

ஜெ. ராம்கி said...

கரெக்டா சொன்ன மூக்கு வாத்யாருக்கு மொச்...மொச்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பின்னூட்டம் இட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்,

என் நன்றியும் வந்தனங்களும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள மூர்த்தி,

என்னிடம் உங்களுக்கு எந்த விதமான பகைமையும் கிடையாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கவலையே படாதீர்கள். நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம் ;-)

Maravandu - Ganesh said...

Dear Ram

Nice post :-))

Thanks

Murali said...

Hello Ram

Great post. Looking forward to many more this week.

Murali