லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
---------------------------
மதி: "காசி, அர்ஜெண்ட். இந்த ஆள ஏன் தான் 'இ.வா.ந.'ன்னு போட்டமோ? எனக்கு அழுவாச்சியா வருது. ஆளையே புடிக்க முடியலை. நான் ஏற்கனவே பயங்கர பிசி. நீங்க இந்தாளைப் பாத்துக்குங்க. நான் அம்பேல்."
காசி: ஹலோ, ஹலோ, ஹலோ, என்ன சார், இவ்வளவு லேட்டாவுதே? இன்னும் நீங்க ஒரு அறிமுகம் கூட அனுப்பலியே உங்களப் பத்தி? போட்டோ அனுப்பாட்டி கூடப் பரவாயில்லை. 'உராங் உடாங்'ற தலைப்புல ஒரு அழகான படம் இருக்கு. அதை வெச்சுச் சமாளிச்சுடுவேன். எதுனா எழுதுங்க சார், உங்களால ஆசிரியர் குழுவே விலகி ஓடிடும் போல இருக்கு. சீக்கிரம்"
'சுய அறிமுகம்' என்று என்னைப் பற்றி நானே ஜல்லியடித்து எனக்கே ஊதுபத்தி, சாம்பிராணி போட்டுச் செல்·ப் ஜால்ரா சத்தத்தில் நான் மயங்கியபடி உங்கள் காதுகளைக் கிழிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என் எளிமையும் பணிவும் அம்மாவின் ஆஸ்தான டம்மியமைச்சர் ஓ.பி. எஸ்ஸொத்தவை என்பது நீங்கள் அறிந்ததே. ஸ்பீல்பர்க்குப் புது ஸ்கிரிப் விஷயமாக நான் பயங்கர பிசியாக இருப்பதால், 'சென்னை, மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே 'எட்டாம் நிம்பர்க் கடை'ப் பக்கம் நம் சிஷ்யகேடிகள் யாராவது கிடைத்தால் அங்கே என்னைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்' என்று சொல்லி விட்டு ஓடி விட்டேன்.
************************** ********************** *************************
காசி ஆறுமுகம் தலைமையில் மதி கந்தசாமி இன்னபிற தமிழ்மண ஆசிரியர் குழு சென்னைக்கு விரைகிறது.
சிங்கிள் டீயுடன் நாயர் கடை வாசல் ஸ்டூலில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறார் அவர். எவர்? ஓஹோ, எட்டாம் நம்பர் கடைக்கு நீங்க புதுசோ, அதான், இந்த ஆள் யாருன்னு கேக்கறீங்க? அவர் தாங்க தமிழ்ப் புலவர் ஆதிமந்தி.
தமிழ்ப் புலவர் ஆதிமந்தி: என்னுயிராம் இராமரைப் பற்றிய சிறு குறிப்பா? நன்று, நன்று. யான் புண்ணியனானேன் இன்று. மண்மேட்டிடை அமர்க. செவி மடுக்க. அன்னாரைப் பற்றி யான் இனியும் இயம்பப் புதிதாக என்னதான் இருக்கிறது மீதம்? அன்றே சொல்வாங்கு சொல்லிப் போந்தாரே அண்ணல் கம்ப நாட்டார்?
காசி: "ஏங்க மதி, இவர் பேசறது உங்க ஊர்த் தமிழா?"
மதி: "உஸ். இது இலக்கியம். ஹரிகிருஷ்ணன் மேட்டர் ரேஞ்ச் இதெல்லாம். பேசாமக் கவனிங்க"
புலவர் தொடர்வாங்கு தொடர்வார்:
"வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடமுள பாடையா தொன்றினாயினும்
திடமுள ரகுகுலத் திராமன் தன்கதை
அடைவுடன் கேட்பவர் அய்ராவரே' என்றல்லவோ சொல்கிறது திராவிட வேதம்? எம் தமிழ்ப் புலமையில் சிலிர்த்து அன்னார் ஒரு முறை எமக்கணிவித்த இவ்வரைக்காற் கவரிங் சூடாமணி கண்டீரோ? இதைக் கண்டதும் எனக்கும்
பொடித்தன வுரோமம் போந்து
பொழிந்தன கண்ணீர் பொங்கித்
துடித்தன மார்பும் தோளும்
தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணிவாயாவி
வருவது போவதாகித்
தடித்தது மேனியென்னே' என்று அண்ணலின் செவியில் பகருவீராகுக.
சென்னை வருகையில் எமக்கும் ஒரு பெரும் போத்தல் கொணர்ந்தால் இன்னும் போற்றுவேனாவேன் என்றும் அவரிடை பகர்க. வெற்றுப் பேட்டியும் விளம்பரத்துக்காகப் பொய பகர்தலிலும் எமக்கு உடன்பாடு இல்லையென்பதால் இங்கே தாங்கள் கொடுப்பதை இன்முகத்தோடு யான் வாங்கி நெடுநாள் தாண்டிய எட்டாம் கணக்கில் வட்டியாவது கட்டி விடுகின்றேன். சிறு குறிப்புக்கும் ஆயிரத்துக்குக் குறைந்து யான் இது வரை வாங்கியதில்லை, அறிவீர்"
காசி: இது என்னாங்க கொடுமை, நான் என்ன கூகிளா நடத்தறேன்? நம்மாளுங்க எல்லாருமே ·ப்ரீ கேசுங்க. இந்தாளு இந்நேரம் தமிழ்ல துட்டு கேட்டுட்டிருக்கான். வாஙக பாத்ரூம் பாகவதர் வீட்டுக்கு ஓடிடுவம்.
பாத்ரூம் பாகவதர்: ஆரு, நம்ம லாசேஞ்சலசப் பத்தியா? அடாடாடா. நன்னாக் கேட்டேள் போங்கோ. மனுஷ்யன் ஜகஜாலக் கில்லாடின்னா. மகா ச்ரேஷ்டன். இச்இச்கலகலா வல்லவன், என்னோட பால்ய நண்பன்னா அவன்?
என்னது? சார் தான் இந்த வார நட்சத்திரமா? அதுக்காகத்தான் இந்தப் பேட்டி கீட்டி எல்லாம் அமர்க்களப்படறதா? ஓஹோ. ஹ¤ம்ம்ம். அடுத்த வாரம் நான் ·ப்ரீன்னு தான் நெனக்கறேன். அம்மாடி மங்களம், அந்தக் கேலண்டரக் கொண்டாடிம்மா. ஆரோ டேட்ஸ் கேட்டு வந்திருக்கா? என்னது? அத அப்றம் பாத்துக்லாம், மொதல்ல இவரப் பத்தி நாலு வார்த்த சொல்லுங்கோங்கறேளா? சரி, ஸொல்லிப்டாப் போச்சு.
மனுஷன் எம்டன். என் பேர வெச்சுத் தன்னைத்தானே ராம் ரொம்ப வெளம்பரப்படுத்திக்கறார்னு வெளிநாட்லேருந்து வர என் ரசிகாள்லாம் பேசிக்றாளே? எனக்கு ஏதானும் ஒரு ராயல்டியானும் தரணும்னு இந்த அபிஷ்டுக்கு ஏன் தோணமாட்டேங்கறது? ஒரு உண்மையப் போட்டு உடைச்சுடட்டுமா?
நீ சும்மா இரு மங்களம். 'செத்த உள்ள வாங்கோ'ன்னு படுத்தாத. உண்மையச் சொல்றதுலே தப்பே இல்லை. நானும் எத்தனை நாள் தான் பொறுத்துப் பொறுத்துப் போகறது?
நட்சத்திரம், திலகம், ராகுகாலம்னு என்ன வேணும்னாலும் நீங்க கொண்டாடுங்கோ, நேக்குப் பொறாமையே இல்லை. இளயராஜாவோட சேர்த்து ராமுக்கும் சங்கீதம் சொல்லிக் குடுத்ததே நான் தான். அப்டியே சம்ஸ்கிருதம், கிரந்தம், கிரேக்கம், ஸ்பானிஷ் அத்தனையும் நான் போட்ட பிச்சை. பீச்சாங்கரைல ஒக்காத்தி வெச்சு நான் தான் அவனுக்கும் சுஜாதாவுக்கும் தமிழ் அட்சராப்யாசம் பண்ணினேன். ஒர்த்தருக்கும் நன்றிங்கறதே கெடையாதுண்ணா வர வர. தர்மமே இல்லை.
என்னது? அப்டியே 'கோட்' பண்ணலாமாவா? எனக்கென்ன பயம்? நன்னாக் 'கோட்' பண்ணுங்கோ. ஒரு படத்துல சான்ஸ் தரேன்னுட்டு இது வரை ஒரு போட்டோ கூடப் புடிக்காதாவாளை நான் அப்டித்தான் சொல்வேன். வால் நட்சத்திரம், வாஸ்துன்னு இந்தாளெல்லாம் ஒசந்துண்டே போலாம், நான் மட்டும் ஒத்தத் தேங்காமூடிக்கு சொங்கிங்க கிட்ட அல்லாடணுமா? எனக்கு ரொம்பப் பத்திண்டு எரியறது. மொதல்ல எடத்தக் காலி பண்ணுங்கோ, என் ·பாரின் சிஷ்யாளெல்லாம் சிட்சைக்கு வர நேரமாய்டுத்து. யாரானும் ரிக்ஷாகாராக்கிட்ட போய்க் கேளுங்கோ அவன் லோக்ளாஸ் பவிஷை"
மைலாப்பூர் கபாலி உற்சாகமாகத் துள்ளி எழுகிறான்.
மைலாப்பூர் கபாலி: இது இன்னாய்யா ஒரு கேள்வி? இன்னாபா கஸ்மாலம், ராம் சாரு, ஆரா? அய்ய, இதான வோணாம்கறது. சல்பேட்டாவுக்கே பேட்டரியா? என் குருநாதரப் பத்தி என்னு கிட்டயே கேட்டு எனுக்கே பட்டன் போடப் பாக்குறியே? அம்ரிக்காவுலேர்ந்து வந்துகிறீங்கற, ஆராச்சியும் சூர்யனுக்கும் சந்த்ரனுக்கும் அறிமொகம் எய்துவாங்களா? உன்க்கு சாரத் தெரியலியின்னா, கூகுள்ல போயி 'losangelesram'னு முட்டிக்கய்யா. வந்துட்டாங்க, மைக்கத் தூக்கிகிட்டுப் பேட்டி எடுக்க.
அடுத்த முதல் அமைச்சர் அண்ணன் ராம் தான்யா. அவிர் வாய்க, வளர்க, வெலுக!
மதி: ஏய் காசி, இது நல்லா இருக்கே? நம்ம ராம் தான் அடுத்த முதலமைச்சராமே? வாங்க, போயி அம்மாகிட்ட இப்பவே போட்டுக் குடுத்துடுவம்.
கோட்டையில் வெய்ட்டிங்கில் ஜெயலலிதா: வாங்க, வாங்க. இந்தப் ப்ரொக்ராமுக்காகத்தான் நான் வெத்து சேதுத்திட்ட வெட்டிக்கால்வாய் கலாட்டாவுக்கே போகாமக் காத்துக்கிட்டிருக்கேன். ஆமா, யாரைப் பத்திப் பேட்டின்னீங்க?
காசி: அம்மா, லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு ...
ஜெயலலிதா: யாராவது ப்ரோக்கரா? லாஸ் ஏஞ்ச்ல்ஸா? அங்க நான் ஒண்ணும் ஹோட்டல் வாங்கலியே இன்னும்?
மதி: இல்லம்மா. அவர்தான் அடுத்த முதல்வர்னு ...
ஜெயலலிதா: வாட் நான்சென்ஸ்? தமிழ்நாட்ல அடிக்கற கூத்து பத்தாதுன்னு இப்ப அமெரிக்காவில இருந்துக்கிட்டு இப்படி ஆரம்பிச்சுட்டாங்களா? இந்த விஜயகாந்த பண்ற அலம்பலே தாங்க முடியலை. தூத்துக்குடிப் பக்கம் போகாம இருக்க ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு உங்களை உள்ள விட்டது தப்பாப் போச்சு. என்ன மேன் மினிஸ்டர், இளிச்சிட்டு நிக்கற, கொழுப்பா? இவங்க தயாநிதி ஆளுங்க. இவங்களை இழுத்துக்கிட்டுப் போய்யா வெளில.
கோட்டையிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியர் டீம் போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு விரைகிறது.
ரஜினி: வாங்க, வாங்க. நான் அமெரிக்கா போயிட்டிருக்கேன், நீங்க இங்க வந்துக்கிட்டே இருக்கீங்க. எல்லாம் ஆன்மீகத்தோட அட்ராக்ஷன் பவர் தான். குருவன்றி ஒரு பருவும் உடையாது. ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா? ஒரு காலத்தில ...
மதி: இல்லீங்க வேணாம். டயம் இல்ல. இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பத்தி ஒரு மினி பேட்டி ...
ரஜினி: (தாடியைச் சொறிந்தபடி) "தெரியாத்தனமா இந்தாளுக்கு என் படத்துல ஒரு சான்ஸ் குடுத்துட்டேம்மா ஒரு தடவை. அவர் அதை வெச்சே பிக்-அப் பண்ணிச் சந்திரமுகி ரேஞ்சுக்குத் தானும் போயிட்டதா நினைச்சுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாருன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அதிலயும் சந்தோஷம் தான். ஏன்னா, நான் எதிலயும் ஆத்ம சந்தோஷம் பாக்கறவன். ஒரு உண்மைய நான் சந்திரமுகி ஐநூறாவது நாள்ல தான் சொல்லணும்னு இருந்தேன். பரவாயில்ல, இப்பயே சொல்லிடறேன். பாகவதர், கபாலி, மங்களம், ஆதிமந்தி அது இதுன்னு இந்த ராம் ஆயிரத்தெட்டு காரக்டர்ல பண்ற அலம்பலப் பாத்துத்தான் நான் சந்திரமுகியப் பத்தியே வாசுவை அட்வான்சா யோசிக்கச் சொன்னேன். ஏன்னா இந்த ராமுக்கும் டீப் மல்ட்டிபிள் டெர்ரிபிள் பர்சனாட்டி டிஸ்ஆர்டர் இருக்குங்கறது எனக்கு அவரோட நடிக்கும்போதே தெரியும். இன்னோரு உண்மையையும் உங்க கிட்ட சொல்லணும்.
இதை நான் விகடன்ல 'ஆழ்கடலுக்குள் அமிர்தானந்த யோகப்ரயோகம்'ங்கற தலைப்புல எழுதறதாயிருக்கேன். விகடன்காரங்க ஆழ்கடலுக்குள்ள போகறதுக்கு உண்டான அதிநவீன சூட்டை அஞ்சு டாலருக்கு எல்லாருக்கும் ·ரீயா நெட்லயே தரப் போறாங்க. நம்பர் ஒன் கொண்டாட்டம் கன்டின்யூஸ்!
விகடன் படிக்கறவங்க எல்லாரும் ஒரு கையில ஆ.வி. மறு கையில ஜு.வியோட அந்த சூட்டைப் போட்டுக்கிட்டு நடுக் கடலுக்குள்ள முழுகினாங்கன்னா, ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே யோகம் பயின்று வரும் பல யோகிகளையும் அங்கே ஆழ்கடல் நடுவால சந்திக்கலாம். எல்லா எம்பிடி ஆளுங்களும் த்ரீடியில திரிஞ்சுக்கிட்டே தெளிவாத் தெரிவாங்க. அந்த விஷயமாத்தான் நானும் ராமை அழைச்சுக்கிட்டு அமெரிக்கக் கடற்கரை ஓரமா ஆராய்ச்சி பண்ணப் போறேன்.
என்ன மதி, அடுத்த படமா? அது பத்தி அங்க சோகமா நின்னு அழுதுக்கிட்டே அல்வா சாப்டுக்கிட்டிருக்காரே, கே. எஸ். ரவிக்குமார், அவரும் நம்ம ராமுக்கும் தோஸ்துதான், அவர் கிட்ட கேளுங்க. வர்ட்டா?"
பக்கத்திலேயே தான் இயக்குனர் மணிரத்தினத்தின் வீடும்.
மணிரத்னம்: நாயகன் பத்தி நான் இப்ப பேசறதாயில்லை. 'டைம்' மேகசைன் ...
காசி: சாரி, சார். நாங்களும் அது பத்திக் கேக்கறதாயில்லை. உங்க ·ப்ரெண்டு எல்லே ராம் பத்தி ...
மணிரத்னம்: ராம் எனக்கு ·ப்ரெண்டு, நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான்.
காசி: இல்ல சார். உங்களை ரொம்பத் தெரிஞ்ச மாதிரி அவர் அப்பப்ப ரீல் விடறாரே, அது பத்தி?
மணிரத்னம்: அவரை ரொம்பத் தெரிஞ்சமாதிரி நான் உங்க கிட்ட ரீல் விட்டேனா? இல்லியே. (சிரிக்கிறார். தமிழ்மண ஆசிரியர் குழு ஒன்றும் புரியாமல் விழிக்கிறது.) நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான். சரியா?
வெளிநாட்டில் ஷ¥ட்டிங்கில் இருக்கும் ஐஸ்வர்யா ராயிடம் பேட்டி தொடர்கிறது:
ஐஸ்வர்யா ராய்: "அய்யோ, அந்த ஆளு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 'ஜீன்ஸ்'ல என் கையப் புடிச்சு அழுத்தின அழுத்தில தான் ப்ராப்ளமே ஆரம்பிச்சுது. அதைப் பார்த்த சல்மான கான் 'ஆருடி உன் கையக் கடிச்சது?'ன்னு இந்தியில கேட்டு ஏக ரகளை. அதையெல்லாம் நான் மறக்க விரும்பறேன். ஆனா ராமை மட்டும் மறக்கவே முடியலை. தினமும் ஒரு தடவையாவது என் கைய நானே தடவிப் பார்த்துக்கிறது வழக்கம். அடிக்கடி அவர் படம் பண்ணினாக்கப் பரவாயில்லை. ஆனா மாட்டேங்கறார். ஏன்னு தான் தெரியலை"
மதி குறுக்கிட்டு, "சான்ஸ் வந்தாத்தானுங்க படம் பண்ண முடியும்? வடிவான உங்களோடு அவர் மறுபடியும் கதைக்க வாய்ப்பு இருக்கிறதா?"
ஐஸ்வர்யா ராய் (வெட்கத்தில் கன்னம் குழிய): அடோபி போட்டோஷாப் புண்ணியத்தில் அது சீக்கிரமே நடந்தாலும் நடக்கலாம்.
இவ்வளவு தூரம் சென்னை வந்துவிட்டு மீனாவைப் பேட்டி காணாவிட்டால் தமிழ்மண வாசகர்கள் எப்படி மன்னிப்பார்கள்?
மீனா: அய்யோ நம்ம எல்லே ராமா? இது வரை நான் ஒரு தடவை தான் எல்லே வந்திருக்கேன், ஆனா நான் எப்ப எல்லே வந்தாலும் அவர் வீட்ல தான் தங்கறது வழக்கம். இப்ப கரெஸ்பாண்டென்ஸ்ல எம்பிஏ முடிச்சுட்டு அப்படியே லண்டன், ஆஸ்திரேலியா எல்லாம் ஒரு வருஷம் போறேன். ஆனாக்க வருஷம் முழுக்க எனக்கு இங்க ஷ¥ட்டிங் இருக்கு. ஆமா, யாரையோ பத்திக் கேட்டீங்களே, அது யாரு? ஓ, மம்மி, அது யாரு மம்மி ராம்? எதுனா ப்ரொட்யூசரா?
இன்னும் ஒரே ஒரு பேட்டியோடு இந்தக் கூத்தை முடித்துக் கொள்ளலாமென்று தமிழ்மண ஆசிரியர் குழு புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறது. சென்னையில எத்தனையோ பிரபலங்களைத் தெரியும்னு ராம் பீலா விடுவாரே, யாரைப் போய்ப் பார்க்கலாம்?
காசி: மதி, அந்த இரா. முருகனைப் போய்ப் பார்க்கலாமா?
மதி: அய்யோ. அவர் வேணாம்.
காசி: அப்ப, அந்தப் பாரா?
மதி: அய்யோ அய்யோ, அவரும் வேணாம். அந்தச் சினிமா போச்டரப் பாருங்க. அந்தப் போண்ணைப் போய்ப் பார்க்கலாம்.
படம் ஏதுமில்லாமல் ஸ்நேகா வீட்டில் அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
பு.பு. இளவரசி: வாஙக, வாங்க, இப்பத்தான் ஷ¥ட்டிங்கில இருந்து வந்தேன். மழையில புடவை மட்டும் நனையற மாதிரி சீன். புடவைக்கு உள்ளாற
நான் இருந்ததால அங்க கவர்ச்சி எல்லாம் காட்டலை.
மதி, காசி: இல்லீங்க, இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு.
பு.பு.இ: தெரியுமே. அவர் படத்துல நான் தான் முதல் கதாநாயகியா புக் ஆகி இருக்கேன். ஹாலிவுட் படமானாலும் குடும்பப் பாங்கான ரோல், அதனால கவர்ச்சியே காட்ட மாட்டேன்.
காசி: அய்யோ, கவர்ச்சிய விடுங்க. அவரப் பத்தி எதுனா சொல்லணுங்களா?
பு.பு.இ: அவரோட ப்ளாக்ல என் படத்தை எல்லாம் பெரிசாப் போட்டுப் பிரமாதப்படுத்தி இருந்தார்னு கேள்விப்பட்டேன். ஹாலிவுட் படம்கறதுனால டூ பீஸ்ல நடிக்கும்படியா இருக்கலாம். இருந்தாலும் நான் கவர்ச்சியே காட்ட ...
தமிழ் மண ஆசிரியர் டீம் தலைதெறிக்க ஓடுகிறது. கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறார்கள்.
காசி: ஒண்ணுமே சரியாத் தேறலியே, அவர் வீட்டுக்கே போன் போட்டு வீட்ல உள்ளவங்களைக் கேட்டுட்டா?
மதி: இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வரதுனால தான் யாஹ¤ மாதிரி நீங்க தமிழ் மணமே நடத்தறீங்க. என்ன பிரில்லியண்ட் ஐடியா! அட்டகாசம். ஆனா, நீங்களே கேட்ருங்க.
தொலைபேசியில் குடும்ப நிகழ்ச்சியின் குறு குறிப்பு:
நிஷாந்த் ராம்: வாட்? என் டாடி ஸ்டாரா? அடப்பாவமே, இப்பத்தான் மைக்ரோசா·ப்ட்ல மாடல்னு அவுங்க ஏமாந்தாங்க, அடுத்தது நீங்களா?
ஜனனி ராம்: யு வாண்ட் மீ டு டாக் சம்திங்க் குட் அபௌட் மை டாட்? ஓ மை காட்! திஸ் ஈஸ் வொர்ஸ் தான் கெமிஸ்ட்ரி அசைண்மெண்ட். ·பார்கெட் இட்.
திருமதி ராம்: கண்டிப்பாச் சொல்றேன். என் புருஷனை மாதிரிப் புத்திசாலி, சமத்து, அழகு யாருமே கிடையாதுங்க. சக்கரைக்கட்டிங்க அவரு. அவரைக் கட்டிக்க நானு ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கேன். என் பூர்வ ஜென்ம புண்ணியம். எல்லாமே விலாவாரியாச் சொல்றேன். ஏங்க, தமிழ்மணத்துல ஒரு வாரம் ஆசிரியர்னா பேமெண்ட் எவ்வளவு? ஒரு பத்தாயிரம் டாலராவது தருவீங்களா?
என்னது, ·ப்ரீயா? போனை வையுங்க மொதல்ல. அந்தாளுக்கும் வேலையில்ல, உங்களுக்கும் வேற வேலையில்ல.
Monday, July 04, 2005
Friday, June 24, 2005
அமெரிக்க அரசியல் (ஜுன் 24, 2005)
ஆயிரத்தெட்டு அவசர வேலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, அவசர அவசரமாக இந்த 'அமெரிக்க அரசியல்' பதிவைப் புதுப்பிக்க என்ன காரணம்? அமெரிக்க-ஈராக் யுத்தத்தின் போக்கு நிரந்தரமாகத் திசை திரும்புவதற்கான முக்கிய கணம் இது தான் என்று நான் நம்புகிறேன். ஈராக் ஒரு வியட்நாமாகவே மாறி விட்டது.
ஈராக் யுத்தம், அதன் தேவையில்லாத் தன்மை, அதன் உண்மையான உட்காரணங்கள், அங்கே அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்தி வரும் பேரழிவு- இவை பற்றிய என் கருத்துகள் இங்கே ஏற்கனவே பல முறை பரிமாறப்பட்டவை தாம்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ், தன் தேசத்தை இந்த ரத்தச் சகதியில் கொண்டு போய் ஆழ்த்தி, இன்னொரு வியட்நாமில் அமெரிக்காவைத் தள்ளிவிட்டுத் தவிக்கவிடப் போகிறார் என்கிற நம் பயம் இப்போது நன்றாகவே உறுதியாகி விட்டது.
கடந்த பல மாதத் தொடர் நிகழ்வுகள் அதை மீண்டும் உறுதி செய்கின்றன. சதாம் ஆதரவாளர்களின் இடைவிடாக் குண்டுவெடிப்புகளும், அப்பாவி அமெரிக்க ராணுவ இளைஞர்களின் தொடர் சாவுகளும் அங்கே முடிகிற வழியாய்த் தெரியவில்லை.
ஈராக் சண்டையின் சூத்திரகர்த்தாக்களில் மிக முக்கியமானவரான அமெரிக்க உப ஜனாதிபதி டிக் செய்னி "இதோ எல்லாம் முடிந்து விட்டது, அடுத்த வாரம் எல்லாமே ஓவர். அதோ பாருங்கள், சமாதானப் புறா பறக்கிறது" என்று கரடி விடுவதையும் நிறுத்துவதாயில்லை.
ஈராக் முதன் மந்திரி இப்ரஹீம்-அல்-ஜா·பரிக்கு இன்று அளித்த வரவேற்பொன்றில் தன் பங்குக்கு புஷ்ஷ¤ம் "சண்டை முடிந்து விட்டதே, இனி எல்லாம் சுகமே" என்று செப்பிடு வித்தை காண்பித்திருக்கிறார். யார் காதில் இவர்கள் இப்படித் தொடர்ந்து பூ சுற்றி வருகிறார்கள்?
'உண்மையில் நடப்பது என்ன?' என்ற 'செனட் ஆர்ம்டு சர்வீசஸ் கமிட்டி' கேள்விக்கு, அந்த வளைகுடா ஏரியாவின் அமெரிக்க முதன்மைக் கமாண்டர் ஜான் அபிஸெய்து என்ன சொல்கிறார்? இந்த ஆர்மி ஜெனரல், ஈராக் யுத்ததின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அங்கே நிகழும் நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியும் கணித்து முடிவெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பில் இருப்பவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச வேண்டிய அரசியல் கட்டாயங்கள் இவருக்கு இல்லை. அவர் சொல்வதாவது:
"கடந்த சில மாதங்களாகவே போராளிகளின் எண்ணிக்கை, அதுவும் பிற நாடுகளிலிருந்து ஈராக்கிற்குள் ஊடுருவி ஆயுதப் போராட்டங்களில் பங்கேற்கும் போராளிகளின் எண்ணிக்கை, அதிகரித்துத்தான் வருகிறது. போராளிகளின் பலத்¨தப் பொறுத்த வரையில், ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் அவ்வளவான வித்தியாசம் இல்¨ல."
அதாவது, சகதியில் விட்ட காலை எடுக்கவும் முடியவில்லை, முன்னேற முடியவில்லை. பின் வாங்கினால் அவமானம், க¡ல் கழுவிக்கொண்டு வெளியே வரவும் வழி இல்லை. இந்த விவகாரத்தின் அநாவசியம், அதர்மம், அநியாயம் குறித்து நான் இப்பொழுது எழுதுவதாயில்லை. தொடர்ந்து 'அமெரிக்க அரசியல்' படிப்பவர்கள் இது பற்றிய என் குமுறல்களை நன்றாகவே அறிவார்கள்.
அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி நேற்று மிகுந்த கோபத்துடன் பேசினார். ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்·பெல்டை ஒரு பிடி பிடித்து விட்டார். "உங்களால் தான் எதுவும் பண்ண முடியவில்லை என்று தெரிகிறதே, பேசாமல் ஒரு கால கடிதாசியைக் கொடுத்து ராஜிநாமா செய்து விட்டு வீட்டுக்குப் போவது தானே? ஏன் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், அமெரிக்காவை இன்னமும் அதிகமான அழிவுப் பாதையை நோக்கித் தொடர்ந்து அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று ரம்ஸ்·பெல்டை நோக்கி அதிரடியாகக் கேட்டார்.
ரம்ஸ்·ப்ல்டு ஒரு பனங்காட்டு நரி. "நான் ஏற்கனவே இரண்டு முறை ராஜிநாமாக் கடிதம் கொடுத்து விட்டேனே, ஜனாதிபதி புஷ் தான் அதை வாங்கிக் கொள்ள மறுக்கிறார். நான் என்ன செய்யட்டும்?" என்கிறார் ரம்ஸ்·பெல்ட். அய்யோ பாவம். இதை விட ஒரு அபத்தமான பதிலை ஒரு பொறுப்புள்ள ராணுவ அமைச்சரால் தர முடியுமா? அத்வானி டைப் அபத்த ராஜிநாமா நாடகம் அமெரிக்காவிலும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இவர் 'சரி' என்கிறாராம், அவர் தான் '§வண்டாம்' என்கிறாராம். அரசியல்வாதிகள் ஆதிசேஷனைப் போல் ஆயிரம் நாக்கு அபூர்வஜீவிகள்!
'ஈராக் போர் உடனடியாக முடிந்து விடும், அது முடிந்து விட்டால், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையில் விலைகள் குறைந்து எல்லா நாடுகளுக்கே சுபிட்சம் ஏற்பட்டு விடும்' என்றெல்லாம் உடுக்கடித்தார்களே, இப்போது என்ன ஆகி இருக்கிறது? சதாமை ஒழித்து விட்டால் அங்கே ஜனநாயகம் மலர்ந்து மணம் பரப்பி விடும் என்றார்களே, இப்போது அங்கே ரத்த வாடை அல்லவா நாற்றமாய நாறுகிறது? ஒரு தலைமுறையே அங்கே நசித்துப் போய்விட்டதே, இப்படிப்பட்ட கொடூரத்தை நிகழ்த்த அமெரிக்கர்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது?
போரின் உண்மை நிலவரத்தை அமெரிக்க மீடியா இன்னமும் 'embedded journalism' முறையிலேயே தான் கவர் பண்ணி வருகிறது. அதாவது அமெரிக்க ராணுவம் அங்கே என்ன நடப்பதாகச் சொல்கிறதோ, அதையே தான் அமெரிக்க மீடியா சிரமேற்கொண்டு சின்சியராகப் பிரசுரித்து வருகிறது. அதுவே இந்த அழகில் இருக்கிறது என்றால், உண்மையான 'உண்மை நிலை' என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
'சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களைக்கூட, எந்தவிதமானப் பொது விசாரிப்பும் இன்றிப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தும் 'குவாண்டநாமோ பே' என்கிற அமெரிக்கக் கொடூரச் சிறைச்சாலையை உடனே மூடி விட§வண்டும். இதனால் சர்வதேச அரங்கில் நமக்கு பாதிப்பு மிக அதிகம்' என்று முன்னாள் ஜனாதிபதிகள் கார்டர் முதல் கிளின் டன் வரை சொல்வது அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.
சிறைச்சாலைகளில் இஸ்லாமியப் பொதுமறையான குரானை அமெரிக்க ராணுவத்தினர் அவமானப்படுத்தியதாக அமெரிக்க ராணுவமே இப்போது ஒப்புக்கொள்கிறது. வெட்கக்கேடு. இந்த ஒரு காரணத்திற்காகவே அத்தனை கைதிகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும்.
போரில் அமெரிக்கா ஜெயித்து வருவதாகக் காட்டிக் கொள்ளவும், தொடர்ந்து போரிடவும், பில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் ஈராக்கில் வாரி இறைக்கப்படுகிறது. செத்து மடியும் அப்பாவி அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எத்தனை லட்சம் ஈராக்கியர்கள் செத்து மடிந்திருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. இன்னமும் எத்தனை அமெரிக்கத் தலைமுறைகள் இதற்காக வட்டியும் முதலுமாகப் பணம் கட்டவேண்டுமோ என்று நினைத்தாலே பதைப்பு தான் மிஞ்சுகிறது.
அங்கே நடந்து வரும் கலாச்சாரப் பேரழிவு பற்றி இப்போது தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது. பாக்தாத் அருங்காட்சியகத்தில் அமெரிக்க ராணுவத்தின் துணையுடன் நடந்து முடிந்த பெரும் ¦காள்ளை சாதாரண அமெரிக்கர்களை வெட்கித் தலை குனிய வைக்கக் கூடிய நிகழ்ச்சி. மனித சரித்திரத் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈராக்கிற்கு இருக்கும் இடம் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. சரித்திர, வரலாற்று முக்கியத்துவம் வ¡ய்ந்த பல இராக்கிய இடங்களில் இன்னமும் தொடர் கொள்ளைகள் நடைபெறுவதாக பிபிசி புலம்ப ஆரம்பித்திருகிறது.
********* ********* *********
சரி, ஈராக் விவகாரமும் வியட்நாம் மாதிரி ஆகி விட்டதாக நான் நினைப்பதால் இனி என்ன நடக்கலாம்?
'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்லிக்கொள்ள அரசியல் கமிட்டிகள் அமைக்கப்படலாம். அவை இன்னும் கொஞ்சம் வரிப் பணத்தைச் செலவழித்த பின், 'சரி, ஈராக்கில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது. நம் கடமை முடிந்து விட்டது. கட்டுப்பாடு மிக்க நாம், கண்ணியத்துடன் வாபஸ் பெறலாம்' என்று முடிவெடுக்கலாம். அதைக் க¡ரணம் காட்டிப் போர் நிறுத்தம் ஏற்படலாம். கொள்ளை அடிப்பதற்கு இன்னமும் மீதம் ஒன்றுமில்லை என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ஏற்கனவே பல சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் சாதாரண அமெரிக்கர்களின் ஈராக் போர் எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமாகித்தான் வருகிறது. அதையே ஒரு காரணமாகக் காட்டிக் கூட சேற்றில் வைத்த காலை அங்கேயே வெட்டிப்போட்டு விட்டு வெளியே நொண்டிக்கொண்டு வர முயற்சிகள் தீவிரம் ஆகலாம்.
இருக்கவே இருக்கிறார் பிரிட்டிஷ் அதிபர் டோனி ப்ளேர். இந்த விவகாரத்தினால் தன் நாடும், கட்சியும் அடைந்த பின்னடைவுகளை நன்றாகவே அறிந்தவர். அவர் மூலம் ஐ.நாவில் ஏதாவது நல்ல பிள்ளை சர்ட்டி·பிகேட் வாங்கிக் கெ¡ண்டு, 'போதும் ·பிலிம் காட்டியது' என்று இயக்குனர் புஷ் 'பேக் -அப்' சொல்லலாம்.
அல்லது, இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்கு இந்த நாடகத்தைத் தொடர்ந்து விட்டு, அடுத்து வரப்போகிற ஜனநாயகக் கட்சியின் தலையில் இந்தச் சுமையை ஏற்றி விடலாம்.
ஒரு இருபது, முப்பது வருடங்கள் கழிந்த பின்னர், ஈராக் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்பதாக அமெரிக்க அரசாங்கமே ஒரு தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே, ஜப்பானியர்களிடம், கொரியர்களிடம், யட்நாமியர்களிடமெல்லாம் அப்படிக் கேட்டுக் கொண்டாகி விட்டது.
எது எப்படியோ, ஆயில் கம்பெனிகளின் வியாபாரம் மட்டும் அமோகமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தச் சண்டையின் ரிஷிமூலமே அதுதானே!
இந்தியக் கிராமங்களில் குப்பனும் சுப்பனும் மண்ணெண்ணெய்க்காக இன்றும் ஆலாய்ப் பறக்கிறான். இந்திய நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் ஆகாயத்தைத் தொடுகின்றன. அமெரிக்காவிலே வாழ்கிற நாங்கள் கூட 'இத்தனை தூரம் இன்றைக்கு அங்கே போகத்தான் வேண்டுமா? ஏற்கனவே காரில் காஸ் டேங்க் எம்ப்டியிலே நிற்கிறதே' என்று தினந்தோறும் கவலைப்பட ஆரம்பித்தாகி விட்டது. கடந்த ஒரே வருடத்தில் பெட்ரோல் விலைகள் இங்கே இரண்டு மடங்கைத் தாண்டி விட்டன. பெட்ரோல் விலை விஷம் மாதிரி டாலர் கணக்கில் ஏறுகையில் மீடியா கொஞ்சமாக முணுமுணுக்கும். அபூர்வமாக எங்கேயாவது ஒரு ஐந்து பைசா குறைந்து விட்டால், 'ஆஹா, விலைவாசியே குறைந்து விட்டது' என்று கட்டம் கட்டிப் பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் ஜல்லி அடிக்கிறார்கள். ஆயில் கம்பெனிகளின் ராட்சதப் பாக்கெட்டுகளுக்குள் மீடியா கம்பெனிகள் ஐக்கியமாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஐயோ பாவம், திருவாளர் பொதுஜனம் தான்!
'ரயில்' என்றால் 'என்ன அது, ஏதாவது புது மாதிரி லஞ்ச் பதார்த்தமா?' என்று கிண்டலாகக் கேட்கக்கூடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரவாசிகள், காரில் போவது கட்டுபடி ஆகாமல், மூன்று ரயில், இரண்டு பஸ் பிடித்து ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டார்கள். அவுட்போர்டில் தொங்குவது மட்டும் தான் இன்னும் பாக்கி. கச்சா எண்ணெய் விலைகள் இன்னமும் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றன. சர்வதேசச் சுரண்டல் திமிங்கில ஆயில் கம்பெனிகளைத் தவிர வேறு யாருக்குமே இதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஈராக் யுத்தம், அதன் தேவையில்லாத் தன்மை, அதன் உண்மையான உட்காரணங்கள், அங்கே அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்தி வரும் பேரழிவு- இவை பற்றிய என் கருத்துகள் இங்கே ஏற்கனவே பல முறை பரிமாறப்பட்டவை தாம்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ், தன் தேசத்தை இந்த ரத்தச் சகதியில் கொண்டு போய் ஆழ்த்தி, இன்னொரு வியட்நாமில் அமெரிக்காவைத் தள்ளிவிட்டுத் தவிக்கவிடப் போகிறார் என்கிற நம் பயம் இப்போது நன்றாகவே உறுதியாகி விட்டது.
கடந்த பல மாதத் தொடர் நிகழ்வுகள் அதை மீண்டும் உறுதி செய்கின்றன. சதாம் ஆதரவாளர்களின் இடைவிடாக் குண்டுவெடிப்புகளும், அப்பாவி அமெரிக்க ராணுவ இளைஞர்களின் தொடர் சாவுகளும் அங்கே முடிகிற வழியாய்த் தெரியவில்லை.
ஈராக் சண்டையின் சூத்திரகர்த்தாக்களில் மிக முக்கியமானவரான அமெரிக்க உப ஜனாதிபதி டிக் செய்னி "இதோ எல்லாம் முடிந்து விட்டது, அடுத்த வாரம் எல்லாமே ஓவர். அதோ பாருங்கள், சமாதானப் புறா பறக்கிறது" என்று கரடி விடுவதையும் நிறுத்துவதாயில்லை.
ஈராக் முதன் மந்திரி இப்ரஹீம்-அல்-ஜா·பரிக்கு இன்று அளித்த வரவேற்பொன்றில் தன் பங்குக்கு புஷ்ஷ¤ம் "சண்டை முடிந்து விட்டதே, இனி எல்லாம் சுகமே" என்று செப்பிடு வித்தை காண்பித்திருக்கிறார். யார் காதில் இவர்கள் இப்படித் தொடர்ந்து பூ சுற்றி வருகிறார்கள்?
'உண்மையில் நடப்பது என்ன?' என்ற 'செனட் ஆர்ம்டு சர்வீசஸ் கமிட்டி' கேள்விக்கு, அந்த வளைகுடா ஏரியாவின் அமெரிக்க முதன்மைக் கமாண்டர் ஜான் அபிஸெய்து என்ன சொல்கிறார்? இந்த ஆர்மி ஜெனரல், ஈராக் யுத்ததின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அங்கே நிகழும் நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியும் கணித்து முடிவெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பில் இருப்பவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச வேண்டிய அரசியல் கட்டாயங்கள் இவருக்கு இல்லை. அவர் சொல்வதாவது:
"கடந்த சில மாதங்களாகவே போராளிகளின் எண்ணிக்கை, அதுவும் பிற நாடுகளிலிருந்து ஈராக்கிற்குள் ஊடுருவி ஆயுதப் போராட்டங்களில் பங்கேற்கும் போராளிகளின் எண்ணிக்கை, அதிகரித்துத்தான் வருகிறது. போராளிகளின் பலத்¨தப் பொறுத்த வரையில், ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் அவ்வளவான வித்தியாசம் இல்¨ல."
அதாவது, சகதியில் விட்ட காலை எடுக்கவும் முடியவில்லை, முன்னேற முடியவில்லை. பின் வாங்கினால் அவமானம், க¡ல் கழுவிக்கொண்டு வெளியே வரவும் வழி இல்லை. இந்த விவகாரத்தின் அநாவசியம், அதர்மம், அநியாயம் குறித்து நான் இப்பொழுது எழுதுவதாயில்லை. தொடர்ந்து 'அமெரிக்க அரசியல்' படிப்பவர்கள் இது பற்றிய என் குமுறல்களை நன்றாகவே அறிவார்கள்.
அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி நேற்று மிகுந்த கோபத்துடன் பேசினார். ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்·பெல்டை ஒரு பிடி பிடித்து விட்டார். "உங்களால் தான் எதுவும் பண்ண முடியவில்லை என்று தெரிகிறதே, பேசாமல் ஒரு கால கடிதாசியைக் கொடுத்து ராஜிநாமா செய்து விட்டு வீட்டுக்குப் போவது தானே? ஏன் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், அமெரிக்காவை இன்னமும் அதிகமான அழிவுப் பாதையை நோக்கித் தொடர்ந்து அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று ரம்ஸ்·பெல்டை நோக்கி அதிரடியாகக் கேட்டார்.
ரம்ஸ்·ப்ல்டு ஒரு பனங்காட்டு நரி. "நான் ஏற்கனவே இரண்டு முறை ராஜிநாமாக் கடிதம் கொடுத்து விட்டேனே, ஜனாதிபதி புஷ் தான் அதை வாங்கிக் கொள்ள மறுக்கிறார். நான் என்ன செய்யட்டும்?" என்கிறார் ரம்ஸ்·பெல்ட். அய்யோ பாவம். இதை விட ஒரு அபத்தமான பதிலை ஒரு பொறுப்புள்ள ராணுவ அமைச்சரால் தர முடியுமா? அத்வானி டைப் அபத்த ராஜிநாமா நாடகம் அமெரிக்காவிலும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இவர் 'சரி' என்கிறாராம், அவர் தான் '§வண்டாம்' என்கிறாராம். அரசியல்வாதிகள் ஆதிசேஷனைப் போல் ஆயிரம் நாக்கு அபூர்வஜீவிகள்!
'ஈராக் போர் உடனடியாக முடிந்து விடும், அது முடிந்து விட்டால், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையில் விலைகள் குறைந்து எல்லா நாடுகளுக்கே சுபிட்சம் ஏற்பட்டு விடும்' என்றெல்லாம் உடுக்கடித்தார்களே, இப்போது என்ன ஆகி இருக்கிறது? சதாமை ஒழித்து விட்டால் அங்கே ஜனநாயகம் மலர்ந்து மணம் பரப்பி விடும் என்றார்களே, இப்போது அங்கே ரத்த வாடை அல்லவா நாற்றமாய நாறுகிறது? ஒரு தலைமுறையே அங்கே நசித்துப் போய்விட்டதே, இப்படிப்பட்ட கொடூரத்தை நிகழ்த்த அமெரிக்கர்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது?
போரின் உண்மை நிலவரத்தை அமெரிக்க மீடியா இன்னமும் 'embedded journalism' முறையிலேயே தான் கவர் பண்ணி வருகிறது. அதாவது அமெரிக்க ராணுவம் அங்கே என்ன நடப்பதாகச் சொல்கிறதோ, அதையே தான் அமெரிக்க மீடியா சிரமேற்கொண்டு சின்சியராகப் பிரசுரித்து வருகிறது. அதுவே இந்த அழகில் இருக்கிறது என்றால், உண்மையான 'உண்மை நிலை' என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
'சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களைக்கூட, எந்தவிதமானப் பொது விசாரிப்பும் இன்றிப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தும் 'குவாண்டநாமோ பே' என்கிற அமெரிக்கக் கொடூரச் சிறைச்சாலையை உடனே மூடி விட§வண்டும். இதனால் சர்வதேச அரங்கில் நமக்கு பாதிப்பு மிக அதிகம்' என்று முன்னாள் ஜனாதிபதிகள் கார்டர் முதல் கிளின் டன் வரை சொல்வது அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.
சிறைச்சாலைகளில் இஸ்லாமியப் பொதுமறையான குரானை அமெரிக்க ராணுவத்தினர் அவமானப்படுத்தியதாக அமெரிக்க ராணுவமே இப்போது ஒப்புக்கொள்கிறது. வெட்கக்கேடு. இந்த ஒரு காரணத்திற்காகவே அத்தனை கைதிகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும்.
போரில் அமெரிக்கா ஜெயித்து வருவதாகக் காட்டிக் கொள்ளவும், தொடர்ந்து போரிடவும், பில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் ஈராக்கில் வாரி இறைக்கப்படுகிறது. செத்து மடியும் அப்பாவி அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எத்தனை லட்சம் ஈராக்கியர்கள் செத்து மடிந்திருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. இன்னமும் எத்தனை அமெரிக்கத் தலைமுறைகள் இதற்காக வட்டியும் முதலுமாகப் பணம் கட்டவேண்டுமோ என்று நினைத்தாலே பதைப்பு தான் மிஞ்சுகிறது.
அங்கே நடந்து வரும் கலாச்சாரப் பேரழிவு பற்றி இப்போது தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது. பாக்தாத் அருங்காட்சியகத்தில் அமெரிக்க ராணுவத்தின் துணையுடன் நடந்து முடிந்த பெரும் ¦காள்ளை சாதாரண அமெரிக்கர்களை வெட்கித் தலை குனிய வைக்கக் கூடிய நிகழ்ச்சி. மனித சரித்திரத் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈராக்கிற்கு இருக்கும் இடம் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. சரித்திர, வரலாற்று முக்கியத்துவம் வ¡ய்ந்த பல இராக்கிய இடங்களில் இன்னமும் தொடர் கொள்ளைகள் நடைபெறுவதாக பிபிசி புலம்ப ஆரம்பித்திருகிறது.
********* ********* *********
சரி, ஈராக் விவகாரமும் வியட்நாம் மாதிரி ஆகி விட்டதாக நான் நினைப்பதால் இனி என்ன நடக்கலாம்?
'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்லிக்கொள்ள அரசியல் கமிட்டிகள் அமைக்கப்படலாம். அவை இன்னும் கொஞ்சம் வரிப் பணத்தைச் செலவழித்த பின், 'சரி, ஈராக்கில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது. நம் கடமை முடிந்து விட்டது. கட்டுப்பாடு மிக்க நாம், கண்ணியத்துடன் வாபஸ் பெறலாம்' என்று முடிவெடுக்கலாம். அதைக் க¡ரணம் காட்டிப் போர் நிறுத்தம் ஏற்படலாம். கொள்ளை அடிப்பதற்கு இன்னமும் மீதம் ஒன்றுமில்லை என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ஏற்கனவே பல சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் சாதாரண அமெரிக்கர்களின் ஈராக் போர் எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமாகித்தான் வருகிறது. அதையே ஒரு காரணமாகக் காட்டிக் கூட சேற்றில் வைத்த காலை அங்கேயே வெட்டிப்போட்டு விட்டு வெளியே நொண்டிக்கொண்டு வர முயற்சிகள் தீவிரம் ஆகலாம்.
இருக்கவே இருக்கிறார் பிரிட்டிஷ் அதிபர் டோனி ப்ளேர். இந்த விவகாரத்தினால் தன் நாடும், கட்சியும் அடைந்த பின்னடைவுகளை நன்றாகவே அறிந்தவர். அவர் மூலம் ஐ.நாவில் ஏதாவது நல்ல பிள்ளை சர்ட்டி·பிகேட் வாங்கிக் கெ¡ண்டு, 'போதும் ·பிலிம் காட்டியது' என்று இயக்குனர் புஷ் 'பேக் -அப்' சொல்லலாம்.
அல்லது, இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்கு இந்த நாடகத்தைத் தொடர்ந்து விட்டு, அடுத்து வரப்போகிற ஜனநாயகக் கட்சியின் தலையில் இந்தச் சுமையை ஏற்றி விடலாம்.
ஒரு இருபது, முப்பது வருடங்கள் கழிந்த பின்னர், ஈராக் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்பதாக அமெரிக்க அரசாங்கமே ஒரு தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே, ஜப்பானியர்களிடம், கொரியர்களிடம், யட்நாமியர்களிடமெல்லாம் அப்படிக் கேட்டுக் கொண்டாகி விட்டது.
எது எப்படியோ, ஆயில் கம்பெனிகளின் வியாபாரம் மட்டும் அமோகமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தச் சண்டையின் ரிஷிமூலமே அதுதானே!
இந்தியக் கிராமங்களில் குப்பனும் சுப்பனும் மண்ணெண்ணெய்க்காக இன்றும் ஆலாய்ப் பறக்கிறான். இந்திய நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் ஆகாயத்தைத் தொடுகின்றன. அமெரிக்காவிலே வாழ்கிற நாங்கள் கூட 'இத்தனை தூரம் இன்றைக்கு அங்கே போகத்தான் வேண்டுமா? ஏற்கனவே காரில் காஸ் டேங்க் எம்ப்டியிலே நிற்கிறதே' என்று தினந்தோறும் கவலைப்பட ஆரம்பித்தாகி விட்டது. கடந்த ஒரே வருடத்தில் பெட்ரோல் விலைகள் இங்கே இரண்டு மடங்கைத் தாண்டி விட்டன. பெட்ரோல் விலை விஷம் மாதிரி டாலர் கணக்கில் ஏறுகையில் மீடியா கொஞ்சமாக முணுமுணுக்கும். அபூர்வமாக எங்கேயாவது ஒரு ஐந்து பைசா குறைந்து விட்டால், 'ஆஹா, விலைவாசியே குறைந்து விட்டது' என்று கட்டம் கட்டிப் பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் ஜல்லி அடிக்கிறார்கள். ஆயில் கம்பெனிகளின் ராட்சதப் பாக்கெட்டுகளுக்குள் மீடியா கம்பெனிகள் ஐக்கியமாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஐயோ பாவம், திருவாளர் பொதுஜனம் தான்!
'ரயில்' என்றால் 'என்ன அது, ஏதாவது புது மாதிரி லஞ்ச் பதார்த்தமா?' என்று கிண்டலாகக் கேட்கக்கூடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரவாசிகள், காரில் போவது கட்டுபடி ஆகாமல், மூன்று ரயில், இரண்டு பஸ் பிடித்து ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டார்கள். அவுட்போர்டில் தொங்குவது மட்டும் தான் இன்னும் பாக்கி. கச்சா எண்ணெய் விலைகள் இன்னமும் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றன. சர்வதேசச் சுரண்டல் திமிங்கில ஆயில் கம்பெனிகளைத் தவிர வேறு யாருக்குமே இதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.
Sunday, June 05, 2005
கேளுங்கள், கொடுக்கப்படும்!
சாதாரணமாக நான் செய்யும் தான, தரும காரியங்களைப் பற்றி வெளியே பீற்றிக் கொள்வது கிடையாது.
ஒரே ஒரு ஓட்டைத் தையல் மெஷினையோ, உடைசல் குடையையோ கொடுத்து விட்டு, நான் ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு, பெரிதாகப் போட்டோ எடுத்து, ஒரு பக்க அளவில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்வது கிடையாது. 'மீனம்பாக்கத்தில் தரை இறங்கும்போது எனக்கு டவர் உயரத்தில் கட் அவுட் வைத்தால் தான் நான் மேற்கொண்டு அமெரிக்காவிலிருந்து வழக்கமாக அனுப்பும் பத்து ரூபாய்க் காசோலையைத் தருவேன்' என்று 'உதவும் கரங்களு'க்குத் திகிலூட்ட மாட்டேன்.
சின்ன வயதிலிருந்தே இப்படி ஒரு நல்ல வழக்கம் என் ரத்தத்தில் பின்னிப் பிணைந்து விட்டது.
மூன்றாம் கிளாசில் பக்கத்து சீட் ஷீலாவுக்கு ஒரு பல்ப்பம் கொடுத்ததைக் கூட நான் வாத்தியாருக்குத் தெரியாமல் தான் கொடுத்தேன். அவளும் கண்களில் நன்றியோடு என்னை அன்று நோக்கியதை நான் இன்றும் மறக்க முடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் என் கணித விடைத் தாளை நான் அன்வர் பாஷாவிடம் பகிர்ந்து கொண்டதும் அப்படியே. அவனும் என்னை மாதிரியே ஒரு அழகான முட்டை வாங்கியதில் இருவருமே ஆனந்தித்தோம்.
கல்லூரியிலும் இதே பரோபகார வாழ்க்கை முறை தொடர்ந்தது. ரமாபிரபாவுக்கு நான் கொடுத்த 'இச்' பற்றி அவளும் யாரிடமும் மூச்சு விடவில்லை.
ஆமாம், இதையெல்லாம் எதற்கு இங்கே இவ்வளவு விலாவாரியாக நான் இப்போது சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. இல்லாமல் நான் செய்வேனா?
தரும் சிந்தனை மேலிட்டதால், என் கொள்கைப் பிடிப்பை- 'வலது கையால் கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது' என்கிற பாலிசியை- நான் இப்போது சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதாவது, நான் செய்யவிருக்கும் ஒரு தரும் காரியத்திற்காகக் கொஞ்சம் விளம்பரம் தேவையாகிறது.
கடமையை நன்றாக ஆற்றுவதற்காகக் கொஞ்சம் 'அப்படி, இப்படி' இருப்பதில் தவறில்லை என்று கீதையில் பகவான் சொல்லியிருப்பதாக ரஜினிகாந்த ஒரு முறை என்னிடம் கூறி இருக்கிறார்.
'அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' ரேஞ்சில் இருக்கப் போகிறது இந்த உதவி. ஜாதி, மத பேதமில்லாமல். ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல்.
இது பல்ப்பத்திலும் பெரிது. கணித விடைத்தாளை விட உயர்ந்தது. 'இச்'சினும் இனிமையானது.
ஏழெட்டு பரம்பரைக்குப் போதுமான அளவில் உதவி செய்யப் போகிறேன்.
இப்போது வாங்கிக் கொள்பவர்கள் உடனேயே வாழ்த்தாவிட்டாலும் அவர்கள் குலமாவது என் பெயர் சொல்லி வாழ்த்தும். என்னையே குல தெய்வமாகவும் கொண்டாடும்.
பாடாவதி ஹாட்மெயிலையும், இன்னும் படா பேஜார் ஈமெயில் அக்கவுண்டுகளையும் கட்டிக்கொண்டு மாரடிக்கும் பலருக்கும், ஏன், கணினிஞான சூன்யங்களுக்கும் கூட நான் உதவி செய்வதாக உத்தேசித்திருக்கிறேன். கேட்பவர்கள் அனைவருக்கும் இரண்டு கிகாபைட்டுகள் வரை கொள்ளளவு கொண்ட ஜிமெயில் அக்கவுண்டுகளைத் தாரை வார்க்க நான் உத்தேசித்திருக்கிறேன்.
கேளுங்கள், கொடுக்கப்படும்.
தட்டுங்கள், திறக்கப்படும். கதவு விலாசம்: losangelesram~at~gmail.com
தயவு செய்து எனக்குப் பாராட்டு விழாக்கள் வைக்காதீர்கள். ஏற்கனவே எனக்குக் கூச்ச சுபாவம். ப்ளீஸ். உங்கள் புரிதலுக்கு நன்றி.
ஒரே ஒரு ஓட்டைத் தையல் மெஷினையோ, உடைசல் குடையையோ கொடுத்து விட்டு, நான் ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு, பெரிதாகப் போட்டோ எடுத்து, ஒரு பக்க அளவில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்வது கிடையாது. 'மீனம்பாக்கத்தில் தரை இறங்கும்போது எனக்கு டவர் உயரத்தில் கட் அவுட் வைத்தால் தான் நான் மேற்கொண்டு அமெரிக்காவிலிருந்து வழக்கமாக அனுப்பும் பத்து ரூபாய்க் காசோலையைத் தருவேன்' என்று 'உதவும் கரங்களு'க்குத் திகிலூட்ட மாட்டேன்.
சின்ன வயதிலிருந்தே இப்படி ஒரு நல்ல வழக்கம் என் ரத்தத்தில் பின்னிப் பிணைந்து விட்டது.
மூன்றாம் கிளாசில் பக்கத்து சீட் ஷீலாவுக்கு ஒரு பல்ப்பம் கொடுத்ததைக் கூட நான் வாத்தியாருக்குத் தெரியாமல் தான் கொடுத்தேன். அவளும் கண்களில் நன்றியோடு என்னை அன்று நோக்கியதை நான் இன்றும் மறக்க முடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் என் கணித விடைத் தாளை நான் அன்வர் பாஷாவிடம் பகிர்ந்து கொண்டதும் அப்படியே. அவனும் என்னை மாதிரியே ஒரு அழகான முட்டை வாங்கியதில் இருவருமே ஆனந்தித்தோம்.
கல்லூரியிலும் இதே பரோபகார வாழ்க்கை முறை தொடர்ந்தது. ரமாபிரபாவுக்கு நான் கொடுத்த 'இச்' பற்றி அவளும் யாரிடமும் மூச்சு விடவில்லை.
ஆமாம், இதையெல்லாம் எதற்கு இங்கே இவ்வளவு விலாவாரியாக நான் இப்போது சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. இல்லாமல் நான் செய்வேனா?
தரும் சிந்தனை மேலிட்டதால், என் கொள்கைப் பிடிப்பை- 'வலது கையால் கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது' என்கிற பாலிசியை- நான் இப்போது சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதாவது, நான் செய்யவிருக்கும் ஒரு தரும் காரியத்திற்காகக் கொஞ்சம் விளம்பரம் தேவையாகிறது.
கடமையை நன்றாக ஆற்றுவதற்காகக் கொஞ்சம் 'அப்படி, இப்படி' இருப்பதில் தவறில்லை என்று கீதையில் பகவான் சொல்லியிருப்பதாக ரஜினிகாந்த ஒரு முறை என்னிடம் கூறி இருக்கிறார்.
'அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' ரேஞ்சில் இருக்கப் போகிறது இந்த உதவி. ஜாதி, மத பேதமில்லாமல். ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல்.
இது பல்ப்பத்திலும் பெரிது. கணித விடைத்தாளை விட உயர்ந்தது. 'இச்'சினும் இனிமையானது.
ஏழெட்டு பரம்பரைக்குப் போதுமான அளவில் உதவி செய்யப் போகிறேன்.
இப்போது வாங்கிக் கொள்பவர்கள் உடனேயே வாழ்த்தாவிட்டாலும் அவர்கள் குலமாவது என் பெயர் சொல்லி வாழ்த்தும். என்னையே குல தெய்வமாகவும் கொண்டாடும்.
பாடாவதி ஹாட்மெயிலையும், இன்னும் படா பேஜார் ஈமெயில் அக்கவுண்டுகளையும் கட்டிக்கொண்டு மாரடிக்கும் பலருக்கும், ஏன், கணினிஞான சூன்யங்களுக்கும் கூட நான் உதவி செய்வதாக உத்தேசித்திருக்கிறேன். கேட்பவர்கள் அனைவருக்கும் இரண்டு கிகாபைட்டுகள் வரை கொள்ளளவு கொண்ட ஜிமெயில் அக்கவுண்டுகளைத் தாரை வார்க்க நான் உத்தேசித்திருக்கிறேன்.
கேளுங்கள், கொடுக்கப்படும்.
தட்டுங்கள், திறக்கப்படும். கதவு விலாசம்: losangelesram~at~gmail.com
தயவு செய்து எனக்குப் பாராட்டு விழாக்கள் வைக்காதீர்கள். ஏற்கனவே எனக்குக் கூச்ச சுபாவம். ப்ளீஸ். உங்கள் புரிதலுக்கு நன்றி.
Friday, June 03, 2005
'செல்', கவனி, காதலி! -3
அந்த முகமறியா வில்லந்நியனுடன் பேசும்போது நான் கலவரப்பட்டதற்கு மிகத் தெளிவான காரணங்கள் இருக்கின்றன.
தொலைந்து போன என்னுடைய மாஜி 'லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட்' செல் போனில் என் அருமை இந்திய/அமெரிக்க/இதர துணைக் கண்ட நண்பர்களின் முகவரிகளும், பால் வடியும் முகங்களும், ஈமெயில் முகவரிகள், ஏன், இன்னும் சில அந்தரங்கக் குறிப்புகள், சாட் மெசேஜ்கள் கூடத் தெரியும். வில்லங்கத்தனமாக அவன் ஏதேனும் செய்ய முற்பட்டால் என்ன செய்வது?
"ஒரு பிசாத்து போனுக்கு இவ்வளவு காசு குடுத்து வாங்கறதுக்குப் பதிலா அந்த மாங்கா மாலைக்கு மேட்சா ப்ளாட்டினத்துல ஒரு ஒட்டியாணமாவது பண்ணிண்டிருக்கலாம். நாட்ல அவனவன் ஃப்ரீ போன் வாங்கிண்டிருக்கும்போது உங்களுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான போன்? அப்படி யார் கிட்டத்தான் அவ்வளவு நேரம் பேசறேள் ஹி ஹின்னு? ஆனாக்க நான் எப்பக் கூப்பிட்டாலும் ஏன் அது உடனேயே டிஸ்கனெக்ட் ஆயிடறது?" -மூன்று மாதத்திற்கு முந்தையக் குடும்ப் வசனம் மனதில் ஓடியது.
என் மனசு என்னென்னவோ எதிர்காலக் கற்பனைகளில் பயந்தது.
*********
ஏவிஎம் மூன்றாவது ஃப்ளோரில் சரியான மழை. மேலேயிருந்து பொத்துக்கொண்டு கொட்டுகிறது. குடும்பப் பாங்கான ரேஷன் உடையில் நனைந்தபடி மணாளனை நினைத்து முனகிக் கொண்டிருக்கிறாள் அவள். ஹீரோயினுக்கு மட்டும் வெந்நீர் கொட்டுகிறது. தோழிப் பெண்களெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமளவுக்குக் காலையிலிருந்து நனைந்து வெடவெடக்கின்றனர்.
செட்டுக்கு வெளியே அந்தப் பெண்ணுடைய பிரத்தியேக செல் அடிக்கிறது. ஊஹும், அவள் போன் அடிக்காது. என் போனிலிருந்து கூப்பிட்டால் ஒரு பிரத்தியேக ரிங் டோனில் கொஞ்சும், கொஞ்சிப் பாடும்.
"அந்த போன் மட்டும் ரொம்ப ஸ்பெஷல். எப்ப அடிச்சாலும் உடனே என் கிட்ட எடுத்தாந்து கொடுத்துரணும், தெரியுதா? ஷாட்ல இருந்தாக்கூட நடுவுல எடுத்துட்டு வா" என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கும் டச்-அப் பெண் பவ்யமாகப் போனை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு உடல் பதறியபடியே 'ஷாட்' நடுவில் நுழைகிறது.
"யக்கா, யக்கா! அவர் கிட்டேருந்து போனு"
30,000 வாட் வெளிச்ச வட்டத்தில் கையில் போனுடன் டச் அப்.
முனகல் நிற்கிறது. கதாநாயகி சிவந்து போகிறாள். "அவர் கிட்டேருந்தா? சீக்ரம் குடு"
"ஏய் யாருப்பா அறிவில்லாம ஷாட்டுக்கு ஊடால பூர்ரது? கட், கட், கட். அந்தக் குட்டிய செவிள்ல அறைடா"
"லைட்ஸ் ஆஃப்"
"ஃபேன் ஆன்"
"சாரி மேடம், உங்க டச்சப்பா? அதனால பரவாயில்லை. இன்னோரு டேக் போயிருவம். நீங்க பேசிக்குங்க. டேய், ஜூஸ் குடுத்தியாடா?"
"மாஸ்டர், இன்னிக்குள்ளார முடிச்சிருவமா? கந்துவட்டிக்காரன் ஸ்டுடியோ வாசல்லயே சேர் போட்டு உக்காந்திருக்கான். கழுத்துல துண்டு போட்ருவான்"
எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஈரக் கிளி போனில் கொஞ்ச ஆரம்பிக்கிறது. ஹேர் டிரஸ்ஸர் ஓடி வந்து தலையைத் துவட்டுகிறார். இன்னொரு எடுபிடி ஃப்ளாஸ்கைத் திறக்கிறது.
வெட்கத்துடன் சிரித்தபடி, "என்னங்க, வேற ஆக்செண்ட் எல்லாம் போட்டு இன்னிக்கு அசத்தறீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்க தொண்டைக்கு?"
வில்ல மகா மெக்சிகப் பாவி என்னென்னவோ கேட்க ஆரம்பிக்கிறான். "சீச்சீ. போப்பா, அய்யோ, எனக்கு வெக்கமாயிருக்கு"
அய்யகோ, ஈதெல்லாம் எனக்குத் தேவையா? எங்கு போய் முட்டிக் கொள்வேன்?
சைனா டவுனுக்கு வர நினைத்ததே தப்பு. வந்தது ம்கா முட்டாள்தனம். ஏற்கனவே லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை காரணம் கேட்டுக் கொல்லுகிறார்கள். தனி மெயிலில் காதைத் திருகுகிறார்கள். இந்த அழகில், எத்தனை பேருக்கு நான் என்ன காரணம் சொல்லி, எப்படி சமாளிக்கப் போகிறேன்?
உண்மையைச் சொல்லி விடவா? சிம்பிள் மேட்டர் தானே இது? எல்லோருக்கும் தேவையான, தெரிந்த காரணம் தானே? வில்லிவாக்கத்தில் இருந்தால் என்ன, ஐரோப்பாவில் குப்பை கொட்டினால் என்ன, இது வாழ்வின் ஆதாரத் தேவை தானே?
ஊஹும். வேண்டாம். நல்லதுக்குக் காலமில்லை.
'எடுக்கவோ, கோர்க்கவோ?' காலமா இது? இல்லையே. இண்டர்நெட் கலி காலமாயிற்றே. 'சாட்'டில் ஒரு பெண் கூப்பிட்டாலே 'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? நான் எவ்வளவு பெரிய நிரபராதி, வடி கட்டின சமர்த்து என்பதை எப்படி என் நண்ப நண்பிகளுக்கும், ரசிக, ரசிகைகளுக்கும் தெரிவிக்கப் போகிறேன்?
காலம் வரும். காத்திருப்போம்.
**********
செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.
கோபம், எரிச்சல், கெஞ்சல் என்று கலங்கலாகப் பேசினேன்.
"செல்லெல்லாம் செண்பகப்பூ தானே, எந்தப் ப்ரெட்டி கேர்ள்ரா? குறிப்பா யாரச் சொல்ற மவனே, வெளயாடாத. போன வெச்சிரு. இல்ல. இல்ல. போனை வெச்சிராத. ஹலோ சார், என் போன எங்கிட்ட திரும்பக் கொடுத்திருங்கோளேன் சார். அதுல உங்களுக்கு என்ன தயக்கம்? நீ தான்பா அப்பீட்டு, நீ தான் ஜெயிச்சே. நான் அவுட்டு. தோப்புக்கரணம் போடறேன். துட்டு தர்ரேன்பா. என் கண்ணோல்லியோ ராசா, நீ போற ஃப்ரீவேயில எல்லாம் எல்லேயில இனிமேக் கூட்டமே இருக்காதுன்னு வாழ்த்துறேன், வாழ்த்துறேன், வஞ்சமில்லா வாழ்த்துறேன்"
மறுமுனையில் அவன் லைனைத் துண்டித்தான்.
அவசர அவசரமாக நான் என் நம்பரைத் திருமப்த் திரும்பத் தொடர்பு கொள்ள முயற்சித்ததெல்லாம் வீண். செல்லை ஆஃப் செய்து விட்டான் போலும்.
கோழை வில்லனுடன் இனிமேல் மெனக்கெடுவதில் பயனில்லை. போன் கம்பெனியை அவசரமாகத் தொடர்பு கொண்டேன். அதாவது தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஏகப்பட்ட ப்ரீ-ரெகார்டிங்குகள், வாய்ஸ் மெயில்கள், விளம்பரங்கள், டிஸ்கனெக்ஷனுக்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏதோ ஒரு கால் செண்டருடன் இணைப்பு கிடைத்த்து.
என் சோகக் க்தையைச் சொல்லி அழுதவுடன், அந்தப் பெண் மிகவும் அனுசரணையாக, இதமாகப் பேசினாள்:"உங்களுக்கு எங்களுடன் இரண்டு வருட காண்டிராக்ட் இருக்கிறது. அதைத் துண்டிக்க நினைத்தால் நீங்கள் 300 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்"
"அடியே கிராதகி, ஏற்கனவே நான் நொந்து நூலாகி நிற்கிறேன். என் போனை எவனோ சுட்டு விட்டான் என்கிறேன், நீ கேட்கிறாயா அதிகப்படித் துட்டு?"
"ஒன் மினிட் ப்ளீஸ்" என்று என்னை 'ஹோல்டி'ல் போட்டு விட்டு அவள் ஆறு மாதப் பிரசவ விடுப்பில் சென்று விட்டாள்.
ஏழெட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கனிவான பாட்டி லைனில் வந்தாள். போனிலேயே அவள் காலில் விழுந்தேன்.
"பிதாமகி, முஜே ஜீனே தோ" என்றேன்.
"போனால் போகிறது. அழாதே. பேராண்டி. ஒரு புது போனை நாளையே அனுப்பி வைக்கிறேன்"
ஐந்து நாட்கள் கழிந்து ஒரு புது போன் வந்தது. ஆனால், ஒரு புத்தம் புது நம்பருடன். என்னுடைய பழைய நம்பரைத் தாற்காலிகமாகத் துண்டித்து விட்டார்களாம். அடுத்த நாளே இன்னொரு 500 டாலருக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டு பில்கள் வந்தன. "மறுபடியும் மறுபடியும் புதுப் புதுப் போனா?" என்ற என் மனைவியின் பிரேரணைகள், அதற்கு நான் அவ்வப்போது சொல்லிச் சமாளித்த பதில்கள் அவற்றை எல்லாம் இங்கே எழுதினால் பாண்ட்விட்த் பத்தாது.
என் பழைய நம்பரைத் திரும்பக் கேட்டு கவர்னரிடம் கருணை மனு கொடுத்திருக்கிறேன்.
லேப்டாப்பையே பேக்அப் செய்யாத நானா போன் நம்பர்களை பேக்அப் செய்திருப்பேன்? ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை நம்பர்களையும் எல்லோரையும் கெஞ்சிக் கூத்தாடி மறுபடியும் வாங்கிக் கொள்ள ஒரு பத்து நாட்கள் ஆகி விட்டன.
ரொம்பவும் வேண்டியவர்களின் நம்பர்களைப் புது போனில் உடனேயே பதிந்து விட்டேன். அதில் எந்த சிரமமும் இல்லை. மறந்தால் தானே நினைவு படுத்திக் கொள்வதற்கு?
டிர்ர்ரிங், டிர்ர்ரிங்.... உங்கள் போன் அடிக்கிறது பாருங்கள். உங்கள் நண்பன லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தான் கூப்பிடுகிறேன். "என்ன சௌக்கியமா?"
-அப்பாடா, முடித்து விட்டேன்!
தொலைந்து போன என்னுடைய மாஜி 'லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட்' செல் போனில் என் அருமை இந்திய/அமெரிக்க/இதர துணைக் கண்ட நண்பர்களின் முகவரிகளும், பால் வடியும் முகங்களும், ஈமெயில் முகவரிகள், ஏன், இன்னும் சில அந்தரங்கக் குறிப்புகள், சாட் மெசேஜ்கள் கூடத் தெரியும். வில்லங்கத்தனமாக அவன் ஏதேனும் செய்ய முற்பட்டால் என்ன செய்வது?
"ஒரு பிசாத்து போனுக்கு இவ்வளவு காசு குடுத்து வாங்கறதுக்குப் பதிலா அந்த மாங்கா மாலைக்கு மேட்சா ப்ளாட்டினத்துல ஒரு ஒட்டியாணமாவது பண்ணிண்டிருக்கலாம். நாட்ல அவனவன் ஃப்ரீ போன் வாங்கிண்டிருக்கும்போது உங்களுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான போன்? அப்படி யார் கிட்டத்தான் அவ்வளவு நேரம் பேசறேள் ஹி ஹின்னு? ஆனாக்க நான் எப்பக் கூப்பிட்டாலும் ஏன் அது உடனேயே டிஸ்கனெக்ட் ஆயிடறது?" -மூன்று மாதத்திற்கு முந்தையக் குடும்ப் வசனம் மனதில் ஓடியது.
என் மனசு என்னென்னவோ எதிர்காலக் கற்பனைகளில் பயந்தது.
*********
ஏவிஎம் மூன்றாவது ஃப்ளோரில் சரியான மழை. மேலேயிருந்து பொத்துக்கொண்டு கொட்டுகிறது. குடும்பப் பாங்கான ரேஷன் உடையில் நனைந்தபடி மணாளனை நினைத்து முனகிக் கொண்டிருக்கிறாள் அவள். ஹீரோயினுக்கு மட்டும் வெந்நீர் கொட்டுகிறது. தோழிப் பெண்களெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமளவுக்குக் காலையிலிருந்து நனைந்து வெடவெடக்கின்றனர்.
செட்டுக்கு வெளியே அந்தப் பெண்ணுடைய பிரத்தியேக செல் அடிக்கிறது. ஊஹும், அவள் போன் அடிக்காது. என் போனிலிருந்து கூப்பிட்டால் ஒரு பிரத்தியேக ரிங் டோனில் கொஞ்சும், கொஞ்சிப் பாடும்.
"அந்த போன் மட்டும் ரொம்ப ஸ்பெஷல். எப்ப அடிச்சாலும் உடனே என் கிட்ட எடுத்தாந்து கொடுத்துரணும், தெரியுதா? ஷாட்ல இருந்தாக்கூட நடுவுல எடுத்துட்டு வா" என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கும் டச்-அப் பெண் பவ்யமாகப் போனை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு உடல் பதறியபடியே 'ஷாட்' நடுவில் நுழைகிறது.
"யக்கா, யக்கா! அவர் கிட்டேருந்து போனு"
30,000 வாட் வெளிச்ச வட்டத்தில் கையில் போனுடன் டச் அப்.
முனகல் நிற்கிறது. கதாநாயகி சிவந்து போகிறாள். "அவர் கிட்டேருந்தா? சீக்ரம் குடு"
"ஏய் யாருப்பா அறிவில்லாம ஷாட்டுக்கு ஊடால பூர்ரது? கட், கட், கட். அந்தக் குட்டிய செவிள்ல அறைடா"
"லைட்ஸ் ஆஃப்"
"ஃபேன் ஆன்"
"சாரி மேடம், உங்க டச்சப்பா? அதனால பரவாயில்லை. இன்னோரு டேக் போயிருவம். நீங்க பேசிக்குங்க. டேய், ஜூஸ் குடுத்தியாடா?"
"மாஸ்டர், இன்னிக்குள்ளார முடிச்சிருவமா? கந்துவட்டிக்காரன் ஸ்டுடியோ வாசல்லயே சேர் போட்டு உக்காந்திருக்கான். கழுத்துல துண்டு போட்ருவான்"
எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஈரக் கிளி போனில் கொஞ்ச ஆரம்பிக்கிறது. ஹேர் டிரஸ்ஸர் ஓடி வந்து தலையைத் துவட்டுகிறார். இன்னொரு எடுபிடி ஃப்ளாஸ்கைத் திறக்கிறது.
வெட்கத்துடன் சிரித்தபடி, "என்னங்க, வேற ஆக்செண்ட் எல்லாம் போட்டு இன்னிக்கு அசத்தறீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்க தொண்டைக்கு?"
வில்ல மகா மெக்சிகப் பாவி என்னென்னவோ கேட்க ஆரம்பிக்கிறான். "சீச்சீ. போப்பா, அய்யோ, எனக்கு வெக்கமாயிருக்கு"
அய்யகோ, ஈதெல்லாம் எனக்குத் தேவையா? எங்கு போய் முட்டிக் கொள்வேன்?
சைனா டவுனுக்கு வர நினைத்ததே தப்பு. வந்தது ம்கா முட்டாள்தனம். ஏற்கனவே லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை காரணம் கேட்டுக் கொல்லுகிறார்கள். தனி மெயிலில் காதைத் திருகுகிறார்கள். இந்த அழகில், எத்தனை பேருக்கு நான் என்ன காரணம் சொல்லி, எப்படி சமாளிக்கப் போகிறேன்?
உண்மையைச் சொல்லி விடவா? சிம்பிள் மேட்டர் தானே இது? எல்லோருக்கும் தேவையான, தெரிந்த காரணம் தானே? வில்லிவாக்கத்தில் இருந்தால் என்ன, ஐரோப்பாவில் குப்பை கொட்டினால் என்ன, இது வாழ்வின் ஆதாரத் தேவை தானே?
ஊஹும். வேண்டாம். நல்லதுக்குக் காலமில்லை.
'எடுக்கவோ, கோர்க்கவோ?' காலமா இது? இல்லையே. இண்டர்நெட் கலி காலமாயிற்றே. 'சாட்'டில் ஒரு பெண் கூப்பிட்டாலே 'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? நான் எவ்வளவு பெரிய நிரபராதி, வடி கட்டின சமர்த்து என்பதை எப்படி என் நண்ப நண்பிகளுக்கும், ரசிக, ரசிகைகளுக்கும் தெரிவிக்கப் போகிறேன்?
காலம் வரும். காத்திருப்போம்.
**********
செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.
கோபம், எரிச்சல், கெஞ்சல் என்று கலங்கலாகப் பேசினேன்.
"செல்லெல்லாம் செண்பகப்பூ தானே, எந்தப் ப்ரெட்டி கேர்ள்ரா? குறிப்பா யாரச் சொல்ற மவனே, வெளயாடாத. போன வெச்சிரு. இல்ல. இல்ல. போனை வெச்சிராத. ஹலோ சார், என் போன எங்கிட்ட திரும்பக் கொடுத்திருங்கோளேன் சார். அதுல உங்களுக்கு என்ன தயக்கம்? நீ தான்பா அப்பீட்டு, நீ தான் ஜெயிச்சே. நான் அவுட்டு. தோப்புக்கரணம் போடறேன். துட்டு தர்ரேன்பா. என் கண்ணோல்லியோ ராசா, நீ போற ஃப்ரீவேயில எல்லாம் எல்லேயில இனிமேக் கூட்டமே இருக்காதுன்னு வாழ்த்துறேன், வாழ்த்துறேன், வஞ்சமில்லா வாழ்த்துறேன்"
மறுமுனையில் அவன் லைனைத் துண்டித்தான்.
அவசர அவசரமாக நான் என் நம்பரைத் திருமப்த் திரும்பத் தொடர்பு கொள்ள முயற்சித்ததெல்லாம் வீண். செல்லை ஆஃப் செய்து விட்டான் போலும்.
கோழை வில்லனுடன் இனிமேல் மெனக்கெடுவதில் பயனில்லை. போன் கம்பெனியை அவசரமாகத் தொடர்பு கொண்டேன். அதாவது தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஏகப்பட்ட ப்ரீ-ரெகார்டிங்குகள், வாய்ஸ் மெயில்கள், விளம்பரங்கள், டிஸ்கனெக்ஷனுக்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏதோ ஒரு கால் செண்டருடன் இணைப்பு கிடைத்த்து.
என் சோகக் க்தையைச் சொல்லி அழுதவுடன், அந்தப் பெண் மிகவும் அனுசரணையாக, இதமாகப் பேசினாள்:"உங்களுக்கு எங்களுடன் இரண்டு வருட காண்டிராக்ட் இருக்கிறது. அதைத் துண்டிக்க நினைத்தால் நீங்கள் 300 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்"
"அடியே கிராதகி, ஏற்கனவே நான் நொந்து நூலாகி நிற்கிறேன். என் போனை எவனோ சுட்டு விட்டான் என்கிறேன், நீ கேட்கிறாயா அதிகப்படித் துட்டு?"
"ஒன் மினிட் ப்ளீஸ்" என்று என்னை 'ஹோல்டி'ல் போட்டு விட்டு அவள் ஆறு மாதப் பிரசவ விடுப்பில் சென்று விட்டாள்.
ஏழெட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கனிவான பாட்டி லைனில் வந்தாள். போனிலேயே அவள் காலில் விழுந்தேன்.
"பிதாமகி, முஜே ஜீனே தோ" என்றேன்.
"போனால் போகிறது. அழாதே. பேராண்டி. ஒரு புது போனை நாளையே அனுப்பி வைக்கிறேன்"
ஐந்து நாட்கள் கழிந்து ஒரு புது போன் வந்தது. ஆனால், ஒரு புத்தம் புது நம்பருடன். என்னுடைய பழைய நம்பரைத் தாற்காலிகமாகத் துண்டித்து விட்டார்களாம். அடுத்த நாளே இன்னொரு 500 டாலருக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டு பில்கள் வந்தன. "மறுபடியும் மறுபடியும் புதுப் புதுப் போனா?" என்ற என் மனைவியின் பிரேரணைகள், அதற்கு நான் அவ்வப்போது சொல்லிச் சமாளித்த பதில்கள் அவற்றை எல்லாம் இங்கே எழுதினால் பாண்ட்விட்த் பத்தாது.
என் பழைய நம்பரைத் திரும்பக் கேட்டு கவர்னரிடம் கருணை மனு கொடுத்திருக்கிறேன்.
லேப்டாப்பையே பேக்அப் செய்யாத நானா போன் நம்பர்களை பேக்அப் செய்திருப்பேன்? ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை நம்பர்களையும் எல்லோரையும் கெஞ்சிக் கூத்தாடி மறுபடியும் வாங்கிக் கொள்ள ஒரு பத்து நாட்கள் ஆகி விட்டன.
ரொம்பவும் வேண்டியவர்களின் நம்பர்களைப் புது போனில் உடனேயே பதிந்து விட்டேன். அதில் எந்த சிரமமும் இல்லை. மறந்தால் தானே நினைவு படுத்திக் கொள்வதற்கு?
டிர்ர்ரிங், டிர்ர்ரிங்.... உங்கள் போன் அடிக்கிறது பாருங்கள். உங்கள் நண்பன லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தான் கூப்பிடுகிறேன். "என்ன சௌக்கியமா?"
-அப்பாடா, முடித்து விட்டேன்!
Thursday, June 02, 2005
'செல்', கவனி, காதலி! -2
பாட்டி+பேத்தியிடம் என் புலன் விசாரணை ஒரு வழியாக முடிந்தது.
பாட்டி சொன்ன கதையின் சாராம்சமாவது: 'பெருந் தலைவர் சூ என் லாய் என்றோ சொன்னதை என்னால் எப்படி இன்று மறக்க முடியும்? இந்த இந்தியனுங்களயே நம்பக்கூடாது. 1962ம் வருட இந்திய-சீனப் போரின்போதுதான் என் கணவர் -உன் தாத்தா- இறந்தார் என்பதையும் மறந்தாயோடீ மக்குப்பெண்ணே? அவர் சீன ராணுவத்தில் கடைநிலைச் சமையற்காரச் சிப்பாயாக்குக் கறிகாய் நறுக்கித் தரும் உதவியாளராக இருந்திருக்கலாம், யுத்தத்தில் வீர மரணம் அடையாமல் ஓடி மரப் பொந்தில் ஒளிந்திருக்கலாம். ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு, இந்தியச் சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊசல் மசாலா சமாச்சாரங்களாலேயே தான் அவர் உயிர் பிரிந்தது என்பதை நீ மறந்தாலும் நான் மறப்பதாக இல்லை.
'உருப்படியாக உயிருடன் தின்ன இங்கே ஒரு மரவட்டை கூடக் கிடைக்கவில்லையடி, நாக்கு செத்தே போய் விட்டது. பூரான் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது' என்று அவர் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாரே. ஹும், என்னால் எதையும் மறக்க முடியவில்லை.
இந்த இந்தியச் சொங்கி இங்கே மறந்து போன போனை நான் தான் எடுத்தேன். நம் பாரம்பரிய இந்திய விரோத ஞாபகார்த்தமாக இதை டாய்லெட்டில் போட்டு அதை ஜல சமாதி செய்து விடத்தான் எண்ணினேன். ஆனால் தண்ணீரில் போடுமுன் அதைத் தற்செயலாக நான் திறந்தபோது, அதிலே ஒரு அழகிய இந்தியப் புன்னகை இளவரசியின் படத்தைக் கண்டு நானே மயங்கி விட்டேன். மனம் மாறினேன். போனைத் திருப்பிக் கொடுக்கலாமென்று வாசலில் வந்தால், அங்கே இவனைக் காணோம். ஆனால் இவனை மாதிரியே, இவன் நிறத்திலேயே ஒருத்தன் மரத்தடியில் பல் குத்தியபடியே நின்று கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் போனைக் கொடுத்து விட்டேன். அவன் பையில் போட்டுக்கொண்டு ஜூட் விட்டு விட்டான் போலிருக்கிறது. இவனுக்கு நன்றாக வேண்டும். அவ்வளவு அன்பாக, ஸ்நேகமாக இருக்கும் அந்தப் போன் பெண்ணை இவன் எப்படி ஒரு கணமேனும் கண் கலங்க விட்டுக் கை விட்டுச் சென்றிருக்கலாம்?'

நான்: But, how did she assume that guy was by brother in law?
சீனக் குட்டி: Just like all Chinese look the same to you, all Indians look the same to us too.
தலையைச் சொறிந்தபடி நான்: May be it was some unemployed Mexican lounging under the tree?
புன்சிரிப்புடன் சீனக் குட்டி: Probably. But who was that girl's photo my grandma was referring to? I am curious.
நான்: Oh my God! என் அத்யந்த நண்ப, நண்பிகளின் நம்பர்கள் அனைத்தும்- எங்குமே எழுதப்படா தனிச் செல் நம்பர்களும் கூட- அதிலே அல்லவா இருக்கின்றன?
(பாட்டி+பேத்தி) கோரஸாக: What?
எனக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
சீனப் பிராந்தியத்திலிருந்து வெறுப்புடன் வெளியேறினேன். இனிமேல் சைனீஸ் நூடுல்ஸ் கூடச் சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன். காரை எடுக்கவும் மறந்து கால் போன போக்கில் நடக்கலானேன்.
'போனால் போகட்டும் போடா- இந்த பூமியில்
செல்லுடன் வாழ்ந்தவன் யாரடா?- கால்
வருவது தெரியும் போவது எங்கே?
எதுவும் எனக்கே தெரியாது- வீட்டில்
கேட்டால் என் பதில் சொல்வேன்
அதுவும் எனக்கே புரியாது'
சோக மிகுதியில் புலம்புகையில் தான எனக்கு அந்த ஐடியா எனக்கு வந்தது. என் செல்லையே நான் கூப்பிட்டால் என்ன? எடுத்துச் சென்றவன் தராமலா போய் விடுவான்?
தெரு முனையில் இருந்து ஒரு போன் போட்டேன். மறு முனையில் என் போன் சிணுங்கும் சத்தம் கேட்டது. கரகரப்பான குரல் ஒன்று 'ஹலோ' என்றது.
"ஹலோ, ஹலோ. ஹு ஈஸ் திஸ்?"
"ஹு ஆர் யூ?" என்றது கரகரப்பு. எனக்கு இது தேவை தான்.
"ஐ யாம் தி ஓனர் ஆஃப் தட் போன். வேர் ஆர் யூ?"
மறு முனை ஏளனமாகச் சிரித்தது. "வாட் ஈஸ் திஸ் ப்ரெட்டி கேர்ள்'ஸ் நம்பர்?"
எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
-இன்னும் 'செல்'வேன்
பாட்டி சொன்ன கதையின் சாராம்சமாவது: 'பெருந் தலைவர் சூ என் லாய் என்றோ சொன்னதை என்னால் எப்படி இன்று மறக்க முடியும்? இந்த இந்தியனுங்களயே நம்பக்கூடாது. 1962ம் வருட இந்திய-சீனப் போரின்போதுதான் என் கணவர் -உன் தாத்தா- இறந்தார் என்பதையும் மறந்தாயோடீ மக்குப்பெண்ணே? அவர் சீன ராணுவத்தில் கடைநிலைச் சமையற்காரச் சிப்பாயாக்குக் கறிகாய் நறுக்கித் தரும் உதவியாளராக இருந்திருக்கலாம், யுத்தத்தில் வீர மரணம் அடையாமல் ஓடி மரப் பொந்தில் ஒளிந்திருக்கலாம். ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு, இந்தியச் சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊசல் மசாலா சமாச்சாரங்களாலேயே தான் அவர் உயிர் பிரிந்தது என்பதை நீ மறந்தாலும் நான் மறப்பதாக இல்லை.
'உருப்படியாக உயிருடன் தின்ன இங்கே ஒரு மரவட்டை கூடக் கிடைக்கவில்லையடி, நாக்கு செத்தே போய் விட்டது. பூரான் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது' என்று அவர் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாரே. ஹும், என்னால் எதையும் மறக்க முடியவில்லை.
இந்த இந்தியச் சொங்கி இங்கே மறந்து போன போனை நான் தான் எடுத்தேன். நம் பாரம்பரிய இந்திய விரோத ஞாபகார்த்தமாக இதை டாய்லெட்டில் போட்டு அதை ஜல சமாதி செய்து விடத்தான் எண்ணினேன். ஆனால் தண்ணீரில் போடுமுன் அதைத் தற்செயலாக நான் திறந்தபோது, அதிலே ஒரு அழகிய இந்தியப் புன்னகை இளவரசியின் படத்தைக் கண்டு நானே மயங்கி விட்டேன். மனம் மாறினேன். போனைத் திருப்பிக் கொடுக்கலாமென்று வாசலில் வந்தால், அங்கே இவனைக் காணோம். ஆனால் இவனை மாதிரியே, இவன் நிறத்திலேயே ஒருத்தன் மரத்தடியில் பல் குத்தியபடியே நின்று கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் போனைக் கொடுத்து விட்டேன். அவன் பையில் போட்டுக்கொண்டு ஜூட் விட்டு விட்டான் போலிருக்கிறது. இவனுக்கு நன்றாக வேண்டும். அவ்வளவு அன்பாக, ஸ்நேகமாக இருக்கும் அந்தப் போன் பெண்ணை இவன் எப்படி ஒரு கணமேனும் கண் கலங்க விட்டுக் கை விட்டுச் சென்றிருக்கலாம்?'
நான்: But, how did she assume that guy was by brother in law?
சீனக் குட்டி: Just like all Chinese look the same to you, all Indians look the same to us too.
தலையைச் சொறிந்தபடி நான்: May be it was some unemployed Mexican lounging under the tree?
புன்சிரிப்புடன் சீனக் குட்டி: Probably. But who was that girl's photo my grandma was referring to? I am curious.
நான்: Oh my God! என் அத்யந்த நண்ப, நண்பிகளின் நம்பர்கள் அனைத்தும்- எங்குமே எழுதப்படா தனிச் செல் நம்பர்களும் கூட- அதிலே அல்லவா இருக்கின்றன?
(பாட்டி+பேத்தி) கோரஸாக: What?
எனக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
சீனப் பிராந்தியத்திலிருந்து வெறுப்புடன் வெளியேறினேன். இனிமேல் சைனீஸ் நூடுல்ஸ் கூடச் சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன். காரை எடுக்கவும் மறந்து கால் போன போக்கில் நடக்கலானேன்.
'போனால் போகட்டும் போடா- இந்த பூமியில்
செல்லுடன் வாழ்ந்தவன் யாரடா?- கால்
வருவது தெரியும் போவது எங்கே?
எதுவும் எனக்கே தெரியாது- வீட்டில்
கேட்டால் என் பதில் சொல்வேன்
அதுவும் எனக்கே புரியாது'
சோக மிகுதியில் புலம்புகையில் தான எனக்கு அந்த ஐடியா எனக்கு வந்தது. என் செல்லையே நான் கூப்பிட்டால் என்ன? எடுத்துச் சென்றவன் தராமலா போய் விடுவான்?
தெரு முனையில் இருந்து ஒரு போன் போட்டேன். மறு முனையில் என் போன் சிணுங்கும் சத்தம் கேட்டது. கரகரப்பான குரல் ஒன்று 'ஹலோ' என்றது.
"ஹலோ, ஹலோ. ஹு ஈஸ் திஸ்?"
"ஹு ஆர் யூ?" என்றது கரகரப்பு. எனக்கு இது தேவை தான்.
"ஐ யாம் தி ஓனர் ஆஃப் தட் போன். வேர் ஆர் யூ?"
மறு முனை ஏளனமாகச் சிரித்தது. "வாட் ஈஸ் திஸ் ப்ரெட்டி கேர்ள்'ஸ் நம்பர்?"
எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
-இன்னும் 'செல்'வேன்
Wednesday, June 01, 2005
'செல்', கவனி, காதலி! -1
மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது சாவிக்கொத்து, மாண்ட்ப்ளாங்க் பேனா, மணிபர்ஸ், மோதிரம், சீப்பு, குல்லாய் ... இத்யாதி வகைய்றாக்களை நான் தொலைப்பது வழக்கம்.
என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம் சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், தொலைந்த பொருள் எப்படியோ என் கைக்கு வந்து விடும். என் கண்ணுக்குப் புலப்படாத அந்தர்தியான ச்மாச்சாரங்கள் அவள் கண்ணுக்கு மட்டும் ஆச்சரியமாகத் தெரிந்துவிடும். எதிலும் தொலைநோக்குள்ள அவளுக்கு மட்டும் 'ராடார் விஷன்' என்று நான் சந்தேகிப்பதுண்டு.
"இனிமேலேயாவது ஒழுங்கா, பொறுப்பா, சமர்த்தா, பாக்கிப் பேரை மாதிரி ..." என்று பிரசாதத்துடன் அவள் நாமாவளியை முடிப்பாள்.
"சர்த்தான் போம்மா கண்ணு. ஸொம்னா கூவாத" என்று மனசுக்குள் நான் விசிலடித்துச் சந்தோஷப்படுவேன்.
இம்முறையும் அம்மாதிரியே நிகழ்வுகள் அமைந்திருந்தால் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
சென்ற வாரம் நான் என் செல் போனைத் தொலைத்து விட்டேன். மறுபடியும்.
இது கொஞ்சம் இளசு, சிறுசு, புதுசு, ஒரு தினுசு.
*****************
'எல்லே'யின் ஒரு அங்கமான சைனா டவுனுக்கு அந்த வாரக் கடைசியில் நான் ஏன் தனியே சென்றேன்? அங்கே யாரைப் பார்த்தேன்? என்ன கிழித்தேன்? என்ன சாதித்தேன்? போன்ற விபரங்கள் உங்களுக்கு அநாவசியம்.
தொலைந்ததை மட்டும் இப்போது தேடுவோம்.
வெற்று இடுப்பில் வெறும் கை தடவப்பட்டதால், ஆங்கே ஒன்றும் தட்டுப்படாததால், தொலைத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அது தொலைந்து போனது ஞான திருஷ்டியில் எனக்குத் தெரிந்து விட்டது. மிஞ்சிப் போனால், போன் தொலைந்து போய் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கும்.
எங்கே தொலைத்தேன் என்பதும், எப்படித் தொலைத்தேன் என்பதும் கூட நன்றாக நினைவுக்கு வந்து விட்டது.
எங்கே தொலைத்தேன்? -அந்தச் சீன மாது வீட்டில்.
எப்படித் தொலைத்தேன்? -காலணிகளைத் திரும்பப் போடும்போது, பக்கத்தில் வைத்தது மறந்து விட்டதால்.
அலறி அடித்துக்கொண்டு காரைத் திருப்பி, செல்லைத் தவற விட்ட இடத்துக்கே வந்து, அவசரமாகப் பார்க் செய்தேன்.
அந்த வீட்டுக் கதவை நான் மறு முறை தட்டு முன்பே அது தானாகத் திறந்து கொண்டது. எட்டிப் பார்த்தேன்.
**************
இப்போது அங்கே முதலில் நான் பார்த்த அந்த இளம் சீன மங்கையைக் காணவில்லை. அவளுடைய பாட்டி மாதிரி யாரோ ஒரு கெழ போல்ட்டு மட்டும் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தபடி ஊர்ந்து வந்தது. பாட்டியின் கைகளை நானும் பாசத்துடன் பற்றிக்கொண்டேன். ஆடும் பல் செட்டுடன் பாட்டியும் பாலசரஸ்வதி மாதிரிப் பரவசமானாள்.
"கொய்ங் அபோ டொய்ங் லபோ திபோ?" என்றாள். எனக்கு அது பரிச்சயமில்லை. இருந்தாலும் பலமாகத் தலையை ஆட்டி வைத்தேன். பிறகு, சீன மொழி தவிர, ஒரு பதினோரு பாஷைகளிலாவது நான் என் செல்லில்லா அவல நிலையைப் பாட்டிக்கு விளக்கியிருப்பேன். ஊஹும். பாட்டி தொடர்ந்து பேய் முழி முழித்தாள். அல்லது பினாத்தினாள்.
திடீரென்று "சச்பாங் லிஸோ குயிங்" என்றாள். என்ன இழவுடா இது? 'சூயிங் கம் குடுடா' என்கிறாளா?
'மௌனம் எனது தாய்மொழி' என்று கண்ணதாசன் என்றோ பாடியிருப்பது என் ஆழ் மனதில் பளிச்சிட்டது.
உடனே நான் 1936 சைல்ண்ட் படக்காட்சி மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்தேன். பாட்டி கை தட்டி ஆமோதித்தாள். தானும் பதிலுக்கு அதே மாதிரி அவளும் ஒரு ஆக்ட் கொடுக்க ஆரம்பித்ததும் என்னால் சிச்சுவேஷனின் தீவிரத்தைத் தாங்க முடியவில்லை. அழுகை வந்தது.
நான் சிம்மக் குரலோன் சிவாஜி மாதிரி, 'செல்லம்மா, செல்லப் பாட்டிம்மா, என் செல்லக் காணும்மா, செல்லக் காணும். நான் செல்லமா வெச்சிருந்த சின்னச் செல்லக் காணும்மா. என் தங்கமில்லியா? என் செல்லமில்லியா? என் பாட்டியில்லியா? எங்கெயானும் எடுத்து வெச்சிருந்தாக் கொடுத்துடுடா கண்ணா, கொடுத்துடு, எனக்கு என் செல் வேணுமில்லியா? செல்லில்லாம நான் என்ன பண்ணுவேன்? செத்தே போயிடுவேனே"என்று நடித்துக் காட்டினேன். பாட்டி சிரித்தாள். செல் மட்டும் வரவில்லை.
கமல் மாதித் தொண்டையிலிருந்து வார்த்தையே வராமல், ஆனால் பெருங் குரலெடுத்து, "மா ம் மே மு ம் மாம்மா மம் மமா ம" என்றேன். சீனத்துப் பாட்டி சிலிர்த்துப் போனாள். கை தட்டினாள். ஆனால் அவள் கைகளில் என் செல் இல்லை.
அஜீத் மாதிரித் "தல் கிட்ட வெச்சுகிற சமாச்சாரம் தாயி. ஆரோட அப்பாவும் எனக்கு வாங்கித் தரல. நானே காசு போட்டு நானே வாங்கி வெச்சது, என் காது இருக்கற தலயில" என்று சொன்னேன். நோ ரியாக்ஷன்.
விஜய் மாதிரி ஒரு 'கில்லி'க் குத்தாட்டம் ஆடிப் பார்த்தேன்:
அய்யாவோட செல்லு அரிச்சந்திரன் ஜொள்ளு
என்னோட தில்லு பொய்க்காது
எதிரியக் கொல்லு இமயத்த வெல்லு
உனக்கொரு வேலை கிடையாது
யாரோ யாரிவளோ
ஒரு தீயோ பேயோ யாரறிவார்
ஆத்தா பேரிளமோ
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்?
ஊஹும். டயம் வேஸ்ட்.
விக்ரம் ஞாபகம் வந்ததில், 'செல்லில்லாமல் வீடு திரும்பினால் எப்படி என் பெண்டாட்டி என்னை இரும்புச் செயினால் கட்டிப் போடப்போகிறாள், நான் காலைச் சீவிச் சீவிக் குணசீலமாய நடப்பேன், தவிப்பேன், தாடி வளர்ப்பேன், தற்கொலைக்கு முயல்வேன்' என்றெல்லாம் செய்து காட்டினேன்.
சீயானுக்கும் பெப்பே.
கடைசிப் பிரம்மாஸ்திரமாக ஒன்றை யோசித்தேன். சந்திரமுகி பொய்க்காது. இமய பாபா சுருள் குகையிருந்து அருள்வாக்கு தருவார். ஆனந்த விகடனில் கூடப் படம் போட்டுக் கதை சொல்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினி மாதிரி ஸ்டைலாகச் சாய்ந்து 'விடு விடு' என்று நடந்து வந்தேன். சடாரென்று திரும்பித் தலையைச் சிலுப்பி, "தேவுடி தேவுடி, இந்தப் பக்கம் சூடுடி, எங்காத்து செல்லுங்கள் எல்லாமே வைரங்கள், நீ கொஞ்சம் ரிடர்ன் பண்ணுடி" என்று பாடி ஆடினேன். ஜாடையும் காட்டினேன். பாட்டி, கை தட்டிச் சிரித்து, 'ரிபீட்ட்ட்ட்டு' என்றாள்.
கடைசியில் அக்கிழம் பயங்கரமாகச் சிரித்து, 'லகலகலகலகலகலக' என்றது.
'இது வேலைக்கு ஆவாது' என்று நான் ஜகா வாங்க நினைத்தேன். ஆனால் அப்போதுதான், அன்றலர்ந்த இன்னொரு அழகிய இளம் தீ அங்கே மாடியிலிருந்து கீழிறங்கியது.
*************
பேரிளம் பாட்டியின் இன்னொரு பேத்தியோ?
கீழே என்ன கலாட்டா என்று பார்க்க வந்தாள் போலும். இவளும் அழகு தான். சின்னப் பொம்மை மாதிரிச் சிரிப்பு. அவயவங்கள் சின்னதாயிருந்தாலும் செக்கச் செவேலென்று செப்புச் செப்பாக நேர்குத்தாகச் சிறப்புறச் செய்யப்பட்டிருந்தன.
ஆரியக் கூத்தே ஓசியில் பார்த்தாலும், காரியத்தை மறக்கலாமோ?
"Can you speak English?" என்றேன். "Of course" என்றாள் அவள் கொஞ்சம் விரோதமாக. "நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக்கும். உன்னை மாதிரி இல்லை" என்கிற உட்பொருள் அவள் சின்னக் கண்களில் ஒளிர்ந்தது.
"மன்னிக்க வேண்டுகிறேன், எந்தன் செல்லைத் தேடுகிறேன்" என்றபடி அவசரமாக என் கதையைச நான் சொல்லி முடித்ததும், அவள் தன் பாட்டியிடம் சீன மொழியில் ஏதோ வினவினாள்.
பாட்டி முகத்தில் ஆயிரம் வாட் பல்பைப் பார்த்த நான் அக மகிழ்ந்தேன். பாட்டி இப்போது தான் என் சோகக் கதையைப் புரிந்து கொண்டாள் போலும்.
'அப்பாடி, மனைவியிடம் சகஸ்ரநாமாவ்ளி கேட்க வேண்டாம். இன் ஃபாக்ட் அவளுக்கு இது தெரியவே கூட வேண்டாம். அசமஞ்சமாட்டம் எல்லாத்தையும் உடனே உடனே சொல்லி எத்தனை நாள் தான் வாங்கிக் க்ட்டிக்கறது?'
"My grandma says that she found your cell phone"
என் காதில் செந்தமிழ்த்தேன், சோடா, சிங்கிள் மால்ட் ஸ்காட்ச், ஐஸ்கோல்ட் பியர் எல்லாம் பாய்ந்தன. ஒரே நேரத்தில்.
"Very good. Thank her for me. Thank you. Thank you both for not my having to go home empty handed and get an earful."
பிறகு, ஆங்கே நாணம் கலந்த ஓர் சிறு மௌனம் நிலவலாகியது.
தருவாளா, அவள் தருவாளா? இப்போது நான் அவளைக் கேட்க வேண்டுமா? இல்லை, அவள் கேட்காமலே தருவாளா? எப்படித் தருவாள்? எங்கே தருவாள்?
வெட்கத்தை விட்டு நான் தான் அவளிடம் முதலில் கேட்டேன்: "Where is it?"
"She says she gave it to your brother-in-law" என்றது சீனப் பைங்கிளி.
"வாட்?" என்று நான் விழித்தேன். எனக்குத் தெரியாமல், என் பெற்றோரின் சம்பந்திகள், எப்போது ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்கள்?
ஈதென்ன மங்காய்? "It is not possible, since I don't even have a brother in law" என்றேன்.
அவ்வழகிய இளந்தீ தன் பாட்டி பக்கம் திரும்பியது. அடித் தொண்டைச் சீன்மொழியில் பாட்டையைத் தகித்தது:
"இன்னா கெழமே, மத்தியானமே குவார்ட்டர ஊத்திக்கினியா? இன்னாங்கடி நூலு வுடுறீங்கன்னு அந்தாளு கொரலு குடுக்கறான். மச்சினன் மாப்பிள மாமியான்னு நீ இன்னாவோ கத வுட்டுக் காது குத்தற, சாடர்னே" -என்பதாக நான் ஓரளவு புரிந்து கொண்டேன்.
பாட்டிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என்னை ஒரு முறை புழுப் போலப் பார்த்தாள். பல் செட்டைக் கழட்டி மாடிப் படிக்கட்டின் அடியில் வீசி எறிந்தபடி தீ மிதிப்பது போல் அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பேத்தியிடம் என்னவோ சொன்னாள்.
சிறு பிராயத்தில் மாயவரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி கற்காத சோகம் என்னைக் கவ்வியது.
-இன்னும் 'செல்'வேன்
என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம் சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், தொலைந்த பொருள் எப்படியோ என் கைக்கு வந்து விடும். என் கண்ணுக்குப் புலப்படாத அந்தர்தியான ச்மாச்சாரங்கள் அவள் கண்ணுக்கு மட்டும் ஆச்சரியமாகத் தெரிந்துவிடும். எதிலும் தொலைநோக்குள்ள அவளுக்கு மட்டும் 'ராடார் விஷன்' என்று நான் சந்தேகிப்பதுண்டு.
"இனிமேலேயாவது ஒழுங்கா, பொறுப்பா, சமர்த்தா, பாக்கிப் பேரை மாதிரி ..." என்று பிரசாதத்துடன் அவள் நாமாவளியை முடிப்பாள்.
"சர்த்தான் போம்மா கண்ணு. ஸொம்னா கூவாத" என்று மனசுக்குள் நான் விசிலடித்துச் சந்தோஷப்படுவேன்.
இம்முறையும் அம்மாதிரியே நிகழ்வுகள் அமைந்திருந்தால் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
சென்ற வாரம் நான் என் செல் போனைத் தொலைத்து விட்டேன். மறுபடியும்.
இது கொஞ்சம் இளசு, சிறுசு, புதுசு, ஒரு தினுசு.
*****************
'எல்லே'யின் ஒரு அங்கமான சைனா டவுனுக்கு அந்த வாரக் கடைசியில் நான் ஏன் தனியே சென்றேன்? அங்கே யாரைப் பார்த்தேன்? என்ன கிழித்தேன்? என்ன சாதித்தேன்? போன்ற விபரங்கள் உங்களுக்கு அநாவசியம்.
தொலைந்ததை மட்டும் இப்போது தேடுவோம்.
வெற்று இடுப்பில் வெறும் கை தடவப்பட்டதால், ஆங்கே ஒன்றும் தட்டுப்படாததால், தொலைத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அது தொலைந்து போனது ஞான திருஷ்டியில் எனக்குத் தெரிந்து விட்டது. மிஞ்சிப் போனால், போன் தொலைந்து போய் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கும்.
எங்கே தொலைத்தேன் என்பதும், எப்படித் தொலைத்தேன் என்பதும் கூட நன்றாக நினைவுக்கு வந்து விட்டது.
எங்கே தொலைத்தேன்? -அந்தச் சீன மாது வீட்டில்.
எப்படித் தொலைத்தேன்? -காலணிகளைத் திரும்பப் போடும்போது, பக்கத்தில் வைத்தது மறந்து விட்டதால்.
அலறி அடித்துக்கொண்டு காரைத் திருப்பி, செல்லைத் தவற விட்ட இடத்துக்கே வந்து, அவசரமாகப் பார்க் செய்தேன்.
அந்த வீட்டுக் கதவை நான் மறு முறை தட்டு முன்பே அது தானாகத் திறந்து கொண்டது. எட்டிப் பார்த்தேன்.
**************
இப்போது அங்கே முதலில் நான் பார்த்த அந்த இளம் சீன மங்கையைக் காணவில்லை. அவளுடைய பாட்டி மாதிரி யாரோ ஒரு கெழ போல்ட்டு மட்டும் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தபடி ஊர்ந்து வந்தது. பாட்டியின் கைகளை நானும் பாசத்துடன் பற்றிக்கொண்டேன். ஆடும் பல் செட்டுடன் பாட்டியும் பாலசரஸ்வதி மாதிரிப் பரவசமானாள்.
"கொய்ங் அபோ டொய்ங் லபோ திபோ?" என்றாள். எனக்கு அது பரிச்சயமில்லை. இருந்தாலும் பலமாகத் தலையை ஆட்டி வைத்தேன். பிறகு, சீன மொழி தவிர, ஒரு பதினோரு பாஷைகளிலாவது நான் என் செல்லில்லா அவல நிலையைப் பாட்டிக்கு விளக்கியிருப்பேன். ஊஹும். பாட்டி தொடர்ந்து பேய் முழி முழித்தாள். அல்லது பினாத்தினாள்.
திடீரென்று "சச்பாங் லிஸோ குயிங்" என்றாள். என்ன இழவுடா இது? 'சூயிங் கம் குடுடா' என்கிறாளா?
'மௌனம் எனது தாய்மொழி' என்று கண்ணதாசன் என்றோ பாடியிருப்பது என் ஆழ் மனதில் பளிச்சிட்டது.
உடனே நான் 1936 சைல்ண்ட் படக்காட்சி மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்தேன். பாட்டி கை தட்டி ஆமோதித்தாள். தானும் பதிலுக்கு அதே மாதிரி அவளும் ஒரு ஆக்ட் கொடுக்க ஆரம்பித்ததும் என்னால் சிச்சுவேஷனின் தீவிரத்தைத் தாங்க முடியவில்லை. அழுகை வந்தது.
நான் சிம்மக் குரலோன் சிவாஜி மாதிரி, 'செல்லம்மா, செல்லப் பாட்டிம்மா, என் செல்லக் காணும்மா, செல்லக் காணும். நான் செல்லமா வெச்சிருந்த சின்னச் செல்லக் காணும்மா. என் தங்கமில்லியா? என் செல்லமில்லியா? என் பாட்டியில்லியா? எங்கெயானும் எடுத்து வெச்சிருந்தாக் கொடுத்துடுடா கண்ணா, கொடுத்துடு, எனக்கு என் செல் வேணுமில்லியா? செல்லில்லாம நான் என்ன பண்ணுவேன்? செத்தே போயிடுவேனே"என்று நடித்துக் காட்டினேன். பாட்டி சிரித்தாள். செல் மட்டும் வரவில்லை.
கமல் மாதித் தொண்டையிலிருந்து வார்த்தையே வராமல், ஆனால் பெருங் குரலெடுத்து, "மா ம் மே மு ம் மாம்மா மம் மமா ம" என்றேன். சீனத்துப் பாட்டி சிலிர்த்துப் போனாள். கை தட்டினாள். ஆனால் அவள் கைகளில் என் செல் இல்லை.
அஜீத் மாதிரித் "தல் கிட்ட வெச்சுகிற சமாச்சாரம் தாயி. ஆரோட அப்பாவும் எனக்கு வாங்கித் தரல. நானே காசு போட்டு நானே வாங்கி வெச்சது, என் காது இருக்கற தலயில" என்று சொன்னேன். நோ ரியாக்ஷன்.
விஜய் மாதிரி ஒரு 'கில்லி'க் குத்தாட்டம் ஆடிப் பார்த்தேன்:
அய்யாவோட செல்லு அரிச்சந்திரன் ஜொள்ளு
என்னோட தில்லு பொய்க்காது
எதிரியக் கொல்லு இமயத்த வெல்லு
உனக்கொரு வேலை கிடையாது
யாரோ யாரிவளோ
ஒரு தீயோ பேயோ யாரறிவார்
ஆத்தா பேரிளமோ
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்?
ஊஹும். டயம் வேஸ்ட்.
விக்ரம் ஞாபகம் வந்ததில், 'செல்லில்லாமல் வீடு திரும்பினால் எப்படி என் பெண்டாட்டி என்னை இரும்புச் செயினால் கட்டிப் போடப்போகிறாள், நான் காலைச் சீவிச் சீவிக் குணசீலமாய நடப்பேன், தவிப்பேன், தாடி வளர்ப்பேன், தற்கொலைக்கு முயல்வேன்' என்றெல்லாம் செய்து காட்டினேன்.
சீயானுக்கும் பெப்பே.
கடைசிப் பிரம்மாஸ்திரமாக ஒன்றை யோசித்தேன். சந்திரமுகி பொய்க்காது. இமய பாபா சுருள் குகையிருந்து அருள்வாக்கு தருவார். ஆனந்த விகடனில் கூடப் படம் போட்டுக் கதை சொல்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினி மாதிரி ஸ்டைலாகச் சாய்ந்து 'விடு விடு' என்று நடந்து வந்தேன். சடாரென்று திரும்பித் தலையைச் சிலுப்பி, "தேவுடி தேவுடி, இந்தப் பக்கம் சூடுடி, எங்காத்து செல்லுங்கள் எல்லாமே வைரங்கள், நீ கொஞ்சம் ரிடர்ன் பண்ணுடி" என்று பாடி ஆடினேன். ஜாடையும் காட்டினேன். பாட்டி, கை தட்டிச் சிரித்து, 'ரிபீட்ட்ட்ட்டு' என்றாள்.
கடைசியில் அக்கிழம் பயங்கரமாகச் சிரித்து, 'லகலகலகலகலகலக' என்றது.
'இது வேலைக்கு ஆவாது' என்று நான் ஜகா வாங்க நினைத்தேன். ஆனால் அப்போதுதான், அன்றலர்ந்த இன்னொரு அழகிய இளம் தீ அங்கே மாடியிலிருந்து கீழிறங்கியது.
*************
பேரிளம் பாட்டியின் இன்னொரு பேத்தியோ?
கீழே என்ன கலாட்டா என்று பார்க்க வந்தாள் போலும். இவளும் அழகு தான். சின்னப் பொம்மை மாதிரிச் சிரிப்பு. அவயவங்கள் சின்னதாயிருந்தாலும் செக்கச் செவேலென்று செப்புச் செப்பாக நேர்குத்தாகச் சிறப்புறச் செய்யப்பட்டிருந்தன.
ஆரியக் கூத்தே ஓசியில் பார்த்தாலும், காரியத்தை மறக்கலாமோ?
"Can you speak English?" என்றேன். "Of course" என்றாள் அவள் கொஞ்சம் விரோதமாக. "நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக்கும். உன்னை மாதிரி இல்லை" என்கிற உட்பொருள் அவள் சின்னக் கண்களில் ஒளிர்ந்தது.
"மன்னிக்க வேண்டுகிறேன், எந்தன் செல்லைத் தேடுகிறேன்" என்றபடி அவசரமாக என் கதையைச நான் சொல்லி முடித்ததும், அவள் தன் பாட்டியிடம் சீன மொழியில் ஏதோ வினவினாள்.
பாட்டி முகத்தில் ஆயிரம் வாட் பல்பைப் பார்த்த நான் அக மகிழ்ந்தேன். பாட்டி இப்போது தான் என் சோகக் கதையைப் புரிந்து கொண்டாள் போலும்.
'அப்பாடி, மனைவியிடம் சகஸ்ரநாமாவ்ளி கேட்க வேண்டாம். இன் ஃபாக்ட் அவளுக்கு இது தெரியவே கூட வேண்டாம். அசமஞ்சமாட்டம் எல்லாத்தையும் உடனே உடனே சொல்லி எத்தனை நாள் தான் வாங்கிக் க்ட்டிக்கறது?'
"My grandma says that she found your cell phone"
என் காதில் செந்தமிழ்த்தேன், சோடா, சிங்கிள் மால்ட் ஸ்காட்ச், ஐஸ்கோல்ட் பியர் எல்லாம் பாய்ந்தன. ஒரே நேரத்தில்.
"Very good. Thank her for me. Thank you. Thank you both for not my having to go home empty handed and get an earful."
பிறகு, ஆங்கே நாணம் கலந்த ஓர் சிறு மௌனம் நிலவலாகியது.
தருவாளா, அவள் தருவாளா? இப்போது நான் அவளைக் கேட்க வேண்டுமா? இல்லை, அவள் கேட்காமலே தருவாளா? எப்படித் தருவாள்? எங்கே தருவாள்?
வெட்கத்தை விட்டு நான் தான் அவளிடம் முதலில் கேட்டேன்: "Where is it?"
"She says she gave it to your brother-in-law" என்றது சீனப் பைங்கிளி.
"வாட்?" என்று நான் விழித்தேன். எனக்குத் தெரியாமல், என் பெற்றோரின் சம்பந்திகள், எப்போது ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்கள்?
ஈதென்ன மங்காய்? "It is not possible, since I don't even have a brother in law" என்றேன்.
அவ்வழகிய இளந்தீ தன் பாட்டி பக்கம் திரும்பியது. அடித் தொண்டைச் சீன்மொழியில் பாட்டையைத் தகித்தது:
"இன்னா கெழமே, மத்தியானமே குவார்ட்டர ஊத்திக்கினியா? இன்னாங்கடி நூலு வுடுறீங்கன்னு அந்தாளு கொரலு குடுக்கறான். மச்சினன் மாப்பிள மாமியான்னு நீ இன்னாவோ கத வுட்டுக் காது குத்தற, சாடர்னே" -என்பதாக நான் ஓரளவு புரிந்து கொண்டேன்.
பாட்டிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என்னை ஒரு முறை புழுப் போலப் பார்த்தாள். பல் செட்டைக் கழட்டி மாடிப் படிக்கட்டின் அடியில் வீசி எறிந்தபடி தீ மிதிப்பது போல் அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பேத்தியிடம் என்னவோ சொன்னாள்.
சிறு பிராயத்தில் மாயவரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி கற்காத சோகம் என்னைக் கவ்வியது.
-இன்னும் 'செல்'வேன்
Thursday, April 28, 2005
கண்ணீரால் ஒரு காசோலை
சென்ற வருடத்திய டிசம்பர் 26 சுனாமியின் கொடூரத்தால் ஏற்கனவே வீடு, வாசல், குழந்தை, குட்டிகள், ஆடு, மாடுகள், உடைமைகளை அடியோடு இழந்து தவிப்பவர்கள் அந்தமான், நிக்கோபார் வாசிகள். அங்கே நூற்றுக்குப் பத்து பேர் தப்பிப் பிழைத்திருந்தாலே ஆச்சரியம் என்கிறார்கள். அவ்வளவு பயங்கரம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. பல தீவுகள் அப்படியே மூழ்கிப் போயிருக்கின்றன.

இயற்கையின் கோர தாண்டவம் இன்னமும் அடங்காமல் பூகம்பங்களும், நில நடுக்கங்களும் தொடர்ந்து அவர்களைத் தூங்க விடாமல் உலுக்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில், நம் அரசாங்கம் அவர்களுக்கு உதவாமலே இருந்தாமல் கூடப் பரவாயில்லை.
இப்படி அநியாயமாக அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு காசேலையா? என்ன விளையாடுகிறார்களா?
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கக்கூட அக்கம் பக்கம் பார்த்துப் பயந்து கொடுக்கவேண்டிய இந்நாளைய விலைவாசிக் கொடுமையில், எப்படி அய்யா ஒரு முழுக் குடும்பத்துக்கும் உதவித் தொகையாகக் கேவலம், பிசாத்து இரண்டு ரூபாய்க்குக் காசோலை எழுத அரசாங்கத்துக்கு மனம் வந்தது?
ஒரு கணினி இந்தக் காசோலையை எழுதியிருந்தால் கூடப் பரவாயில்லை. தப்பை இயந்திரத்தின் மீது போட்டு விடலாம். என்னதான் அரசாங்கம் ஒரு கழுதை மாதிரியான மெத்தனப்பட்ட அப்த்த மண்டூக இயந்திரம் என்றாலும், கையெழுத்துப் போட்ட மகானுபாவனுக்குக் கொஞ்சமாவது ஒரு 'இது' வேண்டாம்?
பல கோடிக் கணக்கில் வந்து குவிந்திருக்கும் நிவாரண நிதி இப்படித்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா?
வெட்கம்!
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
இயற்கையின் கோர தாண்டவம் இன்னமும் அடங்காமல் பூகம்பங்களும், நில நடுக்கங்களும் தொடர்ந்து அவர்களைத் தூங்க விடாமல் உலுக்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில், நம் அரசாங்கம் அவர்களுக்கு உதவாமலே இருந்தாமல் கூடப் பரவாயில்லை.
இப்படி அநியாயமாக அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு காசேலையா? என்ன விளையாடுகிறார்களா?
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கக்கூட அக்கம் பக்கம் பார்த்துப் பயந்து கொடுக்கவேண்டிய இந்நாளைய விலைவாசிக் கொடுமையில், எப்படி அய்யா ஒரு முழுக் குடும்பத்துக்கும் உதவித் தொகையாகக் கேவலம், பிசாத்து இரண்டு ரூபாய்க்குக் காசோலை எழுத அரசாங்கத்துக்கு மனம் வந்தது?
ஒரு கணினி இந்தக் காசோலையை எழுதியிருந்தால் கூடப் பரவாயில்லை. தப்பை இயந்திரத்தின் மீது போட்டு விடலாம். என்னதான் அரசாங்கம் ஒரு கழுதை மாதிரியான மெத்தனப்பட்ட அப்த்த மண்டூக இயந்திரம் என்றாலும், கையெழுத்துப் போட்ட மகானுபாவனுக்குக் கொஞ்சமாவது ஒரு 'இது' வேண்டாம்?
பல கோடிக் கணக்கில் வந்து குவிந்திருக்கும் நிவாரண நிதி இப்படித்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா?
வெட்கம்!
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Friday, April 22, 2005
நானும் பில் கேட்சும்!
என் பணக்கார நண்பர்களைப் பற்றி நான் இங்கெல்லாம் அவ்வளவாகச் சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. என் அடக்க சுபாவம் வேறு உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
அதிலும் உலகப் பெரும் கோடீஸ்வரரைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?
'என்ன ஃப்ரெண்டு நீங்க, எப்படியாவது எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ், ராம்' என்று அவர் என்னைப் படுத்தும்போதெல்லாம் இத்தனை காலம் மறுத்து வந்தேன். பல மாதங்கள் அவரும் முணுமுணுத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். தொடர்ந்து தொணதொணத்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல் என் பாணியில் -சின்ன அளவில், 'தமிழ்க் குடிதாங்கி' அளவுக்கெல்லாம் அல்ல- தமிழ்த் தொண்டாற்றி வந்தேன்.
சியட்டிலில் பில் கேட்ஸ் தரையில் புரண்டு அழுதார். அடம் பிடித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அலகு குத்திக் கொண்டார். மண் சோறு சாப்பிட்டார். ஊஹும், நான் இது வரை மசியவே இல்லை. கூப்பிட்டபோதெல்லாம் 'தமிழ் இணையத்தில் பிசியாக இருக்கிறேன். கால்ஷீட்டே கிடையாது' என்று சொல்லி விட்டேன்.
'சரி, அட்லீஸ்ட் என் சின்னக் கம்பெனிக்காவது ஒரு சின்ன மாடல் பண்ணுங்க. அதுவும் இல்லாட்டி நான் என் பணத்தையெல்லாம் கொண்டு போய் அந்தமான், நிகோபாரில்...' என்று அவர் ஒரு நாள் பயமுறுத்திப் பயங்காட்டி அழுது தொழுது நின்றதால், நானும், வேறு வழியில்லாமல், ஒரு சின்ன 'சரி' சொல்லும்படி ஆயிற்று.
எத்தனை காலம்தான் நானும் அவருக்குத் தொடர்ந்து சால்ஜாப்பு சொல்லுவது? மனம் இரங்கினேன்.
அதன் விளைவுதான்: http://lab.msdn.microsoft.com/express/sql/default.aspx
வருங் காலத்தில் அவருடைய நச்சரிப்புக்காக, ஒரு பயாஸ்கோப்பு படத்துக்கு நான் ஓக்கே சொல்லும்படியாகவும் ஆகி விடலாம். ஆனாலும் கூட, நம்ம ஸ்நேகா கால்ஷீட்டுதாங்க இன்னும் கிடைக்கலை.
-என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
அதிலும் உலகப் பெரும் கோடீஸ்வரரைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?
'என்ன ஃப்ரெண்டு நீங்க, எப்படியாவது எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ், ராம்' என்று அவர் என்னைப் படுத்தும்போதெல்லாம் இத்தனை காலம் மறுத்து வந்தேன். பல மாதங்கள் அவரும் முணுமுணுத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். தொடர்ந்து தொணதொணத்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல் என் பாணியில் -சின்ன அளவில், 'தமிழ்க் குடிதாங்கி' அளவுக்கெல்லாம் அல்ல- தமிழ்த் தொண்டாற்றி வந்தேன்.
சியட்டிலில் பில் கேட்ஸ் தரையில் புரண்டு அழுதார். அடம் பிடித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அலகு குத்திக் கொண்டார். மண் சோறு சாப்பிட்டார். ஊஹும், நான் இது வரை மசியவே இல்லை. கூப்பிட்டபோதெல்லாம் 'தமிழ் இணையத்தில் பிசியாக இருக்கிறேன். கால்ஷீட்டே கிடையாது' என்று சொல்லி விட்டேன்.
'சரி, அட்லீஸ்ட் என் சின்னக் கம்பெனிக்காவது ஒரு சின்ன மாடல் பண்ணுங்க. அதுவும் இல்லாட்டி நான் என் பணத்தையெல்லாம் கொண்டு போய் அந்தமான், நிகோபாரில்...' என்று அவர் ஒரு நாள் பயமுறுத்திப் பயங்காட்டி அழுது தொழுது நின்றதால், நானும், வேறு வழியில்லாமல், ஒரு சின்ன 'சரி' சொல்லும்படி ஆயிற்று.
எத்தனை காலம்தான் நானும் அவருக்குத் தொடர்ந்து சால்ஜாப்பு சொல்லுவது? மனம் இரங்கினேன்.
அதன் விளைவுதான்: http://lab.msdn.microsoft.com/express/sql/default.aspx
வருங் காலத்தில் அவருடைய நச்சரிப்புக்காக, ஒரு பயாஸ்கோப்பு படத்துக்கு நான் ஓக்கே சொல்லும்படியாகவும் ஆகி விடலாம். ஆனாலும் கூட, நம்ம ஸ்நேகா கால்ஷீட்டுதாங்க இன்னும் கிடைக்கலை.
-என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Thursday, April 14, 2005
ரஜினிமுகி
முதல் நாள், முதல் ஷோ ரஜினி படத்தைப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட முதல் காதலி, முதல் முத்தம், முதல் கசமுசா ரேஞ்சுக்குப் பேசப்படுகிற புண்ணியப்பட்ட விஷயம். கன்னத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.
அதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.
சாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.
அமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.
நேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.
"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா?" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1
சூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.
'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)
'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க?' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.
'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி?' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.
'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா
ஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி செண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா? ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)
'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன(?) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்?) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. "ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு?" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு?!)
பாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.
பிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.
திடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.
தியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.
தேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்!
-என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
அதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.
சாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.
அமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.
நேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.
"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா?" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1
சூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.
'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)
'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க?' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.
'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி?' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.
'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா
ஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி செண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா? ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)
'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன(?) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்?) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. "ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு?" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு?!)
பாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.
பிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.
திடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.
தியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.
தேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்!
-என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Wednesday, April 06, 2005
கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம்
'நீ எந்த ஊரு, நா எந்த ஊரு, முகவரி தேவையில்லே!'- திரு.பாச்சிவிஜியார் எந்த நல்ல நேரத்தில் குதித்துப் பாடினாரோ தெரியவில்லை.
ஒரிஜினல் முகவரி கிடக்கட்டும். 'முகமூடி சுகமே சுகம்' என்று நெட்டில் அந்தர்தியானமாக ஆடிப் பாடிக் கலாய்த்துக் கொண்டிருந்த நம்மில் பலருக்கும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தச் செய்தி- 'விடியோ ப்ளாக்'குகள்!
வந்து கொண்டே இருக்கின்றனவாம்.
"Larry Page, co-founder of Google Inc, the leading search engine of the world, revealed on Monday in a conference in San Francisco's Moscone Center that the company is testing a "video blogging" application.
"In the next few days, we're actually going to start taking video submissions from people, and we're not quite sure what we're going to get, but we decided we'd try this experiment," Page said."
ஆஹா! இனிமேல் கவலையே இல்லை. நாம் நேரில் போய்க் கலந்து கொள்ள இயலாமல் போன குக்கிராமத்ததுக் குட்டி மைத்துனியின் மஞ்சள் நீராட்டு விழா முதல் மதுரைப் பக்கத்து மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு வரை உடனேயே வலையேற்றச் சொல்லி விடியோ ப்ளாக்குகளில் உலகெங்கும் பார்த்து மகிழலாம்.
பயாஸ்கோப் ரேஞ்சில் எல்லோருமே ஃபிலிம் காட்டி சுய தம்பட்டம் அடித்து மகிழலாம். 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்கிற மாதிரி ஏதோ ஒரு புனைபெயரில் நெட் உலா வரும் கெழ போல்ட்டுகள் விடியோ ப்ளாக்குகளால் பிடிபட்டு உதைபடவும் போகின்றன. 'கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம் ...' என்று 'பெண் பார்க்கப்படும்' சந்திரமுகிக்கள் ப்ளாக்கிலேயே கொஞ்சிப் பேசிவிடலாம். பஜ்ஜி, சொஜ்ஜி செல்வு மிச்சம்.
தமிழ் இணையக் குழுமங்களில் மிக ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. விடியோ ப்ளாக்குகளின் உபயத்தில் இனிமேல் தமிழ்நாட்டு அசெம்பிளி ரேஞ்சுக்கு நாம் ஃப்ரீ ஷோ பார்க்கலாம்.
பாத்ரூம் பாகவதர், மந்தவெளி எட்டாம் நம்பர் கடைக் கஷ்டமர்கள், மெய்லாப்பூர் கபாலி, நாயர், அரைப்ளேடு பீட்டர், பிச்சுவா பக்கிரி, புலவர் ஆதிமந்தி, மங்களம் மாமி ...என்று ஏகப்பட்ட கோஷ்டியை நான் எப்படி விடியோ வலையேற்றி, ப்ளாக் கரை சேர்க்கப் போகிறேன் என்கிற கவலை எனக்கு இப்போதே வந்துவிட்டது!
என்னைக் கூடிய சீக்கிரம் விடியோ ப்ளாக்கில் பார்க்கப் போகிறீர்கள் என்கிற கவலை உங்களுக்கு இன்னுமா வரவில்லை?
என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
ஒரிஜினல் முகவரி கிடக்கட்டும். 'முகமூடி சுகமே சுகம்' என்று நெட்டில் அந்தர்தியானமாக ஆடிப் பாடிக் கலாய்த்துக் கொண்டிருந்த நம்மில் பலருக்கும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தச் செய்தி- 'விடியோ ப்ளாக்'குகள்!
வந்து கொண்டே இருக்கின்றனவாம்.
"Larry Page, co-founder of Google Inc, the leading search engine of the world, revealed on Monday in a conference in San Francisco's Moscone Center that the company is testing a "video blogging" application.
"In the next few days, we're actually going to start taking video submissions from people, and we're not quite sure what we're going to get, but we decided we'd try this experiment," Page said."
ஆஹா! இனிமேல் கவலையே இல்லை. நாம் நேரில் போய்க் கலந்து கொள்ள இயலாமல் போன குக்கிராமத்ததுக் குட்டி மைத்துனியின் மஞ்சள் நீராட்டு விழா முதல் மதுரைப் பக்கத்து மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு வரை உடனேயே வலையேற்றச் சொல்லி விடியோ ப்ளாக்குகளில் உலகெங்கும் பார்த்து மகிழலாம்.
பயாஸ்கோப் ரேஞ்சில் எல்லோருமே ஃபிலிம் காட்டி சுய தம்பட்டம் அடித்து மகிழலாம். 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்கிற மாதிரி ஏதோ ஒரு புனைபெயரில் நெட் உலா வரும் கெழ போல்ட்டுகள் விடியோ ப்ளாக்குகளால் பிடிபட்டு உதைபடவும் போகின்றன. 'கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம் ...' என்று 'பெண் பார்க்கப்படும்' சந்திரமுகிக்கள் ப்ளாக்கிலேயே கொஞ்சிப் பேசிவிடலாம். பஜ்ஜி, சொஜ்ஜி செல்வு மிச்சம்.
தமிழ் இணையக் குழுமங்களில் மிக ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. விடியோ ப்ளாக்குகளின் உபயத்தில் இனிமேல் தமிழ்நாட்டு அசெம்பிளி ரேஞ்சுக்கு நாம் ஃப்ரீ ஷோ பார்க்கலாம்.
பாத்ரூம் பாகவதர், மந்தவெளி எட்டாம் நம்பர் கடைக் கஷ்டமர்கள், மெய்லாப்பூர் கபாலி, நாயர், அரைப்ளேடு பீட்டர், பிச்சுவா பக்கிரி, புலவர் ஆதிமந்தி, மங்களம் மாமி ...என்று ஏகப்பட்ட கோஷ்டியை நான் எப்படி விடியோ வலையேற்றி, ப்ளாக் கரை சேர்க்கப் போகிறேன் என்கிற கவலை எனக்கு இப்போதே வந்துவிட்டது!
என்னைக் கூடிய சீக்கிரம் விடியோ ப்ளாக்கில் பார்க்கப் போகிறீர்கள் என்கிற கவலை உங்களுக்கு இன்னுமா வரவில்லை?
என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Friday, March 25, 2005
அம்மாவுக்கு ஒரு கடிதம்
நேற்று மாலை திடீரென்று என் அண்ணன் ஸ்வாமிநாதன் தொலைபேசியில் என்னை அழைத்தார்:
"சென்ற வருடம் அந்த சுருட்டப்பள்ளி என்கிற ஒரு ஊரைப் பற்றி இந்தியாவிலிருந்து அம்மாவுக்கு எழுதியிருந்தாயே, அந்தக் கடிதத்தை இப்போது மறுமுறை பார்த்தேன். அதை நெட்டில் போட்டாலென்ன?"
எனக்கு மறந்தே போய்விட்ட அந்தக் கடிதத்தை அவர் நினவுடுத்தியதும், நானும் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். 'போடலாமே' என்று தான் தோன்றியது.
என் அம்மாவுக்கு நான் டிசம்பர் 2003 முடியும்போது எழுதியது அது. பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.
பிறர் கடிதத்தைப் படிக்கின்ற பாவம் 'சுருட்டப்பள்ளி' மகிமையால ஓடியே போகட்டும். புண்ணீயம், கிண்ணீயம் ஏதாவது கிடைத்தால் மட்டும் அதில் எனக்கும் பங்கு வேண்டும்.
சென்னை, டிசம்பர் 31, 2003
-----------------------------
அன்புள்ள அம்மாவுக்கு,
சந்துரு அநேக நமஸ்காரம். நான் இங்கே சென்னையில் சௌக்கியமாக இருக்கிறேன். நீ உடம்பு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறாயா? முழங்கால் வலி எப்படி இருக்கிறது?
இங்கே வெயில் தற்சமயம் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் தூறல். சில சம்யம் கொஞ்சூண்டு, அடித்துப்பெய்யாமல், அசமஞ்சமான மழை. அதிலேயே ஊர் நாறிப்போகிறது வழக்கம்போல். ஆனாலும், அடையார் ஆற்றைப் பெருமளவில் சுத்திகரித்திருப்பதால் கொசுக்கள் மிகவும் குறைந்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். வேண்டுமான மழை பெய்யாததால் இந்த வருஷமும் சம்மரில் சென்னை தண்ணீருக்குத் 'ததிங்கிணதோம்' போடப்போவதாகத்தான் சொல்கிறார்கள்.
சென்ற பிரதோஷத்தின்போது (டிசம்பர் 14) நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் 'சுருட்டபள்ளி' என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.
சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல் உள்ளே போக முடிந்தது. போனவுடன் நேரே பள்ளிகொண்ட ஈஸ்வரனைப் பார்க்கப்போகிறோமென்று நினைத்திருந்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு எல்லோரும் எட்டி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தது சிவனின் சின்ன வாகனத்தை. சிவனுக்கு எதிரில் இருந்த சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.
கபாலி கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மாலிபு கோவிலில் கூட பிரதோஷமென்றால் சிவனுக்கு ஆனந்தமாக அபிஷேகம். அவ்வளவு தான்.
ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம் விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.
தலபுராணம் என்ன என்று சொன்னார்கள். சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போ ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான். பூஜை, ஆரத்தி, அர்ச்சனை என்று எல்லாம் முடிந்து உள்ளே போய் தனி சந்நிதியில் அம்பாளையும், பிறகு பார்வதி மடியில் பள்ளிகொண்டேஸ்வர மூலவரையும் தரிசித்தோம்.
பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. ஆனால், சிவன் கோவிலில் கணீரென்று யாருமே பிரதோஷ காலத்தில் ருத்ர, சமகம் சொல்ல மாட்டேனென்கிறீகளே என்று சிவாச்சாரியாரிடம் குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்துக்கொண்டே ஆரத்தித் தட்டை நீட்டினார். 'நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மகாதேவாய ....' என்று நான் ஆரம்பித்தவுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேயர் விருப்பம் இருந்தால் தான் சிவனுக்கே ருத்ர பாக்கியம் கிடைக்கும் போலிருக்கிறது.
பிறகு அங்கேயிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் போனோம். அங்கேயும் ஒரு விசேஷம். வேதபுரீஸ்வரர் மச்சாவதரமாக இருக்கிறார். கர்ப்பக் கிரகத்திலேயே மீன் பாதி, மனித உருவம் பாதியாக மூலவர். மச்சாவதாரமே அங்கே தான் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். தாயார் பெயர் வேதவல்லித் தாயார். வெகு லட்சணம். நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பெரிய் புராதனக் கோவில், சுத்தமாக இருக்கிறது. ஆனால், தல புராணமென்ன என்று கேட்டால் சின்னக் குருக்கள் பையன் சினத்துடன் முறைக்கிறான். அமெரிக்கா போவதற்காக GRE எழுதிக் கொண்டிருக்கிறானோ, என்னவோ.
*******************************************************
திருப்பதி போவதற்கு இங்கே சென்னையிலேயே ஏற்பாடுகள் செய்ய வசதியாக தி. நகர் வெங்கடநாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தானத்துக்காரர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு ஆபீஸ் திறந்தார்கள். பெரிய விசாலமான ஆபீசில் அழகான பெருமாள், பத்மாவதித் தாயார் படங்கள், பெருமாள் சிலை எல்லாம் இருக்கும். இப்போது பார்த்தால், அங்கே சாயங்கால வேளைகளில் பயங்கர லைன் நிற்கிறது. அந்த இடம் ஒரு மினி திருப்பதியாகவே மாறி விட்டது போல் தெரிகிறது. வாசலிலேயே பூக்கடைகள், செருப்பைப் பார்த்துக் கொள்ள பெட்டிக்கடைகள் இன்ன பிற. உள்ளே கம்பி கட்டி, ஜனங்களை வளைத்து வளைத்துத்தான் விடுகிறார்கள். ஆன்மீகம் அலைமோதுகிறது.
உள்ளே, ஒரு திருப்பதி எ·பெக்டுக்காக யாரோ ஒரு பெரியவர் அநாவசியமாகத் தெலுங்கில் இரைந்து யாரோடோ மாட்லாடுகிறார். 'ஜருகண்டி'க்குப் பதிலாக ஒரு அநாவசிய 'நவுருங்க, நவுருங்க'த் தள்ளுமுள்ளு. யாருமே கண்டுகொள்ளாவிட்டாலும் சும்மாவானும் யாரையாவது யாராவது விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மூலவரல்லாத சிலைப் பெருமாளும் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டராவது ஒரு ஸ்லோகமாவது, நாமாவளியாவது சொல்லவேண்டுமே? ஊஹ¥ம். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ரொம்பவும் நசுங்காமல் வெளியே வந்துவிட்டேன்.
உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை. கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.
'இப்பொது என் பசிக்குச் சாப்பாடு கிடைக்குமா, கிடைக்காதா?' என்ற பயத்தில் நான் எழுத்தாளர் முருகன் வீட்டில் நல்ல சாப்பாட்டுக்கு உடனே சென்று விட்டேன்.
அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!
நமஸ்காரம்.
அன்புடன்,
சந்துரு
"சென்ற வருடம் அந்த சுருட்டப்பள்ளி என்கிற ஒரு ஊரைப் பற்றி இந்தியாவிலிருந்து அம்மாவுக்கு எழுதியிருந்தாயே, அந்தக் கடிதத்தை இப்போது மறுமுறை பார்த்தேன். அதை நெட்டில் போட்டாலென்ன?"
எனக்கு மறந்தே போய்விட்ட அந்தக் கடிதத்தை அவர் நினவுடுத்தியதும், நானும் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். 'போடலாமே' என்று தான் தோன்றியது.
என் அம்மாவுக்கு நான் டிசம்பர் 2003 முடியும்போது எழுதியது அது. பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.
பிறர் கடிதத்தைப் படிக்கின்ற பாவம் 'சுருட்டப்பள்ளி' மகிமையால ஓடியே போகட்டும். புண்ணீயம், கிண்ணீயம் ஏதாவது கிடைத்தால் மட்டும் அதில் எனக்கும் பங்கு வேண்டும்.
சென்னை, டிசம்பர் 31, 2003
-----------------------------
அன்புள்ள அம்மாவுக்கு,
சந்துரு அநேக நமஸ்காரம். நான் இங்கே சென்னையில் சௌக்கியமாக இருக்கிறேன். நீ உடம்பு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறாயா? முழங்கால் வலி எப்படி இருக்கிறது?
இங்கே வெயில் தற்சமயம் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் தூறல். சில சம்யம் கொஞ்சூண்டு, அடித்துப்பெய்யாமல், அசமஞ்சமான மழை. அதிலேயே ஊர் நாறிப்போகிறது வழக்கம்போல். ஆனாலும், அடையார் ஆற்றைப் பெருமளவில் சுத்திகரித்திருப்பதால் கொசுக்கள் மிகவும் குறைந்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். வேண்டுமான மழை பெய்யாததால் இந்த வருஷமும் சம்மரில் சென்னை தண்ணீருக்குத் 'ததிங்கிணதோம்' போடப்போவதாகத்தான் சொல்கிறார்கள்.
சென்ற பிரதோஷத்தின்போது (டிசம்பர் 14) நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் 'சுருட்டபள்ளி' என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.
சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல் உள்ளே போக முடிந்தது. போனவுடன் நேரே பள்ளிகொண்ட ஈஸ்வரனைப் பார்க்கப்போகிறோமென்று நினைத்திருந்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு எல்லோரும் எட்டி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தது சிவனின் சின்ன வாகனத்தை. சிவனுக்கு எதிரில் இருந்த சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.
கபாலி கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மாலிபு கோவிலில் கூட பிரதோஷமென்றால் சிவனுக்கு ஆனந்தமாக அபிஷேகம். அவ்வளவு தான்.
ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம் விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.
தலபுராணம் என்ன என்று சொன்னார்கள். சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போ ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான். பூஜை, ஆரத்தி, அர்ச்சனை என்று எல்லாம் முடிந்து உள்ளே போய் தனி சந்நிதியில் அம்பாளையும், பிறகு பார்வதி மடியில் பள்ளிகொண்டேஸ்வர மூலவரையும் தரிசித்தோம்.
பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. ஆனால், சிவன் கோவிலில் கணீரென்று யாருமே பிரதோஷ காலத்தில் ருத்ர, சமகம் சொல்ல மாட்டேனென்கிறீகளே என்று சிவாச்சாரியாரிடம் குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்துக்கொண்டே ஆரத்தித் தட்டை நீட்டினார். 'நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மகாதேவாய ....' என்று நான் ஆரம்பித்தவுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேயர் விருப்பம் இருந்தால் தான் சிவனுக்கே ருத்ர பாக்கியம் கிடைக்கும் போலிருக்கிறது.
பிறகு அங்கேயிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் போனோம். அங்கேயும் ஒரு விசேஷம். வேதபுரீஸ்வரர் மச்சாவதரமாக இருக்கிறார். கர்ப்பக் கிரகத்திலேயே மீன் பாதி, மனித உருவம் பாதியாக மூலவர். மச்சாவதாரமே அங்கே தான் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். தாயார் பெயர் வேதவல்லித் தாயார். வெகு லட்சணம். நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பெரிய் புராதனக் கோவில், சுத்தமாக இருக்கிறது. ஆனால், தல புராணமென்ன என்று கேட்டால் சின்னக் குருக்கள் பையன் சினத்துடன் முறைக்கிறான். அமெரிக்கா போவதற்காக GRE எழுதிக் கொண்டிருக்கிறானோ, என்னவோ.
*******************************************************
திருப்பதி போவதற்கு இங்கே சென்னையிலேயே ஏற்பாடுகள் செய்ய வசதியாக தி. நகர் வெங்கடநாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தானத்துக்காரர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு ஆபீஸ் திறந்தார்கள். பெரிய விசாலமான ஆபீசில் அழகான பெருமாள், பத்மாவதித் தாயார் படங்கள், பெருமாள் சிலை எல்லாம் இருக்கும். இப்போது பார்த்தால், அங்கே சாயங்கால வேளைகளில் பயங்கர லைன் நிற்கிறது. அந்த இடம் ஒரு மினி திருப்பதியாகவே மாறி விட்டது போல் தெரிகிறது. வாசலிலேயே பூக்கடைகள், செருப்பைப் பார்த்துக் கொள்ள பெட்டிக்கடைகள் இன்ன பிற. உள்ளே கம்பி கட்டி, ஜனங்களை வளைத்து வளைத்துத்தான் விடுகிறார்கள். ஆன்மீகம் அலைமோதுகிறது.
உள்ளே, ஒரு திருப்பதி எ·பெக்டுக்காக யாரோ ஒரு பெரியவர் அநாவசியமாகத் தெலுங்கில் இரைந்து யாரோடோ மாட்லாடுகிறார். 'ஜருகண்டி'க்குப் பதிலாக ஒரு அநாவசிய 'நவுருங்க, நவுருங்க'த் தள்ளுமுள்ளு. யாருமே கண்டுகொள்ளாவிட்டாலும் சும்மாவானும் யாரையாவது யாராவது விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மூலவரல்லாத சிலைப் பெருமாளும் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டராவது ஒரு ஸ்லோகமாவது, நாமாவளியாவது சொல்லவேண்டுமே? ஊஹ¥ம். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ரொம்பவும் நசுங்காமல் வெளியே வந்துவிட்டேன்.
உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை. கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.
'இப்பொது என் பசிக்குச் சாப்பாடு கிடைக்குமா, கிடைக்காதா?' என்ற பயத்தில் நான் எழுத்தாளர் முருகன் வீட்டில் நல்ல சாப்பாட்டுக்கு உடனே சென்று விட்டேன்.
அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!
நமஸ்காரம்.
அன்புடன்,
சந்துரு
Monday, February 14, 2005
திருமதிப்பாச்சி -2
அல்லார்க்கும் கும்பிடுபா. ப்ரொடக்சன்ல பிஸியா கீறன் மச்சி. 'கதை இன்னா, காமெடி ஆரு, கம்லா காமேசு அம்மாவா நடிக்குதாமே'ன்னு கேள்விங்க கேட்டு, செல்லுல புட்சி, ஒரே பேஜாருமா.
கொஞ்சம் வெயிட் பிளீஸ். படங் காட்டுறதே உனுக்குத்தானே நண்பா. நிவீஸ் ரிலிஸ் குடுன்னு நீயே இப்பிடிப் பெராண்டினியின்னா நா இன்னா செய்வன்?
கதை விசனம் பாகவதரு, பாடல்ங்கள் பொலவரு, இஸ்டண்டு பீட்டரு...அவளவ்தான்பா இப்போதிக்கு ஸொல்ல முடியும்.
ஷாட்டு ரெடியாம், வர்ட்டா?
கொஞ்சம் வெயிட் பிளீஸ். படங் காட்டுறதே உனுக்குத்தானே நண்பா. நிவீஸ் ரிலிஸ் குடுன்னு நீயே இப்பிடிப் பெராண்டினியின்னா நா இன்னா செய்வன்?
கதை விசனம் பாகவதரு, பாடல்ங்கள் பொலவரு, இஸ்டண்டு பீட்டரு...அவளவ்தான்பா இப்போதிக்கு ஸொல்ல முடியும்.
ஷாட்டு ரெடியாம், வர்ட்டா?
Friday, February 04, 2005
திருமதிப்பாச்சி -1
கடலூர் தைலாபுரத்தில் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்களின் வீடு சாதாரணமாகவே தொண்டர்கள், குண்டர்கள், மரம்வெட்டிகள், காடுவெட்டிகள், கரைவேட்டிகள் என்று பரபரப்பாக இருக்கும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே அங்கே பரபரப்பு தென்பட்டது.
'சர்'ரென்று சீறி வந்த காரிலிருந்து திருமாவளவன் இறங்கினார். 'வாழ்க சிறுத்தை அடக்கிய மறத் ...' என்று ஏதோ வாழ்த்த ஆரம்பித்த நாலு பேரையும் பார்த்துச் சீறினார்.
"அடப் போங்கய்யா அப்பால. ஏற்கனியே அந்த அம்மா ஆப்பு மேல ஆப்பா வெக்குது. இவுனுங்க வாழ்த்த வந்துட்டானுங்க."
தடுப்பதற்கு வேட்டி இல்லாததால், பேண்டணிந்த திருமா பரபரவென்று படியேறினார்.
கட்சி ஆஃபீசின் முன் அறையில் ராமதாஸ் கவலையோடு அமர்ந்திருந்தார்.
"வாங்க திருமா. சொல்லி அனுப்பின உடனேயே வந்துட்டீங்க. மேட்டர் சீரியஸ்தான்"
"புரியுதுங்க. அந்த விருமாண்டியாச்சியும் கொஞ்சம் பயந்த ஆளு. 'பாபா' படப் பொட்டிங்கள நாம புடுங்கித் தீவுளி கொண்டாடின மாதிரி ஏதாச்சியும் ஏடாகூடமாச் செஞ்சுடுவம்னு அவருக்குக் கொஞ்சமாச்சியும் பயம் இருந்துது. நாமளும், 'என்னய்யா டைட்டில் வைக்கற? 'மும்பை' தமிளா, இல்லை 'எக்ஸ்பிரஸ்' டமிலாய்யான்னு அவரைக் கலாய்ச்சிகினு ஜாலியா தொழில் பண்ணிகினிருந்தம். இந்த அம்மா இதுல திடீர்னு தலையிட்டு, "யோவ்! ஒயுங்க மொறயா மொதல்ல சன் டீவி, ஸ்டாலின் அல்லாப் பேரையும் மாத்திச் சீர் திருத்தம் பண்ணிட்டு அப்புறமா இங்க வாங்கய்யான்னு கொம்பு சீவி விடுது. டேய் தம்பி, அந்த ஜாக் ஃப்ரூட் ப்ளேட்டை இப்டித் தள்ளுடா. உங்க பேரே வடமொழிப் பேராம், அதை இராமநேசன்னு மொதல்ல மாத்தற வழியப் பாருங்கங்குது பாருங்க, டமாசு"
பாதிப் பலாச் சுளையை வாயில் போட்டிருந்த டாக்டருக்கு அடி நாக்கே கசந்தது. "சமயம் பார்த்து இந்த ஆள் நம்ம பேரு, ஊரு, அட்ரஸு எல்லாத்தையுமே மாத்திடப் பாக்கறாம் பார்ரா" என்று கொதித்தார். அடுத்த சீட் அலாட்மெண்டில் இதை மறக்கக் கூடாதென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.
"அத விட்டுத் தள்ளுங்க, திருமா. தங்காச்சி அப்படித்தான் எதுனா சொல்லினு கெடக்கும். நாம தான் அண்ணன்காரனா லட்சணமா அத்தையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பேரு மாத்தறதெல்லாம் அபத்தம்ங்க. உங்க ஒரிஜினல் பேரைச் சொன்னா இப்ப உங்க வூட்லயே கூட யாருக்கும் தெரியாது. நானு உங்கள அவசர அவசரமா எமர்ஜென்சி செஷனுக்குக் கூப்பிட்டதே இந்தத் 'திருமதிப்பாச்சி' மேட்டராங்க."
"அய்யா, அதை நானும் கேள்விப்பட்டேனுங்க. நாடே அமளிதொமளிப்படுது. இந்தப் படம் ரிலீசானப்புறம் அந்த விஜய்ப் பையன் நேரா ஹாலிவுட்டு தான்னு பேசிக்கறாங்க. 'ஒரே ஒரு ரோல் தரேன்னு சொல்லுங்க, இந்தச் சந்திரமுகியையும் ஜக்குபாய் ஆக்கிப்புடறேன்னு ஹைதராபாத்லேருந்து ரஜினி தவிக்கிறாராம். இன்னா கதை, யாரு மியூசிக்கு ஒண்ணுமே புரியலை. அஞ்சு ஹீரோயினாம். விஜய்-த்ரிஷாவோட 'மாமி மாமி, நீதான் என் சுனாமி, இப்பயே இங்கயே காமி காமி'ன்னு ஒரு கெட்டபாட்டு டூயட்டு இருக்குதாம்."
டாக்டர் ஏகக் கடுப்பில் இருந்தார். "நீங்க பேசறதப் பார்த்தா படத்துல ஒரு ஏரியாவாச்சியும் வாங்காம விட மாட்டீங்க போலத் தெரியுது. யாரு ம்யூசிக் போட்டா நமக்கு என்னாங்க? டைட்டில் மொதல்ல தமிழா இல்லியான்னு ஒரு எழவும் புரியலை. அதை டிஸ்கஸ் பண்ண உங்களைக் கூப்பிட்டா, நீங்க படபுராணம் பாடுறீங்க"
திருமா சுதாரித்துக் கொண்டார்.
"மன்னிச்சுக்குங்க டாக்டர். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கையோட ஏழெட்டு தமிழ்ப் புலவர்களையும் புடிச்சிட்டு வந்திருக்கேனில்ல, யோவ் டிரைவர், எங்கய்யா அந்தாளுங்க எல்லாம்?"
சிங்கிள் டீயை மரத்தடியில் சீப்பியிருந்த நாலைந்து பேர் அலறியடித்து ஓடி வந்தார்கள்.
"இவிங்க அல்லாருமே தமிழ் மீடியத்துலயே முதுகலை, மூத்தகலையெல்லாம் முடிச்சி இப்ப வேலையில்லாம மொடங்கிக் கெடக்கறவங்க தான். தாராளமா நீங்களே கேளுங்க"
டாக்டர் பலாக் கொட்டையைத் 'தூ' என்று துப்பினார்.
"ஏன்யா, இன்னாய்யா டைட்டில் வெக்கறான் அந்த பாத்ரூம் பாகவதர்? 'திருமதிப்பாச்சி'ன்னா என்னய்யா அருத்தம்?"
ஒடிசலாக ஓரமாக நின்றிருந்த தமிழ் மூதறிஞர் தொண்டைகொண்டான், தைரியம் வருவதற்காகக் கொஞ்சம் செருமிக் கொண்டார்:
"அய்யா, ஞானறிந்த தமிழ் மொழியில் இதுகாறும் அஃதோர் சொற்பிரயோகங் குறித்துச் செப்பேடுகளில் சுரண்டியாய்ந்து குறிப்பெடுக்குங்கால் மரபில் வழுக்குறித்து மாணாக்கர் தம் சுவடியில் எழுத்தாணி கொண்டிலக்கியம் பகர்ந்தாற்போலே அன்றில்..."
"இந்தாள யாருய்யா உள்ளார விட்டது?" என்றார் மருத்துவர். அவருக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இந்த டைட்டில் என்ன லாங்குவேஜ்னு கேட்டாக்க, இந்த ஆளு எந்த லாங்குவேஜுலயோ பேசி என் பிராணனை வாங்கறான்யா. என்னங்க திருமா, இந்தாளை எங்க புடிச்சீங்க?"
திருமா தன் டிரைவரை முறைத்தார். ஹோல்சேலாக நாலைந்து பேரை ஓட்டுநர் காண்டிராக்டாக ஓட்டி வந்தபோதே அவர் கொஞ்சம் சந்தேகித்திருந்தார். "இரு, இரு, உன்னை அப்புறமா வெச்சிக்கறன்" என்று அவரும் பல்லைக் கடித்தார். அவருடைய டிரைவர் அவசரமாகத் தும்மியபடியே டிக்கிக்குப் பின்புறம் பம்மினார்.
"யாராச்சியும் ஒருத்தர் சொல்லுங்கய்யா, போதும். அந்தட் டைட்டில் தமிழ் தானா?"
'தம் சொந்த இன்ப உற்சாகபான வாசனை பிறற்கெதற்கு?' என்று அடக்கமாகக் கொஞ்சம் வாய் பொத்தி 'மப்'பில் இருந்த தமிழினிப்பேரிடி தரணிக்கொண்டானால் இனியும் வாய் பொத்தி வாளாவிருக்க முடியவில்லை.
"பாத்ரூம்ங்கறது தமிழ் இல்லிங்க. பாகவதர்ங்கறதும் வடமொழிதாங்க. 'குளியலறைக் கதைசொல்லி'ன்னு வேணும்னா அதைத் தமிழாக்கம் பண்ணலாம். அவரு அய்ருங்கரதுனால எப்டி வேணும்னாலும் யாரு வேணும்னாலும் திட்டலாங்க. அவரு தொடச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அம்மா தலையிடாத வரைக்கும் பிரச்னை இல்லிங்க. பேருல பாத்ரூமுங்கறதுனால இந்தத் திரிசாப் பொண்ணு ..."
"அந்த ஆளை அப்டியே தூக்கிட்டுப் போயி தேவனாம்பட்டிணம் சுனாமிப் பள்ளத்துல தள்ளுய்யா' என்று திருமா கர்ஜித்தார்.
"இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவறதாத் தெரியலிங்க தலைவரே. பத்திரிககைக்காரனுங்க வேற எதுனா அறிக்கை கொடுங்கன்னு மொய்க்கறானுங்க. நானே ஒண்ணு எழுதிட்டு வந்துட்டேன். அதை நீங்க வழக்கமா படிக்கறா மாதிரி மெதுவாப் படிச்சி முடிச்சிடுங்க"
வேண்டாவெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த மருத்துவர், "அந்த ரிப்போர்ட்டருங்களை உள்ளார வரச் சொல்லுய்யா" என்றார். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். எரிச்சலுடன் படிக்க ஆரம்பித்தார்.
"தமிழ் சினிமாப் படத் தலைப்புகளைத் தனித் தமிழில் மட்டுமே வைத்திடுதல் வேண்டுமென்று நானும் தம்பி இளஞ்சிறுத்தை, வீரச் சிங்கம் திருமாவும் தனித்தோர் போராட்டம் நடத்தித் தரணியெங்கும் வெற்றி முரசு கொட்டி வருவதைத் தமிழகமே அறியும்." போறும்ங்க, திருமா மீதிய நீங்களே படிச்சிடுங்க. எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது.
மானசீகமான அடுத்த தேர்தல் சீட் அலாட்மெண்டில் கொடுக்கப்போகும் ஒரு சீட்டில் திருமா பாதி சீட்டை அக்கணமே இழந்திருந்தார்.
அது தெரியாத திருமா தொடர்ந்தார்: "திருமதியென்பது தமிழென்பதைச் சிங்களவர் அறிவர். சிங்கப்பூராரும் அறிவர். எமக்கோ, என் கூடத் தோள் கொடுக்க வந்திருக்கும் மருத்துவர் இராமநேசருக்கோ அதில் பிரச்னை இல்லை. ஆனால் அத்தலைப்பின் அடுத்த பாதியில் இருக்கிறது கயவர்களின் சூக்குமம். பச்சைத் தமிழனின் கொடி பாரெங்கும் பரவித் தழைத்து இலெமூரியாக் கண்டத்தை அவன் அடக்கி ஆண்டு வந்தான் ஒரு காலம். குள்ள நரியாம் வடதேச ஆரியர் அங்கே படையெடுத்து வந்து இலெமூரியாவையே அழித்தொழித்தபோது, அவர்கள் தமக்குள்ளே சைகையில் பேசிய மொழியாம் குன்சு. அந்தக் குன்சு மொழியைத் திரும்பவும் வழக்கில் கொண்டு வந்து தமிழினத்தையே வேறோடு அறுத்துப்போட இந்நாள் ஆரியர் செய்யும் தந்திரமே இது என்பதில் எமக்கோ, எங்கள் தானைத் தலைவர்கள் எவருக்குமோ ஐயம் சிறிதுமில்லை. இதை வன்மையாகக் கண்டித்துப் பல போராட்டங்களை எங்கள் கூட்டணித் தலைவர்கள் விரைவில் சென்னையில் வெளியிட இருக்கிறார்கள். வணக்கம், வாழ்க தமிழ், ஒழிக குன்சு."
திருமா அறிக்கையைப் படித்து முடிக்குமுன்னரே அறிவாலயத்திலிருந்தும் டெல்லியிலிருந்தும் பறந்து வந்திருந்த டெலிபோன் கோபக் கணைகளுக்கு மருத்துவர் பதறியபடியே பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
(எடுப்போம்)
'சர்'ரென்று சீறி வந்த காரிலிருந்து திருமாவளவன் இறங்கினார். 'வாழ்க சிறுத்தை அடக்கிய மறத் ...' என்று ஏதோ வாழ்த்த ஆரம்பித்த நாலு பேரையும் பார்த்துச் சீறினார்.
"அடப் போங்கய்யா அப்பால. ஏற்கனியே அந்த அம்மா ஆப்பு மேல ஆப்பா வெக்குது. இவுனுங்க வாழ்த்த வந்துட்டானுங்க."
தடுப்பதற்கு வேட்டி இல்லாததால், பேண்டணிந்த திருமா பரபரவென்று படியேறினார்.
கட்சி ஆஃபீசின் முன் அறையில் ராமதாஸ் கவலையோடு அமர்ந்திருந்தார்.
"வாங்க திருமா. சொல்லி அனுப்பின உடனேயே வந்துட்டீங்க. மேட்டர் சீரியஸ்தான்"
"புரியுதுங்க. அந்த விருமாண்டியாச்சியும் கொஞ்சம் பயந்த ஆளு. 'பாபா' படப் பொட்டிங்கள நாம புடுங்கித் தீவுளி கொண்டாடின மாதிரி ஏதாச்சியும் ஏடாகூடமாச் செஞ்சுடுவம்னு அவருக்குக் கொஞ்சமாச்சியும் பயம் இருந்துது. நாமளும், 'என்னய்யா டைட்டில் வைக்கற? 'மும்பை' தமிளா, இல்லை 'எக்ஸ்பிரஸ்' டமிலாய்யான்னு அவரைக் கலாய்ச்சிகினு ஜாலியா தொழில் பண்ணிகினிருந்தம். இந்த அம்மா இதுல திடீர்னு தலையிட்டு, "யோவ்! ஒயுங்க மொறயா மொதல்ல சன் டீவி, ஸ்டாலின் அல்லாப் பேரையும் மாத்திச் சீர் திருத்தம் பண்ணிட்டு அப்புறமா இங்க வாங்கய்யான்னு கொம்பு சீவி விடுது. டேய் தம்பி, அந்த ஜாக் ஃப்ரூட் ப்ளேட்டை இப்டித் தள்ளுடா. உங்க பேரே வடமொழிப் பேராம், அதை இராமநேசன்னு மொதல்ல மாத்தற வழியப் பாருங்கங்குது பாருங்க, டமாசு"
பாதிப் பலாச் சுளையை வாயில் போட்டிருந்த டாக்டருக்கு அடி நாக்கே கசந்தது. "சமயம் பார்த்து இந்த ஆள் நம்ம பேரு, ஊரு, அட்ரஸு எல்லாத்தையுமே மாத்திடப் பாக்கறாம் பார்ரா" என்று கொதித்தார். அடுத்த சீட் அலாட்மெண்டில் இதை மறக்கக் கூடாதென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.
"அத விட்டுத் தள்ளுங்க, திருமா. தங்காச்சி அப்படித்தான் எதுனா சொல்லினு கெடக்கும். நாம தான் அண்ணன்காரனா லட்சணமா அத்தையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பேரு மாத்தறதெல்லாம் அபத்தம்ங்க. உங்க ஒரிஜினல் பேரைச் சொன்னா இப்ப உங்க வூட்லயே கூட யாருக்கும் தெரியாது. நானு உங்கள அவசர அவசரமா எமர்ஜென்சி செஷனுக்குக் கூப்பிட்டதே இந்தத் 'திருமதிப்பாச்சி' மேட்டராங்க."
"அய்யா, அதை நானும் கேள்விப்பட்டேனுங்க. நாடே அமளிதொமளிப்படுது. இந்தப் படம் ரிலீசானப்புறம் அந்த விஜய்ப் பையன் நேரா ஹாலிவுட்டு தான்னு பேசிக்கறாங்க. 'ஒரே ஒரு ரோல் தரேன்னு சொல்லுங்க, இந்தச் சந்திரமுகியையும் ஜக்குபாய் ஆக்கிப்புடறேன்னு ஹைதராபாத்லேருந்து ரஜினி தவிக்கிறாராம். இன்னா கதை, யாரு மியூசிக்கு ஒண்ணுமே புரியலை. அஞ்சு ஹீரோயினாம். விஜய்-த்ரிஷாவோட 'மாமி மாமி, நீதான் என் சுனாமி, இப்பயே இங்கயே காமி காமி'ன்னு ஒரு கெட்டபாட்டு டூயட்டு இருக்குதாம்."
டாக்டர் ஏகக் கடுப்பில் இருந்தார். "நீங்க பேசறதப் பார்த்தா படத்துல ஒரு ஏரியாவாச்சியும் வாங்காம விட மாட்டீங்க போலத் தெரியுது. யாரு ம்யூசிக் போட்டா நமக்கு என்னாங்க? டைட்டில் மொதல்ல தமிழா இல்லியான்னு ஒரு எழவும் புரியலை. அதை டிஸ்கஸ் பண்ண உங்களைக் கூப்பிட்டா, நீங்க படபுராணம் பாடுறீங்க"
திருமா சுதாரித்துக் கொண்டார்.
"மன்னிச்சுக்குங்க டாக்டர். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கையோட ஏழெட்டு தமிழ்ப் புலவர்களையும் புடிச்சிட்டு வந்திருக்கேனில்ல, யோவ் டிரைவர், எங்கய்யா அந்தாளுங்க எல்லாம்?"
சிங்கிள் டீயை மரத்தடியில் சீப்பியிருந்த நாலைந்து பேர் அலறியடித்து ஓடி வந்தார்கள்.
"இவிங்க அல்லாருமே தமிழ் மீடியத்துலயே முதுகலை, மூத்தகலையெல்லாம் முடிச்சி இப்ப வேலையில்லாம மொடங்கிக் கெடக்கறவங்க தான். தாராளமா நீங்களே கேளுங்க"
டாக்டர் பலாக் கொட்டையைத் 'தூ' என்று துப்பினார்.
"ஏன்யா, இன்னாய்யா டைட்டில் வெக்கறான் அந்த பாத்ரூம் பாகவதர்? 'திருமதிப்பாச்சி'ன்னா என்னய்யா அருத்தம்?"
ஒடிசலாக ஓரமாக நின்றிருந்த தமிழ் மூதறிஞர் தொண்டைகொண்டான், தைரியம் வருவதற்காகக் கொஞ்சம் செருமிக் கொண்டார்:
"அய்யா, ஞானறிந்த தமிழ் மொழியில் இதுகாறும் அஃதோர் சொற்பிரயோகங் குறித்துச் செப்பேடுகளில் சுரண்டியாய்ந்து குறிப்பெடுக்குங்கால் மரபில் வழுக்குறித்து மாணாக்கர் தம் சுவடியில் எழுத்தாணி கொண்டிலக்கியம் பகர்ந்தாற்போலே அன்றில்..."
"இந்தாள யாருய்யா உள்ளார விட்டது?" என்றார் மருத்துவர். அவருக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இந்த டைட்டில் என்ன லாங்குவேஜ்னு கேட்டாக்க, இந்த ஆளு எந்த லாங்குவேஜுலயோ பேசி என் பிராணனை வாங்கறான்யா. என்னங்க திருமா, இந்தாளை எங்க புடிச்சீங்க?"
திருமா தன் டிரைவரை முறைத்தார். ஹோல்சேலாக நாலைந்து பேரை ஓட்டுநர் காண்டிராக்டாக ஓட்டி வந்தபோதே அவர் கொஞ்சம் சந்தேகித்திருந்தார். "இரு, இரு, உன்னை அப்புறமா வெச்சிக்கறன்" என்று அவரும் பல்லைக் கடித்தார். அவருடைய டிரைவர் அவசரமாகத் தும்மியபடியே டிக்கிக்குப் பின்புறம் பம்மினார்.
"யாராச்சியும் ஒருத்தர் சொல்லுங்கய்யா, போதும். அந்தட் டைட்டில் தமிழ் தானா?"
'தம் சொந்த இன்ப உற்சாகபான வாசனை பிறற்கெதற்கு?' என்று அடக்கமாகக் கொஞ்சம் வாய் பொத்தி 'மப்'பில் இருந்த தமிழினிப்பேரிடி தரணிக்கொண்டானால் இனியும் வாய் பொத்தி வாளாவிருக்க முடியவில்லை.
"பாத்ரூம்ங்கறது தமிழ் இல்லிங்க. பாகவதர்ங்கறதும் வடமொழிதாங்க. 'குளியலறைக் கதைசொல்லி'ன்னு வேணும்னா அதைத் தமிழாக்கம் பண்ணலாம். அவரு அய்ருங்கரதுனால எப்டி வேணும்னாலும் யாரு வேணும்னாலும் திட்டலாங்க. அவரு தொடச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அம்மா தலையிடாத வரைக்கும் பிரச்னை இல்லிங்க. பேருல பாத்ரூமுங்கறதுனால இந்தத் திரிசாப் பொண்ணு ..."
"அந்த ஆளை அப்டியே தூக்கிட்டுப் போயி தேவனாம்பட்டிணம் சுனாமிப் பள்ளத்துல தள்ளுய்யா' என்று திருமா கர்ஜித்தார்.
"இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவறதாத் தெரியலிங்க தலைவரே. பத்திரிககைக்காரனுங்க வேற எதுனா அறிக்கை கொடுங்கன்னு மொய்க்கறானுங்க. நானே ஒண்ணு எழுதிட்டு வந்துட்டேன். அதை நீங்க வழக்கமா படிக்கறா மாதிரி மெதுவாப் படிச்சி முடிச்சிடுங்க"
வேண்டாவெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த மருத்துவர், "அந்த ரிப்போர்ட்டருங்களை உள்ளார வரச் சொல்லுய்யா" என்றார். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். எரிச்சலுடன் படிக்க ஆரம்பித்தார்.
"தமிழ் சினிமாப் படத் தலைப்புகளைத் தனித் தமிழில் மட்டுமே வைத்திடுதல் வேண்டுமென்று நானும் தம்பி இளஞ்சிறுத்தை, வீரச் சிங்கம் திருமாவும் தனித்தோர் போராட்டம் நடத்தித் தரணியெங்கும் வெற்றி முரசு கொட்டி வருவதைத் தமிழகமே அறியும்." போறும்ங்க, திருமா மீதிய நீங்களே படிச்சிடுங்க. எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது.
மானசீகமான அடுத்த தேர்தல் சீட் அலாட்மெண்டில் கொடுக்கப்போகும் ஒரு சீட்டில் திருமா பாதி சீட்டை அக்கணமே இழந்திருந்தார்.
அது தெரியாத திருமா தொடர்ந்தார்: "திருமதியென்பது தமிழென்பதைச் சிங்களவர் அறிவர். சிங்கப்பூராரும் அறிவர். எமக்கோ, என் கூடத் தோள் கொடுக்க வந்திருக்கும் மருத்துவர் இராமநேசருக்கோ அதில் பிரச்னை இல்லை. ஆனால் அத்தலைப்பின் அடுத்த பாதியில் இருக்கிறது கயவர்களின் சூக்குமம். பச்சைத் தமிழனின் கொடி பாரெங்கும் பரவித் தழைத்து இலெமூரியாக் கண்டத்தை அவன் அடக்கி ஆண்டு வந்தான் ஒரு காலம். குள்ள நரியாம் வடதேச ஆரியர் அங்கே படையெடுத்து வந்து இலெமூரியாவையே அழித்தொழித்தபோது, அவர்கள் தமக்குள்ளே சைகையில் பேசிய மொழியாம் குன்சு. அந்தக் குன்சு மொழியைத் திரும்பவும் வழக்கில் கொண்டு வந்து தமிழினத்தையே வேறோடு அறுத்துப்போட இந்நாள் ஆரியர் செய்யும் தந்திரமே இது என்பதில் எமக்கோ, எங்கள் தானைத் தலைவர்கள் எவருக்குமோ ஐயம் சிறிதுமில்லை. இதை வன்மையாகக் கண்டித்துப் பல போராட்டங்களை எங்கள் கூட்டணித் தலைவர்கள் விரைவில் சென்னையில் வெளியிட இருக்கிறார்கள். வணக்கம், வாழ்க தமிழ், ஒழிக குன்சு."
திருமா அறிக்கையைப் படித்து முடிக்குமுன்னரே அறிவாலயத்திலிருந்தும் டெல்லியிலிருந்தும் பறந்து வந்திருந்த டெலிபோன் கோபக் கணைகளுக்கு மருத்துவர் பதறியபடியே பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
(எடுப்போம்)
Thursday, February 03, 2005
புச்சா எதுனாச்சியும் செய்யி ராசா!
மந்தவெளி எட்டாம் நம்பர் கடை (மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஒயின்ஸ்) வாசலை ஒட்டிய மண் மேட்டில் சிஷ்யகேடிகளான பீட்டர், மன்னார், முனுசாமி, தமிழ்ப்புலவர் ஆதிமந்தி சகிதம் மெய்லாப்பூர் கபாலி கொலு வீற்றிருந்தான். மன்னிக்கவும். வீற்றிருக்கவில்லை.
குந்தி உட்கார்ந்தபடியே கூர் மழுங்கிய புழுக்கைப் பென்சிலால் போஸ்ட் கார்டு ஒன்றில் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
அரைத் தூக்கத்தில் பொறைக் கனவு கண்டிருந்த சொறி நாய், மணி 'விலுக்'கென்று எழுந்து நின்றது. பாதி மடங்கிய இடது காதுடன் உத்தேசமான கிழக்கு நோக்கி சந்தேகாஸ்பதமாகக் குறைக்க ஆரம்பித்தது.
"முன்சாமி அண்ணாத்த, ஆரு வர்ரதுனு பாரு. தெர்தா, பாகவதரு" என்றான் பீட்டர்.
'சுள்'ளென்னு கிளம்பிக் கொண்டிருந்த சூரியனை அழுக்குப் பீச்சாங்கையால் மறைத்தபடி பீட்டர் காட்டிய திக்கில் பார்த்தான் முனுசாமி.
பாத்ரூம் பாகவதர் தான் வந்து கொண்டிருந்தார். பாரித்த சரீரத்தைச் சுமந்தபடி அறுபத்து மூவர் மாதிரிக் கொஞ்சம் ஆடி ஆடித் தான் ஒயின் ஷாப்பை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவர் ஆரோகணித்து வரும் ரிக்ஷ¡வைக் காணோம். இன்று நடராஜா சர்வீஸ் தான் போலிருக்கிறது.
"கச்சேரியெல்லாம் முடிஞ்சிச்சில்ல, காஜியெல்லாம் ஓஞ்சி போயி காலி பாட்டில்காரன் கிட்ட நேத்து சில்லுண்டி யாவாரம் பண்ணிக்கிட்டு, சில்லறைக்கு மாரடிச்சிட்டிருந்தாரு. எதுனா கை மாத்து கேக்க வாராருன்னு நெனிக்குறன்"
அருகில் நெருங்கி விட்ட பாகவதரிடம் திடீர் மரியாதை பீறிட, எழுந்த நின்றவர்களின் மடித்த கைலிகள் உதறி விடப்பட்டன.
"சலாம் சார். மோரு, ஜோடா எதுனா சாப்ட்றியா?"
"இல்லப்பா. இப்ப வேணாம். என்ன கபாலி, யார் கேட்டாலும் தான் அம்மா இப்பல்லாம் அள்ளிக் கொடுக்கறாளேன்னு நீயும் கோட்¨டக்கு ஒரு பெட்டிஷன் எழுதறியா?"
கபாலி பாத்ரூமை இப்போது தான் கவனித்தான். "வா சார் வா. நல்ல நேரத்துல தான் வந்துக்கிற. நம்ம எல்லே சாருக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டிருந்தன். படிக்குறன், கேக்குறியா?"
"எல்லேயா? அந்தாளு இப்பல்லாம் எழுதறாரா என்ன? ஏதோ படம் எடுக்கறேன்னு யார் பின்னாடியோ சுத்தறதாத்தானே நான் கேள்விப்பட்டேன்"
"சேச்சே. அப்பப்ப கொஞ்சம் பெனாயில் போட்டுக்குனு அது பெனாத்தினாலும், ஆளு தங்கம் சார். அதான் அன்பா நாலு தட்டு தட்டிக்குறன். தோ, படிக்குறம் பாரு"
கபாலி தொண்டையைச் செருமிக் கொண்டான்.
'யோவ் பிசாத்து எல்லே, எயுதினா ஆன லத்தி கணூக்கா மூட்ட மூட்டயா எய்திக்குனே கீற, அல்லாட்டிக் கவுந்தடிச்சிக் கொறட்டை வுட்டு மாசக் கணுக்குல தூங்கிக்கினே கீற, மவனே, உனுக்கு மன்சுல இன்னாதான் நெனிப்பு? இந்த அக்குருமத்தக் கேக்குறதுக்கு ஆருமே ஆளில்லேன்னு நென்சுக்கினியா? அம்மா கிட்ட இத்தப் போட்டுக் குடுத்தன்னா குண்டன்ஸ் ஆக்டுல வேலூர் கொசுக்கடி படுவ. அந்த சரசுவதியே வீணயக் கீழ எறக்கிட்டு வந்து நறுக்குன்னு ஒந் தலையில ஒண்ணு வெச்சாத்தான் எயுந்திருப்பியா?
'எய்ந்திரி ராசா', 'அட எந்திரி சார்', 'எல்லே இளங்கிளியே ப்ளீஸ் கெட்டப்பு'ன்னு மணியாட்டிப் பாத்துப் பாத்து ஜனமே அலுத்துப் பே¡ச்சு. சுறுசுறுப்பா எதுனாச்சியும் பயாஸ்கோப்பு காட்டத் தாவலை?
பாசமா எதுனாக் கேட்டாக்க 'ஜெயேந்திரர் மேட்டர், சுனாமி, சுனேகா கொயந்தைக்கு ஜலதோசம்'னு பீலா வுடுவ. அதெல்லாம் தப்பு ராசா. எய்துறவன் எய்திக்கிட்டே இர்க்கோணும், படிக்குறவன் படிச்சிக்கினே இர்க்கோணும்னு உனுக்குத் தெர்யாது?
இந்த 'ப்ளாக்சு'க்குனு ஒரு எலிக்கணம் இர்க்குது தெர்தா, தலிவா? சும்மா மொசமொசன்னு தெவச மந்திரமாட்டம் தெனிக்கும் எய்திக்குனே கெடக்கத் தாவலை. மூக்கரு மேறிக்கு அப்பப்ப ஒரு நாலு லைன் -சாட்டிங்க்ஸ்ல குட்டிங்களோட சதாய்க்குறியே அத்§தமேறித்தான்பா - எய்திப் போட்டாத்தான் உனுக்கும் மருவாதி, படிக்கறவனுக்கும் மருவாதி. ரசிகங்க பட்டாஸ¤ கொள்த்துவாங்கோ.
ரஜிகன், சொல்றத சொல்லிட்டன். அக்காங். மருவாதிய எதுனா எய்திப் போடு. அல்லாட்டி ரசிகங்க கொதிச்சி எய்ந்திருவம். பேஜார¡ய்டும்.
இப்டிக்கி,
கலக்கல் கபாலி,
தலிவர், எட்டாம் நிம்பர் கடை வசக வாட்டம்"
******** ********* *********
"இன்னா சார், நானு எய்திக்குறது சரியா?"
"பிரமாதம்டா கபாலி. நான் மனசுல நெனச்சேன். மரத்தடியிலேருந்து எழுதிப்டாய்"
"மரத்தடியிலேருந்து இல்ல சார். மண் மோட்ல இருந்து. மரத்தடி தான் மதியக்கா போனதுலேர்ந்து களையே இல்லாமக் கெடக்குதே. ஹ¤ம்ம்ம்."
"இன்னாது இது, புதுக் கரடி வுடற, அந்தம்மா அங்கன இல்லியா இப்ப? ரிஜைனா?" என்றான் பீட்டர், பதறிப் போய்.
புலவர் ஆதிமந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ஓய்வில்லை ..."
"பொலவரே, காலிலயே ஆரம்பிச்சிட்டியா, ஆ·ப் பண்ணுய்யா. மணி பயப்படுதில்ல?"
"நல்லவாளுக்கெல்லாம் காலம் இல்லைப்பா இப்ப. ஒண்ட வந்த பிடாரன்ஸ் ஊர்ப் பிடாரியத் தொறத்தறதெல்லாம் சகஜமான்னா போச்சு. ராகாகியில நடக்காத கூத்தா? 'சந்திரன்' இல்லைன்னா மானத்துக்குத்தான் அவமானம். மதியில்லைன்னா மரத்தடிக்குத்தான்
நஷ்டம். டென்ஷன் இல்லாம கொழந்தை இப்ப நிம்மதியா இருக்கும். அதை விடு. நான் வேற ஒரு காரியமா ஒங்கிட்ட வந்தேன்"
"இன்னா பண்ணணும் ஸொல்லு சார். அப்டியே குந்து. டேய் நாயர் கிட்ட ரெண்டு பெசல் டீ ஸொல்றா. பாகவதர் சாருக்கு சக்கரை §பாடாத. இன்னா சார் பண்ணலாம், அய்டியாவ அவுத்து வுடு"
********* ******** *********
பஞ்சகச்சத்தை நாசூக்காகத் தூக்கியபடி பாத்ரூம் பாகவதர் மண் மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்தார்.
ஒரு கணம் தன் நண்பர் குழாத்தைக் கண்ணால் அளந்தார். அன்பும் வாத்ஸல்யமும் மேலிட, தழதழத்த குரலில், "அம்பிகளா, நமக்¦கல்லாம் நல்ல நேரம் பொறந்துடுத்துடா. நாம படம் எடுக்கப் போறம்" என்றார்.
"இன்னா சார் ஸொன்ன, நாமள்லாம் சேர்ந்து படம் எடுக்கப் போறமா?" -ஒரே கோரஸாக அத்தனை பேரும் கேட்டார்கள். நாயர் மட்டும் "ஞானும் உண்டில்லா?" என்றார். மணி " லொள், லொள், லோள்" என்றது.
"ஆமாம்பா. விஜய் கால்ஷீட் கெடச்சுடுத்து. படத்துக்கு டைட்டில் கூட ரெடி பண்ணிட்டேன்."
"விஜய் கால்ஷீட்டா? ஆஹா, நாம அத்தினி பேரும் இனிமே கோடீஸ்வரனுங்க தான். படத்துக்கு இன்னா சார் டைட்டில்?"
"கலக்கலான படம். இதுவரை இது மாதிரி ரோல்லே விஜய் பண்ணினதே இல்லை. காதல், வீரம், காமெடி, பாசம் எல்லாமே கலந்த புத்தம் புதுக் கதை"
"அய்யோ, அய்யோ. எனுக்கு இப்பயே தாங்கலை சார். படத்துக்கு இன்னா டைட்டில், சீக்ரம் ஸொல்லு சார்"
"அக்கா ரேப்பு, தங்கச்சி நொண்டி, தாடித் தம்பியத் திருத்தறது, தாலி செண்டிமெண்ட், தோப்பனார் பாசம், தொப்புள் டான்ஸ் எல்லாமே உண்டு. இந்த ஊர்க் குட்டிகளே வேண்டாம்னு ஹாலிவுட்லேருந்து ஒரே ஒரு டான்சுக்கு ஜெனி·பர் லோபஸ் கொழந்தை வராள்"
நாயர் கடையில் தேநீர் அருந்தியிருந்த அன்பர்கள் முதல் லேடி மெய்யப்ப செட்டியார் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசலில் சாக்கடை நோண்டியிருந்த துன்பர்கள் வரை மைலாப்பூர், மந்தைவெளிப் பிராந்தியமே மூச்சு விட மறந்து, ஓடோடி வந்து, பாகவதர் வாயையே பார்த்து நின்றது.
சுனாமி பற்றியே எழுதிக் களைத்திருந்த நிருபர்கள் சுருட்டியடித்தோடி வந்து பாகவதர் முன் நின்றனர்.
"சார், உங்க படத்துக்கு டைட்டில் ப்ளீஸ்"
தான் எதிர்பார்த்த எ·பெக்ட் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பாத்ரூம் பாகவதர் ஒரு புன்னகை சிந்தினார். பொடி மட்டையை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.
யார் யாரோ அவரை போட்டோ எடுத்தார்கள்.
"திருமதிப்பாச்சி" என்றார் பாத்ரூம் பாகவதர்.
(எடுப்போம்)
குந்தி உட்கார்ந்தபடியே கூர் மழுங்கிய புழுக்கைப் பென்சிலால் போஸ்ட் கார்டு ஒன்றில் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
அரைத் தூக்கத்தில் பொறைக் கனவு கண்டிருந்த சொறி நாய், மணி 'விலுக்'கென்று எழுந்து நின்றது. பாதி மடங்கிய இடது காதுடன் உத்தேசமான கிழக்கு நோக்கி சந்தேகாஸ்பதமாகக் குறைக்க ஆரம்பித்தது.
"முன்சாமி அண்ணாத்த, ஆரு வர்ரதுனு பாரு. தெர்தா, பாகவதரு" என்றான் பீட்டர்.
'சுள்'ளென்னு கிளம்பிக் கொண்டிருந்த சூரியனை அழுக்குப் பீச்சாங்கையால் மறைத்தபடி பீட்டர் காட்டிய திக்கில் பார்த்தான் முனுசாமி.
பாத்ரூம் பாகவதர் தான் வந்து கொண்டிருந்தார். பாரித்த சரீரத்தைச் சுமந்தபடி அறுபத்து மூவர் மாதிரிக் கொஞ்சம் ஆடி ஆடித் தான் ஒயின் ஷாப்பை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவர் ஆரோகணித்து வரும் ரிக்ஷ¡வைக் காணோம். இன்று நடராஜா சர்வீஸ் தான் போலிருக்கிறது.
"கச்சேரியெல்லாம் முடிஞ்சிச்சில்ல, காஜியெல்லாம் ஓஞ்சி போயி காலி பாட்டில்காரன் கிட்ட நேத்து சில்லுண்டி யாவாரம் பண்ணிக்கிட்டு, சில்லறைக்கு மாரடிச்சிட்டிருந்தாரு. எதுனா கை மாத்து கேக்க வாராருன்னு நெனிக்குறன்"
அருகில் நெருங்கி விட்ட பாகவதரிடம் திடீர் மரியாதை பீறிட, எழுந்த நின்றவர்களின் மடித்த கைலிகள் உதறி விடப்பட்டன.
"சலாம் சார். மோரு, ஜோடா எதுனா சாப்ட்றியா?"
"இல்லப்பா. இப்ப வேணாம். என்ன கபாலி, யார் கேட்டாலும் தான் அம்மா இப்பல்லாம் அள்ளிக் கொடுக்கறாளேன்னு நீயும் கோட்¨டக்கு ஒரு பெட்டிஷன் எழுதறியா?"
கபாலி பாத்ரூமை இப்போது தான் கவனித்தான். "வா சார் வா. நல்ல நேரத்துல தான் வந்துக்கிற. நம்ம எல்லே சாருக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டிருந்தன். படிக்குறன், கேக்குறியா?"
"எல்லேயா? அந்தாளு இப்பல்லாம் எழுதறாரா என்ன? ஏதோ படம் எடுக்கறேன்னு யார் பின்னாடியோ சுத்தறதாத்தானே நான் கேள்விப்பட்டேன்"
"சேச்சே. அப்பப்ப கொஞ்சம் பெனாயில் போட்டுக்குனு அது பெனாத்தினாலும், ஆளு தங்கம் சார். அதான் அன்பா நாலு தட்டு தட்டிக்குறன். தோ, படிக்குறம் பாரு"
கபாலி தொண்டையைச் செருமிக் கொண்டான்.
'யோவ் பிசாத்து எல்லே, எயுதினா ஆன லத்தி கணூக்கா மூட்ட மூட்டயா எய்திக்குனே கீற, அல்லாட்டிக் கவுந்தடிச்சிக் கொறட்டை வுட்டு மாசக் கணுக்குல தூங்கிக்கினே கீற, மவனே, உனுக்கு மன்சுல இன்னாதான் நெனிப்பு? இந்த அக்குருமத்தக் கேக்குறதுக்கு ஆருமே ஆளில்லேன்னு நென்சுக்கினியா? அம்மா கிட்ட இத்தப் போட்டுக் குடுத்தன்னா குண்டன்ஸ் ஆக்டுல வேலூர் கொசுக்கடி படுவ. அந்த சரசுவதியே வீணயக் கீழ எறக்கிட்டு வந்து நறுக்குன்னு ஒந் தலையில ஒண்ணு வெச்சாத்தான் எயுந்திருப்பியா?
'எய்ந்திரி ராசா', 'அட எந்திரி சார்', 'எல்லே இளங்கிளியே ப்ளீஸ் கெட்டப்பு'ன்னு மணியாட்டிப் பாத்துப் பாத்து ஜனமே அலுத்துப் பே¡ச்சு. சுறுசுறுப்பா எதுனாச்சியும் பயாஸ்கோப்பு காட்டத் தாவலை?
பாசமா எதுனாக் கேட்டாக்க 'ஜெயேந்திரர் மேட்டர், சுனாமி, சுனேகா கொயந்தைக்கு ஜலதோசம்'னு பீலா வுடுவ. அதெல்லாம் தப்பு ராசா. எய்துறவன் எய்திக்கிட்டே இர்க்கோணும், படிக்குறவன் படிச்சிக்கினே இர்க்கோணும்னு உனுக்குத் தெர்யாது?
இந்த 'ப்ளாக்சு'க்குனு ஒரு எலிக்கணம் இர்க்குது தெர்தா, தலிவா? சும்மா மொசமொசன்னு தெவச மந்திரமாட்டம் தெனிக்கும் எய்திக்குனே கெடக்கத் தாவலை. மூக்கரு மேறிக்கு அப்பப்ப ஒரு நாலு லைன் -சாட்டிங்க்ஸ்ல குட்டிங்களோட சதாய்க்குறியே அத்§தமேறித்தான்பா - எய்திப் போட்டாத்தான் உனுக்கும் மருவாதி, படிக்கறவனுக்கும் மருவாதி. ரசிகங்க பட்டாஸ¤ கொள்த்துவாங்கோ.
ரஜிகன், சொல்றத சொல்லிட்டன். அக்காங். மருவாதிய எதுனா எய்திப் போடு. அல்லாட்டி ரசிகங்க கொதிச்சி எய்ந்திருவம். பேஜார¡ய்டும்.
இப்டிக்கி,
கலக்கல் கபாலி,
தலிவர், எட்டாம் நிம்பர் கடை வசக வாட்டம்"
******** ********* *********
"இன்னா சார், நானு எய்திக்குறது சரியா?"
"பிரமாதம்டா கபாலி. நான் மனசுல நெனச்சேன். மரத்தடியிலேருந்து எழுதிப்டாய்"
"மரத்தடியிலேருந்து இல்ல சார். மண் மோட்ல இருந்து. மரத்தடி தான் மதியக்கா போனதுலேர்ந்து களையே இல்லாமக் கெடக்குதே. ஹ¤ம்ம்ம்."
"இன்னாது இது, புதுக் கரடி வுடற, அந்தம்மா அங்கன இல்லியா இப்ப? ரிஜைனா?" என்றான் பீட்டர், பதறிப் போய்.
புலவர் ஆதிமந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ஓய்வில்லை ..."
"பொலவரே, காலிலயே ஆரம்பிச்சிட்டியா, ஆ·ப் பண்ணுய்யா. மணி பயப்படுதில்ல?"
"நல்லவாளுக்கெல்லாம் காலம் இல்லைப்பா இப்ப. ஒண்ட வந்த பிடாரன்ஸ் ஊர்ப் பிடாரியத் தொறத்தறதெல்லாம் சகஜமான்னா போச்சு. ராகாகியில நடக்காத கூத்தா? 'சந்திரன்' இல்லைன்னா மானத்துக்குத்தான் அவமானம். மதியில்லைன்னா மரத்தடிக்குத்தான்
நஷ்டம். டென்ஷன் இல்லாம கொழந்தை இப்ப நிம்மதியா இருக்கும். அதை விடு. நான் வேற ஒரு காரியமா ஒங்கிட்ட வந்தேன்"
"இன்னா பண்ணணும் ஸொல்லு சார். அப்டியே குந்து. டேய் நாயர் கிட்ட ரெண்டு பெசல் டீ ஸொல்றா. பாகவதர் சாருக்கு சக்கரை §பாடாத. இன்னா சார் பண்ணலாம், அய்டியாவ அவுத்து வுடு"
********* ******** *********
பஞ்சகச்சத்தை நாசூக்காகத் தூக்கியபடி பாத்ரூம் பாகவதர் மண் மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்தார்.
ஒரு கணம் தன் நண்பர் குழாத்தைக் கண்ணால் அளந்தார். அன்பும் வாத்ஸல்யமும் மேலிட, தழதழத்த குரலில், "அம்பிகளா, நமக்¦கல்லாம் நல்ல நேரம் பொறந்துடுத்துடா. நாம படம் எடுக்கப் போறம்" என்றார்.
"இன்னா சார் ஸொன்ன, நாமள்லாம் சேர்ந்து படம் எடுக்கப் போறமா?" -ஒரே கோரஸாக அத்தனை பேரும் கேட்டார்கள். நாயர் மட்டும் "ஞானும் உண்டில்லா?" என்றார். மணி " லொள், லொள், லோள்" என்றது.
"ஆமாம்பா. விஜய் கால்ஷீட் கெடச்சுடுத்து. படத்துக்கு டைட்டில் கூட ரெடி பண்ணிட்டேன்."
"விஜய் கால்ஷீட்டா? ஆஹா, நாம அத்தினி பேரும் இனிமே கோடீஸ்வரனுங்க தான். படத்துக்கு இன்னா சார் டைட்டில்?"
"கலக்கலான படம். இதுவரை இது மாதிரி ரோல்லே விஜய் பண்ணினதே இல்லை. காதல், வீரம், காமெடி, பாசம் எல்லாமே கலந்த புத்தம் புதுக் கதை"
"அய்யோ, அய்யோ. எனுக்கு இப்பயே தாங்கலை சார். படத்துக்கு இன்னா டைட்டில், சீக்ரம் ஸொல்லு சார்"
"அக்கா ரேப்பு, தங்கச்சி நொண்டி, தாடித் தம்பியத் திருத்தறது, தாலி செண்டிமெண்ட், தோப்பனார் பாசம், தொப்புள் டான்ஸ் எல்லாமே உண்டு. இந்த ஊர்க் குட்டிகளே வேண்டாம்னு ஹாலிவுட்லேருந்து ஒரே ஒரு டான்சுக்கு ஜெனி·பர் லோபஸ் கொழந்தை வராள்"
நாயர் கடையில் தேநீர் அருந்தியிருந்த அன்பர்கள் முதல் லேடி மெய்யப்ப செட்டியார் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசலில் சாக்கடை நோண்டியிருந்த துன்பர்கள் வரை மைலாப்பூர், மந்தைவெளிப் பிராந்தியமே மூச்சு விட மறந்து, ஓடோடி வந்து, பாகவதர் வாயையே பார்த்து நின்றது.
சுனாமி பற்றியே எழுதிக் களைத்திருந்த நிருபர்கள் சுருட்டியடித்தோடி வந்து பாகவதர் முன் நின்றனர்.
"சார், உங்க படத்துக்கு டைட்டில் ப்ளீஸ்"
தான் எதிர்பார்த்த எ·பெக்ட் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பாத்ரூம் பாகவதர் ஒரு புன்னகை சிந்தினார். பொடி மட்டையை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.
யார் யாரோ அவரை போட்டோ எடுத்தார்கள்.
"திருமதிப்பாச்சி" என்றார் பாத்ரூம் பாகவதர்.
(எடுப்போம்)
Tuesday, December 14, 2004
ஜாக் அய்யர் -2
ஒரு நாள் கேயெஸ் தனியே தன்னந்தனியே ‘அட்வான்ஸ் லெவல்’ சோழி பார்த்துக் கொண்டிருந்தார். அய்யருக்கு அப்போது தான் அந்த ஐடியா ‘பளிச்’சென்று வந்தது.
"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".
மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.
"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."
"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.
சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.
மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"
"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."
அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"
"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"
கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.
******* ******** *********
ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.
படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.
புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.
கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.
சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.
வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.
"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.
********* ********* *********
கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.
இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.
"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.
மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.
அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
---------- ---------- ----------
அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.
அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.
அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.
"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"
"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.
"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'
"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".
சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.
********* ********* **********
அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.
அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.
அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.
சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.
'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.
வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.
அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.
எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.
நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.
‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.
"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"
"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.
கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.
வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.
ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.
-(முற்றும்)
"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".
மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.
"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."
"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.
சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.
மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"
"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."
அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"
"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"
கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.
******* ******** *********
ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.
படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.
புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.
கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.
சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.
வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.
"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.
********* ********* *********
கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.
இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.
"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.
மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.
அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
---------- ---------- ----------
அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.
அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.
அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.
"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"
"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.
"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'
"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".
சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.
********* ********* **********
அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.
அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.
அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.
சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.
'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.
வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.
அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.
எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.
நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.
‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.
"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"
"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.
கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.
வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.
ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.
-(முற்றும்)
Monday, December 13, 2004
ஜாக் அய்யர் -1
கோனேரிராஜமங்கலம் கல்யாணசுந்தரம் அய்யர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? கோனேரிராஜமங்கலம் என்பது திருநெல்வேலிக்கு மிக சமீபம். மனுஷன் ரொம்பவும் சாது. நல்ல தமிழ்ப் பண்டிதர். வடநூல், வானநூல், ஜோதிடம், கர்நாடக சங்கீதம் என்று ய கலைகள் அறுபத்தி நான்கில் அல்மோஸ்ட் ஐம்பதில் படு ஞானஸ்தர்.
பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.
கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.
அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.
ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.
அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.
கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.
சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.
சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.
ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.
காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.
"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.
'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.
"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.
“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.
கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.
ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.
பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.
ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.
பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.
ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.
ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.
கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.
ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.
எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?
விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?
இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.
கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.
அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.
ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.
சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.
அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.
வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.
ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.
"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.
வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.
"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.
'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"
அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.
மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.
ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.
- (இன்னும் வருவார்)
பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.
கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.
அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.
ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.
அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.
கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.
சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.
சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.
ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.
காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.
"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.
'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.
"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.
“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.
கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.
ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.
பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.
ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.
பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.
ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.
ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.
கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.
ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.
எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?
விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?
இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.
கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.
அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.
ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.
சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.
அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.
வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.
ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.
"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.
வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.
"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.
'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"
அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.
மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.
ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.
- (இன்னும் வருவார்)
எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?!
"அப்படி என்னய்யா கும்பகர்ணனாட்டம் ஒரு பேய்த் தூக்கம்? எழுதி எவ்வளவு நாளாச்சு? மார்கழி மாசம் போறக்கப் போவுது, எழுந்திரிச்சுப் பல் வெளக்கிட்டு வாய்யா. சூடா ஒரு பொங்கல், வடை அடிக்கலாம். அப்புறமாச்சியும் உனக்கு சுறுசுறுப்பு கிறுகிறுப்பு வருதான்னு பாக்கலாம்" என்று ஒரு வாசக அன்பர்- பெயர் 'டோண்டு"வாம், செல்லமாக மிரட்டி இருக்கிறார்.
அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!
(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)
இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.
ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...
எமக்குத் தொழில் எழுத்து.
அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.
என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!
(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)
இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.
ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...
எமக்குத் தொழில் எழுத்து.
அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.
என்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Wednesday, November 03, 2004
அமெரிக்க அரசியல் (நவம்பர் 3 '04)
அமெரிக்க அரசியல் (நவம்பர் 3, 2004)
-------------------------------------
உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கொண்டிருக்கின்ற நேரம் இது.
தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன.
ஜான் கெர்ரி ஜெயித்து விட்டால், வெள்ளை மாளிகையின் வாசல் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு எனக்குக் குறைந்த பட்சம் ஒரு டவாலி வேலையாவது போட்டுத் தருவதாக அவர் எனக்கு வாக்களிக்கவில்லை.
ஜார்ஜ் புஷ் மீண்டும் அதிபரானால் என் சென்ற வருஷ இன்கம்டாக்ஸ் கணக்கை மறுதணிக்கை செய்து மிரட்டி ஈராக்குக்கே என்னை விரட்டி விடுவதாகப் பயமுறுத்தவும் இல்லை.
பலப்பல காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம் என்பதை நான் உணராமலும் இல்லை. காமராஜர் இன்று இங்கே இருந்திருந்தால், "இவுங்க ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதாண்ணேன்" என்றிருப்பார்.
இருந்தாலும், கெர்ரி வெற்றி பெற்றிருந்தால், 'உலக அரங்கில் சமீபத்தில் தான் இழந்து நிற்கும் சுய கௌரவத்தை மீண்டும் பெற அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுக்கும், உள்நாட்டுப் பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும், குறைந்த பட்ச ஊதியத் தொஅக் அதிகரிக்கும், ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்கான புது முயற்சிகள் தொடங்கும்' என்று நான் தீவிரமாகவே நம்பினேன். பல பேட்டிகளில் கெர்ரி இதையெல்லாம் சொல்லவும் செய்தார்.
அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது.
இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அதிபர் புஷ் ஒரு நூலிழை வித்தியாசத்தில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.
கருப்பும் வெள்ளையுமாக, இரவும் பகலும் போல், மொத்த அமெரிக்க மக்களின் மனப்போக்கும் மிகவும் வித்தியாசப்பட்டு, இந்த தேசமே பிளந்து நிற்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியூயார்க் போன்ற கிழக்குக் கடற்கரை மாகாணங்களும், கலி·போர்னியா போன்ற மேற்குக் கடற்கரை மாகாணங்களும் மனத்தளவில் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெ
டுக்க வெகுவாக முயற்சித்திருந்தாலும், அமெரிக்காவின் வயிற்றுப் பகுதி, வேறு விதமாக, அதிபர் புஷ்ஷ¤க்கே மறுபடியும் வோட்டளித்திருக்கிறது.
புஷ்ஷின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் அடிபட்டு, நொந்து நூலாகிப் பல தொழிற்சாலைகளை மூடியிருக்கும் ஓஹையோ போன்ற பிராந்தியங்கள் அவருக்கே மறுமுறையும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருப்பது விநோதமாகத் தெரிந்தாலும், எந்த அளவுக்கு அமெரிக்கா பிளவுபட்டுக் கிடக்கிறது, எந்த அளவுக்குப் பயந்து போய்ப் பிற்போக்குக் கொள்கைகளால் தேங்கிக் கிடக்கிறது என்பதற்கு இம்முடிவுகள் ஒரு சரியான உதாரணம்.
The rednecks are back with a vengeance!
அதீதமான பெரும்பான்மையிலோ, பெரும் ஆதரவு அலையிலோ அதிபர் புஷ் வெற்றி பெற்றுவிடவில்லை. ஈராக் போரின் தற்சமயச் சகதி நிலை பற்றி அமெரிக்கர்களின் பொதுவான கவலையும் பயமும் கூடித்தான் இருக்கிறது. இருந்தபோதும், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்று எம்ஜிஆர் மாதிரிப் பாடி உண்மை முழங்கித் தட்டிக் கேட்பதற்குத்தான் அமெரிக்காவில் ஆள் இல்லை. 'ஈராக் மீதான போருக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா, ஆயில் கம்பெனிகளின் பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இந்தனை அமெரிக்க இளைஞர்களைப் பலியிட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடவேண்டுமா?' என்றெல்லாம் தார்மீகக் கேள்விகள் கேட்பவர்களை விட, 'தப்போ, சரியோ, இந்த யுத்த நேரத்தில் நம் தக்கணாமுட்டித் தலைவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது கூடத் தவறு' என்று அபத்தமான தேசாபிமானம் காட்டுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் போலும்.
ஹிட்லரைக் கேள்வி கேட்கப் பயந்தவர்கள் கூடத்தான் தேச பக்தியைக் காரணம் காட்டி வாய் பொத்திப் பயந்து நின்றார்கள்.
சரி, அமெரிக்காவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?
சமீபத்திய 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அமெரிக்க தேசத்தின் வரைபடத்தைப் போட்டு அதன் நடுவே, 'யு. எஸ். இமிக்ரேஷன்' என்று எழுதிப் பெரிய பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். அதாவது, பல ஆண்டுகளாக 'வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நல்லரசாக' இருந்த அமெரிக்காவின் மனப்போக்கு தற்போது அடியோடு மாறி
விட்டிருப்பதைக் கேலியாக ஒரு அமெரிக்கக் கார்ட்டூனிஸ்ட் கிண்டல் பண்ணியிருந்தார். செப். 11, 2001 நிகழ்வுகள் மகா பயங்கரம் தான், கண்டிக்கப்படவேண்டியவை தான். ஆனால் அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டு விட்டிருக்கும் பிற்போக்கு விளைவுகளையே அந்தக் கருத்துப்படம் சுட்டிக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.
சற்றேறக் குறைய ஒரு நூற்றாண்டாகவே உலகின் பலப்பல பாகங்களிலிருந்தும் பல்வேறு நிற, இன, மத, மொழி, கலாச்சார மக்கள் வந்து குடியேறி, எந்த விதமான பேதமுமில்லாமல், பல்வேறு துறைகளிலும் தனித்துவம் காட்டிச் சிறந்து, இந்த தேசத்தை ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றியிருப்பதே அமெரிக்காவின் அடிப்படை பலம். அதற்கே பூட்டுப் போட்டால் அமெரிக்காவின் அடிப்படை நலனுக்கே வேட்டாகி விடாதோ?
முழுமையான கருத்துச் சுதந்திரமும், மத சுதந்திரமும், தனியரு மனிதன் எவனுமே தன் உழைப்பையும் படிப்பையும் மட்டுமே நம்பி முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகள் பலவும் நிறைந்த வளமான பூமி தான் அமெரிக்கா. இதையெல்லாம் பின்னோக்கித் தள்ள, அடிப்படை உரிமைகளையும், பெருமைகளையும் மாற்ற முயற்சிப்பதா?
காட்டான்களின் காட்டு தர்பாராக அமெரிக்கா மாறி விடுமோ?
எம் போன்ற சாமான்னியர்களுக்கு இதெல்லாம் கலவரம் நிரம்பிய கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.
அதிபர் புஷ் ஒரு யுத்தவெறியர், ஆயுத வியாபாரிகளின் கைப்பாவை என்பது தெரிந்ததே. 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்வது' அந்த காலத்துப் பழமொழி. 'அணுகுண்டு அதிரடிப் பொய்களைச் சொல்லியாவது அடுத்தவன் ஆயிலை லபக்குவது' புஷ்ஷின் புதுமொழி. சர்வதேச அரங்கில் தனக்குத் தொடர்ந்து ஜால்ரா போடும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதி
ல்லை என்பது தெரிந்த விஷயம் தான். 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன, முக்காலே அரைக்கால் கால் தான்' என்று அவர் தொடர்ந்து முரண்டு பிடிப்பது தொடரும். அதிபர் சதாம் ஹ¤சேன் தன் பாத்ரூமில் பல கோடி அணுகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது பற்றித் தனக்கு முன்பே தெரிந்திருந்ததால் தான் ஈராக் மீது தான் படையெடுத்ததாக அவர் விடப்போகும் தொடர் சரடுகளும் தொடரும். என்ன செய்வது? நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் தானே பைத்தியக்காரன்? புஷ்ஷுக்குத்தான் பட்டுக் குஞ்சலமும் கட்டிப் பதவியிலும் வைத்து அழகு பார்க்கிறார்களே? 'அடடே, நாம் செய்வதில் ஏதாவது கொஞ்சம் தப்பு இருக்கிறதோ?' என்கிற சின்ன மனத் தடுமாற்றம் கூட அவருக்கு இனி இருக்காது. சுத்தம்.
வாழ்க பணநாயகம்!
சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நாடுகள் பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் சுற்றுப்புறச்சூழல், சுகாதார, மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அவர் வெறும் கெமிக்கல் வியாபார முதலைகளின் சுயலாபத்துக்காக ஏற்கனவே காற்றிலே பறக்கவிட்டவர் ஆயிற்றே. இனிமேல் அது பற்றி எல்லாம் யாரும் கேள்விகள் கேட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
எதையாவது ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி ஈரான் மீதும் நாம் பாயலாமா என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே கலந்தாலோசித்துத்தான் வருகின்றன. 'கருப்புத் தங்க'த்தைக் கவர்வதும், பல விதமான ராணுவக் காரணங்களுக்காகப் பூகோள ரீதியில் தங்களை அதிமுக்கியமான அந்த ஏரியாவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் தொடரும். 'அயத்தொல்லா அணுகுண்டுகள் பல பண்ணித் தலைப்பாகைக்குள் ரகசியமாகச் செருகி வைத்திருக்கிறார்' என்ற ரீதியில் புஷ் புது ரீல்கள் விடலாம்.
அமெரிக்கா மட்டும் தொடர்ந்து அணு ஆயுதப் பேரழிவு ஆயுதங்களைச் செய்யலாமா என்று கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு போட்டுப் பேரழிவு செய்தவர்கள் மற்ற நாடுகளின் அணு ஆயுத விஸ்தரிப்பு பற்றிக் கவலைப்படும்போது எங்கேயோ இடிக்கிறதே!
உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அதிபர் புஷ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவருக்கு மாதா மாதம் சம்பளம் உறுதியான பிறகு நாட்டில் யாரைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?
அவசர மருத்துவ உதவிகள் கூடச் சரியாகக் கிடைக்காமல் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வரும் அவல நிலை அமெரிக்காவில் நீடிக்கும். அரசு உதவிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டு நாடெங்கும் பல கல்விச்சாலைகள், நூல நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதுவும் தொடரும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களில் சென்ற வருடம் விற்ற விலையை விட பெட்ரோல் இரண்டு மடங்கைத் தாண்டி விட்டது. அது இன்னமும் உயரும். கடந்த மூன்றே மூன்று மாதங்களில் எக்ஸான் போன்ற பெரிய ஆயில் கம்பெனிகள் பில்லியன் கணக்கில் அசுர லாபம் ஈட்டியிருக்கின்றன. அது இன்னமும் அதிகரிக்கலாம்.
எம்போன்ற புலம் பெயர் என்ஆர்ஐத் தமிழர்கள் இனி இங்கே என்ன செய்யலாம்?
'நடப்பது நடக்கட்டும், நமக்கெதற்கு வம்பு?' என்று வாய் மூடி, மௌனமாக, ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு, அவ்வப்போது கொஞ்சம் சன் டீவி அல்லது பேஸ்பால் என்று இருக்கலாமா?
'நடப்பதெல்லாம் நாரணன் செயல். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று வேதாந்தம் பேசலாமா?
அல்லது, "புஷ்ஷாய நமஹ, செய்னிக்கு ஜெய்" என்று புது ராகத்தில் ஜால்ரா போட ஆரம்பிக்கலாமா?
புத்தனாம்பட்டி பக்கமாக ஏதாவது கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு ஊருக்கே போய் விடலாமா?
தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.
ஊஹ¤ம். அவள் வரமாட்டாள். அங்கே தான் இடிக்கிறது!
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
-------------------------------------
உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கொண்டிருக்கின்ற நேரம் இது.
தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன.
ஜான் கெர்ரி ஜெயித்து விட்டால், வெள்ளை மாளிகையின் வாசல் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு எனக்குக் குறைந்த பட்சம் ஒரு டவாலி வேலையாவது போட்டுத் தருவதாக அவர் எனக்கு வாக்களிக்கவில்லை.
ஜார்ஜ் புஷ் மீண்டும் அதிபரானால் என் சென்ற வருஷ இன்கம்டாக்ஸ் கணக்கை மறுதணிக்கை செய்து மிரட்டி ஈராக்குக்கே என்னை விரட்டி விடுவதாகப் பயமுறுத்தவும் இல்லை.
பலப்பல காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம் என்பதை நான் உணராமலும் இல்லை. காமராஜர் இன்று இங்கே இருந்திருந்தால், "இவுங்க ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதாண்ணேன்" என்றிருப்பார்.
இருந்தாலும், கெர்ரி வெற்றி பெற்றிருந்தால், 'உலக அரங்கில் சமீபத்தில் தான் இழந்து நிற்கும் சுய கௌரவத்தை மீண்டும் பெற அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுக்கும், உள்நாட்டுப் பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும், குறைந்த பட்ச ஊதியத் தொஅக் அதிகரிக்கும், ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்கான புது முயற்சிகள் தொடங்கும்' என்று நான் தீவிரமாகவே நம்பினேன். பல பேட்டிகளில் கெர்ரி இதையெல்லாம் சொல்லவும் செய்தார்.
அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது.
இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அதிபர் புஷ் ஒரு நூலிழை வித்தியாசத்தில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.
கருப்பும் வெள்ளையுமாக, இரவும் பகலும் போல், மொத்த அமெரிக்க மக்களின் மனப்போக்கும் மிகவும் வித்தியாசப்பட்டு, இந்த தேசமே பிளந்து நிற்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியூயார்க் போன்ற கிழக்குக் கடற்கரை மாகாணங்களும், கலி·போர்னியா போன்ற மேற்குக் கடற்கரை மாகாணங்களும் மனத்தளவில் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெ
டுக்க வெகுவாக முயற்சித்திருந்தாலும், அமெரிக்காவின் வயிற்றுப் பகுதி, வேறு விதமாக, அதிபர் புஷ்ஷ¤க்கே மறுபடியும் வோட்டளித்திருக்கிறது.
புஷ்ஷின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் அடிபட்டு, நொந்து நூலாகிப் பல தொழிற்சாலைகளை மூடியிருக்கும் ஓஹையோ போன்ற பிராந்தியங்கள் அவருக்கே மறுமுறையும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருப்பது விநோதமாகத் தெரிந்தாலும், எந்த அளவுக்கு அமெரிக்கா பிளவுபட்டுக் கிடக்கிறது, எந்த அளவுக்குப் பயந்து போய்ப் பிற்போக்குக் கொள்கைகளால் தேங்கிக் கிடக்கிறது என்பதற்கு இம்முடிவுகள் ஒரு சரியான உதாரணம்.
The rednecks are back with a vengeance!
அதீதமான பெரும்பான்மையிலோ, பெரும் ஆதரவு அலையிலோ அதிபர் புஷ் வெற்றி பெற்றுவிடவில்லை. ஈராக் போரின் தற்சமயச் சகதி நிலை பற்றி அமெரிக்கர்களின் பொதுவான கவலையும் பயமும் கூடித்தான் இருக்கிறது. இருந்தபோதும், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்று எம்ஜிஆர் மாதிரிப் பாடி உண்மை முழங்கித் தட்டிக் கேட்பதற்குத்தான் அமெரிக்காவில் ஆள் இல்லை. 'ஈராக் மீதான போருக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா, ஆயில் கம்பெனிகளின் பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இந்தனை அமெரிக்க இளைஞர்களைப் பலியிட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடவேண்டுமா?' என்றெல்லாம் தார்மீகக் கேள்விகள் கேட்பவர்களை விட, 'தப்போ, சரியோ, இந்த யுத்த நேரத்தில் நம் தக்கணாமுட்டித் தலைவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது கூடத் தவறு' என்று அபத்தமான தேசாபிமானம் காட்டுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் போலும்.
ஹிட்லரைக் கேள்வி கேட்கப் பயந்தவர்கள் கூடத்தான் தேச பக்தியைக் காரணம் காட்டி வாய் பொத்திப் பயந்து நின்றார்கள்.
சரி, அமெரிக்காவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?
சமீபத்திய 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அமெரிக்க தேசத்தின் வரைபடத்தைப் போட்டு அதன் நடுவே, 'யு. எஸ். இமிக்ரேஷன்' என்று எழுதிப் பெரிய பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். அதாவது, பல ஆண்டுகளாக 'வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நல்லரசாக' இருந்த அமெரிக்காவின் மனப்போக்கு தற்போது அடியோடு மாறி
விட்டிருப்பதைக் கேலியாக ஒரு அமெரிக்கக் கார்ட்டூனிஸ்ட் கிண்டல் பண்ணியிருந்தார். செப். 11, 2001 நிகழ்வுகள் மகா பயங்கரம் தான், கண்டிக்கப்படவேண்டியவை தான். ஆனால் அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டு விட்டிருக்கும் பிற்போக்கு விளைவுகளையே அந்தக் கருத்துப்படம் சுட்டிக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.
சற்றேறக் குறைய ஒரு நூற்றாண்டாகவே உலகின் பலப்பல பாகங்களிலிருந்தும் பல்வேறு நிற, இன, மத, மொழி, கலாச்சார மக்கள் வந்து குடியேறி, எந்த விதமான பேதமுமில்லாமல், பல்வேறு துறைகளிலும் தனித்துவம் காட்டிச் சிறந்து, இந்த தேசத்தை ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றியிருப்பதே அமெரிக்காவின் அடிப்படை பலம். அதற்கே பூட்டுப் போட்டால் அமெரிக்காவின் அடிப்படை நலனுக்கே வேட்டாகி விடாதோ?
முழுமையான கருத்துச் சுதந்திரமும், மத சுதந்திரமும், தனியரு மனிதன் எவனுமே தன் உழைப்பையும் படிப்பையும் மட்டுமே நம்பி முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகள் பலவும் நிறைந்த வளமான பூமி தான் அமெரிக்கா. இதையெல்லாம் பின்னோக்கித் தள்ள, அடிப்படை உரிமைகளையும், பெருமைகளையும் மாற்ற முயற்சிப்பதா?
காட்டான்களின் காட்டு தர்பாராக அமெரிக்கா மாறி விடுமோ?
எம் போன்ற சாமான்னியர்களுக்கு இதெல்லாம் கலவரம் நிரம்பிய கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.
அதிபர் புஷ் ஒரு யுத்தவெறியர், ஆயுத வியாபாரிகளின் கைப்பாவை என்பது தெரிந்ததே. 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்வது' அந்த காலத்துப் பழமொழி. 'அணுகுண்டு அதிரடிப் பொய்களைச் சொல்லியாவது அடுத்தவன் ஆயிலை லபக்குவது' புஷ்ஷின் புதுமொழி. சர்வதேச அரங்கில் தனக்குத் தொடர்ந்து ஜால்ரா போடும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதி
ல்லை என்பது தெரிந்த விஷயம் தான். 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன, முக்காலே அரைக்கால் கால் தான்' என்று அவர் தொடர்ந்து முரண்டு பிடிப்பது தொடரும். அதிபர் சதாம் ஹ¤சேன் தன் பாத்ரூமில் பல கோடி அணுகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது பற்றித் தனக்கு முன்பே தெரிந்திருந்ததால் தான் ஈராக் மீது தான் படையெடுத்ததாக அவர் விடப்போகும் தொடர் சரடுகளும் தொடரும். என்ன செய்வது? நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் தானே பைத்தியக்காரன்? புஷ்ஷுக்குத்தான் பட்டுக் குஞ்சலமும் கட்டிப் பதவியிலும் வைத்து அழகு பார்க்கிறார்களே? 'அடடே, நாம் செய்வதில் ஏதாவது கொஞ்சம் தப்பு இருக்கிறதோ?' என்கிற சின்ன மனத் தடுமாற்றம் கூட அவருக்கு இனி இருக்காது. சுத்தம்.
வாழ்க பணநாயகம்!
சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நாடுகள் பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் சுற்றுப்புறச்சூழல், சுகாதார, மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அவர் வெறும் கெமிக்கல் வியாபார முதலைகளின் சுயலாபத்துக்காக ஏற்கனவே காற்றிலே பறக்கவிட்டவர் ஆயிற்றே. இனிமேல் அது பற்றி எல்லாம் யாரும் கேள்விகள் கேட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
எதையாவது ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி ஈரான் மீதும் நாம் பாயலாமா என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே கலந்தாலோசித்துத்தான் வருகின்றன. 'கருப்புத் தங்க'த்தைக் கவர்வதும், பல விதமான ராணுவக் காரணங்களுக்காகப் பூகோள ரீதியில் தங்களை அதிமுக்கியமான அந்த ஏரியாவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் தொடரும். 'அயத்தொல்லா அணுகுண்டுகள் பல பண்ணித் தலைப்பாகைக்குள் ரகசியமாகச் செருகி வைத்திருக்கிறார்' என்ற ரீதியில் புஷ் புது ரீல்கள் விடலாம்.
அமெரிக்கா மட்டும் தொடர்ந்து அணு ஆயுதப் பேரழிவு ஆயுதங்களைச் செய்யலாமா என்று கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு போட்டுப் பேரழிவு செய்தவர்கள் மற்ற நாடுகளின் அணு ஆயுத விஸ்தரிப்பு பற்றிக் கவலைப்படும்போது எங்கேயோ இடிக்கிறதே!
உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அதிபர் புஷ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவருக்கு மாதா மாதம் சம்பளம் உறுதியான பிறகு நாட்டில் யாரைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?
அவசர மருத்துவ உதவிகள் கூடச் சரியாகக் கிடைக்காமல் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வரும் அவல நிலை அமெரிக்காவில் நீடிக்கும். அரசு உதவிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டு நாடெங்கும் பல கல்விச்சாலைகள், நூல நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதுவும் தொடரும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களில் சென்ற வருடம் விற்ற விலையை விட பெட்ரோல் இரண்டு மடங்கைத் தாண்டி விட்டது. அது இன்னமும் உயரும். கடந்த மூன்றே மூன்று மாதங்களில் எக்ஸான் போன்ற பெரிய ஆயில் கம்பெனிகள் பில்லியன் கணக்கில் அசுர லாபம் ஈட்டியிருக்கின்றன. அது இன்னமும் அதிகரிக்கலாம்.
எம்போன்ற புலம் பெயர் என்ஆர்ஐத் தமிழர்கள் இனி இங்கே என்ன செய்யலாம்?
'நடப்பது நடக்கட்டும், நமக்கெதற்கு வம்பு?' என்று வாய் மூடி, மௌனமாக, ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு, அவ்வப்போது கொஞ்சம் சன் டீவி அல்லது பேஸ்பால் என்று இருக்கலாமா?
'நடப்பதெல்லாம் நாரணன் செயல். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று வேதாந்தம் பேசலாமா?
அல்லது, "புஷ்ஷாய நமஹ, செய்னிக்கு ஜெய்" என்று புது ராகத்தில் ஜால்ரா போட ஆரம்பிக்கலாமா?
புத்தனாம்பட்டி பக்கமாக ஏதாவது கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு ஊருக்கே போய் விடலாமா?
தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.
ஊஹ¤ம். அவள் வரமாட்டாள். அங்கே தான் இடிக்கிறது!
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Subscribe to:
Posts (Atom)