என்னைப் பற்றி ...

கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ராமராயர் -அல்லாருமே இங்ஙன எள்தி ராவா கூத்தடிக்றது உனுக்கு குன்ஸா தெர்யாதாங்காட்டியும்!
View my complete profile

வாங்கப்பு!

வாங்க தல, வாங்க தாயி! மேலுக்கு சொகமா கீறியளா? எம்புட்டு நேரமா முட்டக் கண்ணு கொட்டக் கொட்ட முளிச்சு, "இன்னாடா, அவிக இன்னுமா வாரலை?”னு ரோட்டு வாசலையே பாத்துக்குனு கவலியா, கலீஜா நிக்கறன்? வந்தாச்சில்ல? அப்டியே சித்த குந்தறது. பெர்ய பெர்ய எல்க்கிய அண்ணாச்சிங்கள்லாம் இங்ஙன வந்த்ருக்காக. வாராக, எளுதறாக. நீரு மோரு, ஐசு ஜோடா, சல்பேட்டா எதுனா எடுத்தாற சொல்லட்டா? ஒரு மொடா குட்சிட்டு, ஒக்காந்து படி ராசா!


Friday, February 29, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: "இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".

'என்னால் முடிந்த அளவுக்கு, சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல், பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

நாளை, ஞாயிறன்று நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம், சென்னை நாரத கான சபாவில் நடக்க இருப்பதாக என்னையும் அழைத்திருக்கிறார்கள்.

அது பற்றியும் எழுதுகிறேன்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

நீங்கள் என்னுடன் தொலைபேச இயலுமா? எனது செல்பேசி எண் 9884012948. மின்னஞ்சல் முகவரி:
raghtransint@gmail.com

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பிரிவின் துயரைக் கடைசிவரை தாங்கிக்கப்போவது குடும்பம்தான். அவர்களுக்கு நல்ல மனோதிடம் தரணுமுன்னு ஆண்டவனை வேண்டுகின்றேன்.

நன்றி ராம். விவரமான பதிவை எதிர்பார்க்கின்றோம்.

Anonymous said...

முகமூடி,

டோண்டு ராகவனுடன் பேசினீர்களா?

ராபின்ஹூட் மாயவரத்தான்.