என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, January 31, 2008

அமெரிக்க அரசியல் 2008 (2)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.

ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.

இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் ... வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, 'அப்பீட்' என்று சொல்லி அவர்களால் ஆட்டத்தை விட்டுச் 'சுருட்டிய வரை போதும்' என்று ஒரே ஓட்டமாக ஓடி விடவும் முடியாதல்லவா?

ஆட்சியை விட்டு விலகும் நாளன்று கூட ஈராக்கிலிருந்து மிலிட்டரியைத் திரும்பப் பெறுவதாக எந்த விதமான உத்தேசமும் இல்லை புஷ்ஷாசுரருக்கு. அது வரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டுமே!

"தேடிச் சோறு தினந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ..." அன்னார் வாழ்க்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், குடியரசுக் கட்சியின் திவால் நிலைமை புரிந்து, அதன் சார்பாகக் களத்திலிருந்த நியூயார்க் கவர்னர் ரூடி ஜூலியானி போட்டியிலிருந்து விலகி விட்டார். புத்திசாலி. மைக் ஹக்கபீ, மிட் ராம்னி -இருவருக்கும் கணிசமான சரிவுகள். அநேகமாக செனட்டர் மெக்கெய்னுக்கு அந்த சான்ஸ் அடிக்கலாம். புஷ்ஷை மாதிரியே சொதப்பல் ஆசாமியாக இருந்தாலும், யாரையாவது வேட்பாளராக ஒரு பிரம்மஹத்தியையாவது நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, எதிர்க் கட்சியில் என்ன நடக்கிறது?

ஜனநாயகக் கட்சியின் சார்பாக பாரக் ஒபாமாவா அல்லது ஹில்லரி கிளிண்டனா என்கிற முடிச்சு வருகின்ற செவ்வாயன்று (ஃபிப். 5, 2008) அவிழ்ந்து விடும். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சமாதான வெள்ளைப் புறாவா அல்லது 'பழைய குருடி கதவைத் திறடி' கேஸான கிளிண்டன் மாமியா?

லாஸ் ஏஞ்சல்ஸின் 'கோடக் அரங்க'த்தில் இன்றைய மாலை இவர்கள் இருவருக்கும் இடையேயான பேட்டிப் போட்டி நடந்து முடிந்தது.

டெலிவிஷனில் பிரமாதப்படுத்தினார்கள்.

சரி, பேட்டி எப்படி இருந்தது?

பியர்ஸ் ப்ராஸ்னனென்ன, ஸ்பீல்பர்கென்ன, லோக்கல் அரசியல் புள்ளிகளென்ன, ஹாலிவுட்டின் பிரபலங்கள் அரங்கத்தில் புடைசூழ நடந்தேறிய 1 1/2 மணி நேரப் போட்டியில், கடந்த சில வாரங்களில் இவர்களிடையே நடந்தேறிய சகதி வீச்சுகள் இல்லை. இரண்டு பேருமே இறுதிச் சுற்றில் இருப்பதால், ஜனநாயகக் கட்சிக்கு நாடெங்குமே தார்மீக ஆதரவு பெருகி இருப்பதால், 'நீங்க பிரசிடெண்டா வ்ந்தாக்கூட நானு வைஸ் பிரசிடெண்டா வாரத்துக்கு சான்ஸ் ரொம்ப அதிகம்' என்று இருவருமே உணர்ந்திருந்ததும் ஒரு பெரிய காரணம்.

"எட்டு வருஷமா நான் அந்தாத்திலே குப்பை கொட்டி இருக்கேனாக்கும. எல்லா பாத்ரூமும் எனக்கு அத்துபடியாக்கும்" என்கிற பெருமை அம்மாவின் பேச்சில் எதிரொலித்தாலும், ஹில்லரிக்கு சாதனைகள் ஏதுமில்லை. 'ஈராக் போரை முதலில் ஆதரித்தவர்' என்கிற முத்திரையை அவரால் அழிக்கவே முடியாது. "அப்பால புஷ்ஷு மாமா தான் அழிச்சாட்டியம் பண்ணிட்டாரு, நானு என்னத்தச் சொல்ல" என்கிற ஒப்பாரி படித்த அமெரிக்கர்களிடன் செல்லுபடி ஆகாது. அதற்காக அமெரிக்கர்களிடம், ஈராக்கியரிடம், அகில உலகிடம், ஹில்லரி மன்னிப்பு கேட்கக்கூடத் த்யாரில்லை என்பது வேதனை.

எப்படிப்பட அநியாயப் போர்? 4000 அமெரிக்கர்கள் செத்துப் போனார்களாம். 40000 பேர்கள் முடமாம். பத்து லட்சம் ஈராக்கியரை அழித்து விட்டதாக அமெர்க்காவே ஒப்புக் கொள்கிறது. படிக்கும்போதே நெஞ்சு பதறவில்லை?

அதற்கு மாறாக, "ஆரம்பத்தில் இருந்தே இந்த ஈராக் யுத்தம் தப்பானது. இது அழிவை நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்லும. நான் இதை ஆதரிக்க முடியாது்" என்று விபீடணனாய் கம்பீராமாக முழங்கிய பாரக் ஒபாமாவை கென்னடியின் மொத்தக் குடும்பமும் சென்ற வாரம் ஆதரித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி.

இந்தப் போட்டியின் அடிநாதம் தான் என்ன?

மிஸஸ். கிளிண்டன் ஒரு வெள்ளைக்காரி. பாரக் ஒபாமா கறுப்பர் இனத்தவர்.

இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை. அவர்க்ளால் அதை நினைத்துப் பார்க்கவும் முடிந்ததில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணினாலும் அமெரிக்கர்களால் நிறவெறி இல்லாமல் இருக்க முடிந்ததில்லை.

ஆனால் உலகம் மாறி வருகிறது. அமெரிக்காவும் கொஞ்சம் மாறி இருக்கிறது. அமெரிக்க இளம் சந்ததியினர் இது குறித்து- இந்த அநியாயப் போர் குறித்து- மிகவும் வருந்துகிறார்கள்.

இரண்டில், ஏதோ ஒன்று இப்போது நடந்தே தீரும்.

நடப்பது நல்லதாக இருக்கட்டும்!

"ஒபாமாவின் வழிமுறைகளில் நான் பழைய ஜான் கென்னடியைக் காண்கிறேன்" என்று கென்னடி வம்சாவளியினர் சென்ற வாரம் சொன்னதை மறந்து விடாதீர்கள்..

வருகின்ற செவ்வாயன்று செனட்டர் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அபேட்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கென்னடியின் ஆத்மா சாந்தி பெறும்.

அமெரிக்காவுக்கும், அகில உலகுக்கும் நல்லது நடக்கும்.

நடக்குமா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

8 comments:

Anonymous said...

//இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை//
ஆப்ரகாம் லிங்கன்? :)

Anandha Loganathan said...

ஒரு 20 வருடம் 2 குடும்பம் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கிறது. அம்மா வந்தால் அவங்க ஒரு 2 term , சும்மா அடுத்த 8 வருடம் ரூல் பண்ணுவார்கள். அப்போ 30 வருடம் அமெரிக்க வரலாற்றில் 2 குடும்பம் மட்டுமே ஆட்சி செய்த பெருமை பெருவார்கள். அதுக்கேல்லாம் நாம் தான் முன்னோடி.

Anonymous said...

இவர்கள் இருவரில் (ஒபாமா / கிளிண்டன்) யார் வந்தால் இலங்கை பிரச்சினை பற்றிய தெளிவானதொரு பார்வை அமெரிக்காவுக்கு வரும் ?? ஹிலாரி இலங்கைபிரச்சினை பற்றி ஏதோ பேசியதாக தகவல் உள்ளதே ? அது என்ன ?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அநாநியாருக்குப் புரிந்த அமெரிக்க அரசியல் அவ்வளவு தான் போலும்!

அன்புள்ள ஆனந்தா லோகநாதன், நீங்கள் சொல்வது புரிகிறது! அமெரிக்காவுக்காவது விடிவு காலம் பிறந்து விடும் போலிருக்கிறது. நமக்குத்தான் ...ஹும்ம்!

அன்புள்ள செந்தழல் ரவி, கடந்த மாதம் ஒரு நேர்காணலின் போது, "LTTE சார்ந்த அனைவருமே தீவிரவாதிகள் அல்ல, சுதந்திரப் போராட்ட வீரர்களும் அதில் உண்டு" என்று சொன்னதாக நானும் படித்தேன். அது சொல்லப்பட்ட இடம், பொருள் எல்லாவற்றையும் ஆழ்ந்து நோக்கும்போது, அது ஒரு அரசியல் கொள்கைப் பிரகடனமா அல்லது சும்மனாச்சிக்கும் சொல்லப்பட்ட டகால்டியா என்பது எனக்கு சரியாகப் பிடிபடவில்லை.

தங்ஸ் said...

ஒபாமா வந்தா நல்லாருக்கும். நான் இப்போ டாலஸ்-ல இருக்கேன்..டெமாக்ரடிக்-னு வாயத்திறக்கவே பயமா இருக்கு..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க தங்ஸ்!

"நாட்டு நல் மக்கள் வாயைத் திறக்கவே பயப்படும் விதமாக இங்கே காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் ஆட்சி நடத்துகிறார்கள். மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லவே அஞ்சும் அளவுக்கு இங்கே மிருகத்தனமான வன்முறை தலை தூக்கி நிற்கிறது"

நான் இன்னமும் அமெரிக்க அரசியல் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!

Anonymous said...

அமெரிக்க அரசியல் ஃபார் டம்மீஸ் அப்படினு ஒரு பதிவு போடு தல. இந்த பிரைமரின்னா என்ன, டெலிகேட்ஸ்னா என்ன, இப்ப ஓட்டு போடுறவங்க மக்களா இல்லை கட்சி ஆட்களா (வட்டம், மாவட்டம், மா.செ . ஒன்றிய.செ ...) அப்ப நவம்பர் 20ஆம் தேதி யாரு ஓட்டு போடுவாங்க? விக்கிபீடியாவில் படித்தாலும் அமெரிக்க தேர்தல் முறை சரியாகப் புரியவில்லை. கொஞ்சம் கோனார் நோட்ஸ் ப்ளீஸ்

Alex Pandian

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அலெக்ஸ்,

அட்த பொய்தகத்துக்கு தலப்பு கொட்துட்டபா. படா தாங்க்சு.

அம்ரிகன் எலிக்சன்னா இன்னான்னு அம்ரிகாகாரனுக்கே கத்து குட்கதாவலை?

ப்ட்டயக் கெளப்டுவம்.

மெய்லாபுர் கபாலி