என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, February 14, 2005

திருமதிப்பாச்சி -2

அல்லார்க்கும் கும்பிடுபா. ப்ரொடக்சன்ல பிஸியா கீறன் மச்சி. 'கதை இன்னா, காமெடி ஆரு, கம்லா காமேசு அம்மாவா நடிக்குதாமே'ன்னு கேள்விங்க கேட்டு, செல்லுல புட்சி, ஒரே பேஜாருமா.

கொஞ்சம் வெயிட் பிளீஸ். படங் காட்டுறதே உனுக்குத்தானே நண்பா. நிவீஸ் ரிலிஸ் குடுன்னு நீயே இப்பிடிப் பெராண்டினியின்னா நா இன்னா செய்வன்?

கதை விசனம் பாகவதரு, பாடல்ங்கள் பொலவரு, இஸ்டண்டு பீட்டரு...அவளவ்தான்பா இப்போதிக்கு ஸொல்ல முடியும்.

ஷாட்டு ரெடியாம், வர்ட்டா?

Friday, February 04, 2005

திருமதிப்பாச்சி -1

கடலூர் தைலாபுரத்தில் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்களின் வீடு சாதாரணமாகவே தொண்டர்கள், குண்டர்கள், மரம்வெட்டிகள், காடுவெட்டிகள், கரைவேட்டிகள் என்று பரபரப்பாக இருக்கும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே அங்கே பரபரப்பு தென்பட்டது.

'சர்'ரென்று சீறி வந்த காரிலிருந்து திருமாவளவன் இறங்கினார். 'வாழ்க சிறுத்தை அடக்கிய மறத் ...' என்று ஏதோ வாழ்த்த ஆரம்பித்த நாலு பேரையும் பார்த்துச் சீறினார்.

"அடப் போங்கய்யா அப்பால. ஏற்கனியே அந்த அம்மா ஆப்பு மேல ஆப்பா வெக்குது. இவுனுங்க வாழ்த்த வந்துட்டானுங்க."

தடுப்பதற்கு வேட்டி இல்லாததால், பேண்டணிந்த திருமா பரபரவென்று படியேறினார்.

கட்சி ஆஃபீசின் முன் அறையில் ராமதாஸ் கவலையோடு அமர்ந்திருந்தார்.

"வாங்க திருமா. சொல்லி அனுப்பின உடனேயே வந்துட்டீங்க. மேட்டர் சீரியஸ்தான்"

"புரியுதுங்க. அந்த விருமாண்டியாச்சியும் கொஞ்சம் பயந்த ஆளு. 'பாபா' படப் பொட்டிங்கள நாம புடுங்கித் தீவுளி கொண்டாடின மாதிரி ஏதாச்சியும் ஏடாகூடமாச் செஞ்சுடுவம்னு அவருக்குக் கொஞ்சமாச்சியும் பயம் இருந்துது. நாமளும், 'என்னய்யா டைட்டில் வைக்கற? 'மும்பை' தமிளா, இல்லை 'எக்ஸ்பிரஸ்' டமிலாய்யான்னு அவரைக் கலாய்ச்சிகினு ஜாலியா தொழில் பண்ணிகினிருந்தம். இந்த அம்மா இதுல திடீர்னு தலையிட்டு, "யோவ்! ஒயுங்க மொறயா மொதல்ல சன் டீவி, ஸ்டாலின் அல்லாப் பேரையும் மாத்திச் சீர் திருத்தம் பண்ணிட்டு அப்புறமா இங்க வாங்கய்யான்னு கொம்பு சீவி விடுது. டேய் தம்பி, அந்த ஜாக் ஃப்ரூட் ப்ளேட்டை இப்டித் தள்ளுடா. உங்க பேரே வடமொழிப் பேராம், அதை இராமநேசன்னு மொதல்ல மாத்தற வழியப் பாருங்கங்குது பாருங்க, டமாசு"

பாதிப் பலாச் சுளையை வாயில் போட்டிருந்த டாக்டருக்கு அடி நாக்கே கசந்தது. "சமயம் பார்த்து இந்த ஆள் நம்ம பேரு, ஊரு, அட்ரஸு எல்லாத்தையுமே மாத்திடப் பாக்கறாம் பார்ரா" என்று கொதித்தார். அடுத்த சீட் அலாட்மெண்டில் இதை மறக்கக் கூடாதென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"அத விட்டுத் தள்ளுங்க, திருமா. தங்காச்சி அப்படித்தான் எதுனா சொல்லினு கெடக்கும். நாம தான் அண்ணன்காரனா லட்சணமா அத்தையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பேரு மாத்தறதெல்லாம் அபத்தம்ங்க. உங்க ஒரிஜினல் பேரைச் சொன்னா இப்ப உங்க வூட்லயே கூட யாருக்கும் தெரியாது. நானு உங்கள அவசர அவசரமா எமர்ஜென்சி செஷனுக்குக் கூப்பிட்டதே இந்தத் 'திருமதிப்பாச்சி' மேட்டராங்க."

"அய்யா, அதை நானும் கேள்விப்பட்டேனுங்க. நாடே அமளிதொமளிப்படுது. இந்தப் படம் ரிலீசானப்புறம் அந்த விஜய்ப் பையன் நேரா ஹாலிவுட்டு தான்னு பேசிக்கறாங்க. 'ஒரே ஒரு ரோல் தரேன்னு சொல்லுங்க, இந்தச் சந்திரமுகியையும் ஜக்குபாய் ஆக்கிப்புடறேன்னு ஹைதராபாத்லேருந்து ரஜினி தவிக்கிறாராம். இன்னா கதை, யாரு மியூசிக்கு ஒண்ணுமே புரியலை. அஞ்சு ஹீரோயினாம். விஜய்-த்ரிஷாவோட 'மாமி மாமி, நீதான் என் சுனாமி, இப்பயே இங்கயே காமி காமி'ன்னு ஒரு கெட்டபாட்டு டூயட்டு இருக்குதாம்."

டாக்டர் ஏகக் கடுப்பில் இருந்தார். "நீங்க பேசறதப் பார்த்தா படத்துல ஒரு ஏரியாவாச்சியும் வாங்காம விட மாட்டீங்க போலத் தெரியுது. யாரு ம்யூசிக் போட்டா நமக்கு என்னாங்க? டைட்டில் மொதல்ல தமிழா இல்லியான்னு ஒரு எழவும் புரியலை. அதை டிஸ்கஸ் பண்ண உங்களைக் கூப்பிட்டா, நீங்க படபுராணம் பாடுறீங்க"

திருமா சுதாரித்துக் கொண்டார்.

"மன்னிச்சுக்குங்க டாக்டர். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கையோட ஏழெட்டு தமிழ்ப் புலவர்களையும் புடிச்சிட்டு வந்திருக்கேனில்ல, யோவ் டிரைவர், எங்கய்யா அந்தாளுங்க எல்லாம்?"

சிங்கிள் டீயை மரத்தடியில் சீப்பியிருந்த நாலைந்து பேர் அலறியடித்து ஓடி வந்தார்கள்.

"இவிங்க அல்லாருமே தமிழ் மீடியத்துலயே முதுகலை, மூத்தகலையெல்லாம் முடிச்சி இப்ப வேலையில்லாம மொடங்கிக் கெடக்கறவங்க தான். தாராளமா நீங்களே கேளுங்க"

டாக்டர் பலாக் கொட்டையைத் 'தூ' என்று துப்பினார்.

"ஏன்யா, இன்னாய்யா டைட்டில் வெக்கறான் அந்த பாத்ரூம் பாகவதர்? 'திருமதிப்பாச்சி'ன்னா என்னய்யா அருத்தம்?"

ஒடிசலாக ஓரமாக நின்றிருந்த தமிழ் மூதறிஞர் தொண்டைகொண்டான், தைரியம் வருவதற்காகக் கொஞ்சம் செருமிக் கொண்டார்:

"அய்யா, ஞானறிந்த தமிழ் மொழியில் இதுகாறும் அஃதோர் சொற்பிரயோகங் குறித்துச் செப்பேடுகளில் சுரண்டியாய்ந்து குறிப்பெடுக்குங்கால் மரபில் வழுக்குறித்து மாணாக்கர் தம் சுவடியில் எழுத்தாணி கொண்டிலக்கியம் பகர்ந்தாற்போலே அன்றில்..."

"இந்தாள யாருய்யா உள்ளார விட்டது?" என்றார் மருத்துவர். அவருக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இந்த டைட்டில் என்ன லாங்குவேஜ்னு கேட்டாக்க, இந்த ஆளு எந்த லாங்குவேஜுலயோ பேசி என் பிராணனை வாங்கறான்யா. என்னங்க திருமா, இந்தாளை எங்க புடிச்சீங்க?"

திருமா தன் டிரைவரை முறைத்தார். ஹோல்சேலாக நாலைந்து பேரை ஓட்டுநர் காண்டிராக்டாக ஓட்டி வந்தபோதே அவர் கொஞ்சம் சந்தேகித்திருந்தார். "இரு, இரு, உன்னை அப்புறமா வெச்சிக்கறன்" என்று அவரும் பல்லைக் கடித்தார். அவருடைய டிரைவர் அவசரமாகத் தும்மியபடியே டிக்கிக்குப் பின்புறம் பம்மினார்.

"யாராச்சியும் ஒருத்தர் சொல்லுங்கய்யா, போதும். அந்தட் டைட்டில் தமிழ் தானா?"

'தம் சொந்த இன்ப உற்சாகபான வாசனை பிறற்கெதற்கு?' என்று அடக்கமாகக் கொஞ்சம் வாய் பொத்தி 'மப்'பில் இருந்த தமிழினிப்பேரிடி தரணிக்கொண்டானால் இனியும் வாய் பொத்தி வாளாவிருக்க முடியவில்லை.

"பாத்ரூம்ங்கறது தமிழ் இல்லிங்க. பாகவதர்ங்கறதும் வடமொழிதாங்க. 'குளியலறைக் கதைசொல்லி'ன்னு வேணும்னா அதைத் தமிழாக்கம் பண்ணலாம். அவரு அய்ருங்கரதுனால எப்டி வேணும்னாலும் யாரு வேணும்னாலும் திட்டலாங்க. அவரு தொடச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அம்மா தலையிடாத வரைக்கும் பிரச்னை இல்லிங்க. பேருல பாத்ரூமுங்கறதுனால இந்தத் திரிசாப் பொண்ணு ..."

"அந்த ஆளை அப்டியே தூக்கிட்டுப் போயி தேவனாம்பட்டிணம் சுனாமிப் பள்ளத்துல தள்ளுய்யா' என்று திருமா கர்ஜித்தார்.

"இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவறதாத் தெரியலிங்க தலைவரே. பத்திரிககைக்காரனுங்க வேற எதுனா அறிக்கை கொடுங்கன்னு மொய்க்கறானுங்க. நானே ஒண்ணு எழுதிட்டு வந்துட்டேன். அதை நீங்க வழக்கமா படிக்கறா மாதிரி மெதுவாப் படிச்சி முடிச்சிடுங்க"

வேண்டாவெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த மருத்துவர், "அந்த ரிப்போர்ட்டருங்களை உள்ளார வரச் சொல்லுய்யா" என்றார். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். எரிச்சலுடன் படிக்க ஆரம்பித்தார்.

"தமிழ் சினிமாப் படத் தலைப்புகளைத் தனித் தமிழில் மட்டுமே வைத்திடுதல் வேண்டுமென்று நானும் தம்பி இளஞ்சிறுத்தை, வீரச் சிங்கம் திருமாவும் தனித்தோர் போராட்டம் நடத்தித் தரணியெங்கும் வெற்றி முரசு கொட்டி வருவதைத் தமிழகமே அறியும்." போறும்ங்க, திருமா மீதிய நீங்களே படிச்சிடுங்க. எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது.

மானசீகமான அடுத்த தேர்தல் சீட் அலாட்மெண்டில் கொடுக்கப்போகும் ஒரு சீட்டில் திருமா பாதி சீட்டை அக்கணமே இழந்திருந்தார்.

அது தெரியாத திருமா தொடர்ந்தார்: "திருமதியென்பது தமிழென்பதைச் சிங்களவர் அறிவர். சிங்கப்பூராரும் அறிவர். எமக்கோ, என் கூடத் தோள் கொடுக்க வந்திருக்கும் மருத்துவர் இராமநேசருக்கோ அதில் பிரச்னை இல்லை. ஆனால் அத்தலைப்பின் அடுத்த பாதியில் இருக்கிறது கயவர்களின் சூக்குமம். பச்சைத் தமிழனின் கொடி பாரெங்கும் பரவித் தழைத்து இலெமூரியாக் கண்டத்தை அவன் அடக்கி ஆண்டு வந்தான் ஒரு காலம். குள்ள நரியாம் வடதேச ஆரியர் அங்கே படையெடுத்து வந்து இலெமூரியாவையே அழித்தொழித்தபோது, அவர்கள் தமக்குள்ளே சைகையில் பேசிய மொழியாம் குன்சு. அந்தக் குன்சு மொழியைத் திரும்பவும் வழக்கில் கொண்டு வந்து தமிழினத்தையே வேறோடு அறுத்துப்போட இந்நாள் ஆரியர் செய்யும் தந்திரமே இது என்பதில் எமக்கோ, எங்கள் தானைத் தலைவர்கள் எவருக்குமோ ஐயம் சிறிதுமில்லை. இதை வன்மையாகக் கண்டித்துப் பல போராட்டங்களை எங்கள் கூட்டணித் தலைவர்கள் விரைவில் சென்னையில் வெளியிட இருக்கிறார்கள். வணக்கம், வாழ்க தமிழ், ஒழிக குன்சு."

திருமா அறிக்கையைப் படித்து முடிக்குமுன்னரே அறிவாலயத்திலிருந்தும் டெல்லியிலிருந்தும் பறந்து வந்திருந்த டெலிபோன் கோபக் கணைகளுக்கு மருத்துவர் பதறியபடியே பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

(எடுப்போம்)






Thursday, February 03, 2005

புச்சா எதுனாச்சியும் செய்யி ராசா!

மந்தவெளி எட்டாம் நம்பர் கடை (மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஒயின்ஸ்) வாசலை ஒட்டிய மண் மேட்டில் சிஷ்யகேடிகளான பீட்டர், மன்னார், முனுசாமி, தமிழ்ப்புலவர் ஆதிமந்தி சகிதம் மெய்லாப்பூர் கபாலி கொலு வீற்றிருந்தான். மன்னிக்கவும். வீற்றிருக்கவில்லை.

குந்தி உட்கார்ந்தபடியே கூர் மழுங்கிய புழுக்கைப் பென்சிலால் போஸ்ட் கார்டு ஒன்றில் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான்.

அரைத் தூக்கத்தில் பொறைக் கனவு கண்டிருந்த சொறி நாய், மணி 'விலுக்'கென்று எழுந்து நின்றது. பாதி மடங்கிய இடது காதுடன் உத்தேசமான கிழக்கு நோக்கி சந்தேகாஸ்பதமாகக் குறைக்க ஆரம்பித்தது.

"முன்சாமி அண்ணாத்த, ஆரு வர்ரதுனு பாரு. தெர்தா, பாகவதரு" என்றான் பீட்டர்.

'சுள்'ளென்னு கிளம்பிக் கொண்டிருந்த சூரியனை அழுக்குப் பீச்சாங்கையால் மறைத்தபடி பீட்டர் காட்டிய திக்கில் பார்த்தான் முனுசாமி.

பாத்ரூம் பாகவதர் தான் வந்து கொண்டிருந்தார். பாரித்த சரீரத்தைச் சுமந்தபடி அறுபத்து மூவர் மாதிரிக் கொஞ்சம் ஆடி ஆடித் தான் ஒயின் ஷாப்பை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவர் ஆரோகணித்து வரும் ரிக்ஷ¡வைக் காணோம். இன்று நடராஜா சர்வீஸ் தான் போலிருக்கிறது.

"கச்சேரியெல்லாம் முடிஞ்சிச்சில்ல, காஜியெல்லாம் ஓஞ்சி போயி காலி பாட்டில்காரன் கிட்ட நேத்து சில்லுண்டி யாவாரம் பண்ணிக்கிட்டு, சில்லறைக்கு மாரடிச்சிட்டிருந்தாரு. எதுனா கை மாத்து கேக்க வாராருன்னு நெனிக்குறன்"

அருகில் நெருங்கி விட்ட பாகவதரிடம் திடீர் மரியாதை பீறிட, எழுந்த நின்றவர்களின் மடித்த கைலிகள் உதறி விடப்பட்டன.

"சலாம் சார். மோரு, ஜோடா எதுனா சாப்ட்றியா?"

"இல்லப்பா. இப்ப வேணாம். என்ன கபாலி, யார் கேட்டாலும் தான் அம்மா இப்பல்லாம் அள்ளிக் கொடுக்கறாளேன்னு நீயும் கோட்¨டக்கு ஒரு பெட்டிஷன் எழுதறியா?"

கபாலி பாத்ரூமை இப்போது தான் கவனித்தான். "வா சார் வா. நல்ல நேரத்துல தான் வந்துக்கிற. நம்ம எல்லே சாருக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டிருந்தன். படிக்குறன், கேக்குறியா?"

"எல்லேயா? அந்தாளு இப்பல்லாம் எழுதறாரா என்ன? ஏதோ படம் எடுக்கறேன்னு யார் பின்னாடியோ சுத்தறதாத்தானே நான் கேள்விப்பட்டேன்"

"சேச்சே. அப்பப்ப கொஞ்சம் பெனாயில் போட்டுக்குனு அது பெனாத்தினாலும், ஆளு தங்கம் சார். அதான் அன்பா நாலு தட்டு தட்டிக்குறன். தோ, படிக்குறம் பாரு"

கபாலி தொண்டையைச் செருமிக் கொண்டான்.

'யோவ் பிசாத்து எல்லே, எயுதினா ஆன லத்தி கணூக்கா மூட்ட மூட்டயா எய்திக்குனே கீற, அல்லாட்டிக் கவுந்தடிச்சிக் கொறட்டை வுட்டு மாசக் கணுக்குல தூங்கிக்கினே கீற, மவனே, உனுக்கு மன்சுல இன்னாதான் நெனிப்பு? இந்த அக்குருமத்தக் கேக்குறதுக்கு ஆருமே ஆளில்லேன்னு நென்சுக்கினியா? அம்மா கிட்ட இத்தப் போட்டுக் குடுத்தன்னா குண்டன்ஸ் ஆக்டுல வேலூர் கொசுக்கடி படுவ. அந்த சரசுவதியே வீணயக் கீழ எறக்கிட்டு வந்து நறுக்குன்னு ஒந் தலையில ஒண்ணு வெச்சாத்தான் எயுந்திருப்பியா?

'எய்ந்திரி ராசா', 'அட எந்திரி சார்', 'எல்லே இளங்கிளியே ப்ளீஸ் கெட்டப்பு'ன்னு மணியாட்டிப் பாத்துப் பாத்து ஜனமே அலுத்துப் பே¡ச்சு. சுறுசுறுப்பா எதுனாச்சியும் பயாஸ்கோப்பு காட்டத் தாவலை?

பாசமா எதுனாக் கேட்டாக்க 'ஜெயேந்திரர் மேட்டர், சுனாமி, சுனேகா கொயந்தைக்கு ஜலதோசம்'னு பீலா வுடுவ. அதெல்லாம் தப்பு ராசா. எய்துறவன் எய்திக்கிட்டே இர்க்கோணும், படிக்குறவன் படிச்சிக்கினே இர்க்கோணும்னு உனுக்குத் தெர்யாது?

இந்த 'ப்ளாக்சு'க்குனு ஒரு எலிக்கணம் இர்க்குது தெர்தா, தலிவா? சும்மா மொசமொசன்னு தெவச மந்திரமாட்டம் தெனிக்கும் எய்திக்குனே கெடக்கத் தாவலை. மூக்கரு மேறிக்கு அப்பப்ப ஒரு நாலு லைன் -சாட்டிங்க்ஸ்ல குட்டிங்களோட சதாய்க்குறியே அத்§தமேறித்தான்பா - எய்திப் போட்டாத்தான் உனுக்கும் மருவாதி, படிக்கறவனுக்கும் மருவாதி. ரசிகங்க பட்டாஸ¤ கொள்த்துவாங்கோ.

ரஜிகன், சொல்றத சொல்லிட்டன். அக்காங். மருவாதிய எதுனா எய்திப் போடு. அல்லாட்டி ரசிகங்க கொதிச்சி எய்ந்திருவம். பேஜார¡ய்டும்.

இப்டிக்கி,

கலக்கல் கபாலி,
தலிவர், எட்டாம் நிம்பர் கடை வசக வாட்டம்"

******** ********* *********


"இன்னா சார், நானு எய்திக்குறது சரியா?"

"பிரமாதம்டா கபாலி. நான் மனசுல நெனச்சேன். மரத்தடியிலேருந்து எழுதிப்டாய்"

"மரத்தடியிலேருந்து இல்ல சார். மண் மோட்ல இருந்து. மரத்தடி தான் மதியக்கா போனதுலேர்ந்து களையே இல்லாமக் கெடக்குதே. ஹ¤ம்ம்ம்."

"இன்னாது இது, புதுக் கரடி வுடற, அந்தம்மா அங்கன இல்லியா இப்ப? ரிஜைனா?" என்றான் பீட்டர், பதறிப் போய்.

புலவர் ஆதிமந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ஓய்வில்லை ..."

"பொலவரே, காலிலயே ஆரம்பிச்சிட்டியா, ஆ·ப் பண்ணுய்யா. மணி பயப்படுதில்ல?"

"நல்லவாளுக்கெல்லாம் காலம் இல்லைப்பா இப்ப. ஒண்ட வந்த பிடாரன்ஸ் ஊர்ப் பிடாரியத் தொறத்தறதெல்லாம் சகஜமான்னா போச்சு. ராகாகியில நடக்காத கூத்தா? 'சந்திரன்' இல்லைன்னா மானத்துக்குத்தான் அவமானம். மதியில்லைன்னா மரத்தடிக்குத்தான்

நஷ்டம். டென்ஷன் இல்லாம கொழந்தை இப்ப நிம்மதியா இருக்கும். அதை விடு. நான் வேற ஒரு காரியமா ஒங்கிட்ட வந்தேன்"

"இன்னா பண்ணணும் ஸொல்லு சார். அப்டியே குந்து. டேய் நாயர் கிட்ட ரெண்டு பெசல் டீ ஸொல்றா. பாகவதர் சாருக்கு சக்கரை §பாடாத. இன்னா சார் பண்ணலாம், அய்டியாவ அவுத்து வுடு"

********* ******** *********

பஞ்சகச்சத்தை நாசூக்காகத் தூக்கியபடி பாத்ரூம் பாகவதர் மண் மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்தார்.

ஒரு கணம் தன் நண்பர் குழாத்தைக் கண்ணால் அளந்தார். அன்பும் வாத்ஸல்யமும் மேலிட, தழதழத்த குரலில், "அம்பிகளா, நமக்¦கல்லாம் நல்ல நேரம் பொறந்துடுத்துடா. நாம படம் எடுக்கப் போறம்" என்றார்.

"இன்னா சார் ஸொன்ன, நாமள்லாம் சேர்ந்து படம் எடுக்கப் போறமா?" -ஒரே கோரஸாக அத்தனை பேரும் கேட்டார்கள். நாயர் மட்டும் "ஞானும் உண்டில்லா?" என்றார். மணி " லொள், லொள், லோள்" என்றது.

"ஆமாம்பா. விஜய் கால்ஷீட் கெடச்சுடுத்து. படத்துக்கு டைட்டில் கூட ரெடி பண்ணிட்டேன்."

"விஜய் கால்ஷீட்டா? ஆஹா, நாம அத்தினி பேரும் இனிமே கோடீஸ்வரனுங்க தான். படத்துக்கு இன்னா சார் டைட்டில்?"

"கலக்கலான படம். இதுவரை இது மாதிரி ரோல்லே விஜய் பண்ணினதே இல்லை. காதல், வீரம், காமெடி, பாசம் எல்லாமே கலந்த புத்தம் புதுக் கதை"

"அய்யோ, அய்யோ. எனுக்கு இப்பயே தாங்கலை சார். படத்துக்கு இன்னா டைட்டில், சீக்ரம் ஸொல்லு சார்"

"அக்கா ரேப்பு, தங்கச்சி நொண்டி, தாடித் தம்பியத் திருத்தறது, தாலி செண்டிமெண்ட், தோப்பனார் பாசம், தொப்புள் டான்ஸ் எல்லாமே உண்டு. இந்த ஊர்க் குட்டிகளே வேண்டாம்னு ஹாலிவுட்லேருந்து ஒரே ஒரு டான்சுக்கு ஜெனி·பர் லோபஸ் கொழந்தை வராள்"

நாயர் கடையில் தேநீர் அருந்தியிருந்த அன்பர்கள் முதல் லேடி மெய்யப்ப செட்டியார் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசலில் சாக்கடை நோண்டியிருந்த துன்பர்கள் வரை மைலாப்பூர், மந்தைவெளிப் பிராந்தியமே மூச்சு விட மறந்து, ஓடோடி வந்து, பாகவதர் வாயையே பார்த்து நின்றது.

சுனாமி பற்றியே எழுதிக் களைத்திருந்த நிருபர்கள் சுருட்டியடித்தோடி வந்து பாகவதர் முன் நின்றனர்.

"சார், உங்க படத்துக்கு டைட்டில் ப்ளீஸ்"

தான் எதிர்பார்த்த எ·பெக்ட் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பாத்ரூம் பாகவதர் ஒரு புன்னகை சிந்தினார். பொடி மட்டையை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.

யார் யாரோ அவரை போட்டோ எடுத்தார்கள்.

"திருமதிப்பாச்சி" என்றார் பாத்ரூம் பாகவதர்.


(எடுப்போம்)